மேலும் அறிய

மன்னார்குடியில் ருக்மணி குளத்தில் கற்கள் சரிந்து விழுந்த காட்சி வைரலாகிறது

1கோடியே 24 லட்சம் மதிப்பில் குளத்தின் நான்கு புறங்களிலும் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் தரமான முறையில் கற்கள் பதிக்கப்படுகிறதா என்பது குறித்து அரசுஅதிகாரிகள் உரிய ஆய்வு செய்யவேண்டும்.

மன்னார்குடியில் ருக்மணி குளத்தில் ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் குளத்தின் கரைகள் மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் ஒரு புறத்தில் கரையில் பதிக்கப்பட்டு இருந்த கற்கள் சரிந்து விழுந்தன.

தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் கலைஞர் நகர் பெற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் குளங்களின் கரைகள் செப்பனிடம் பணிகளுக்கு பல கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. குறிப்பாக டெல்டா மாவட்டங்கள் ஆன திருவாரூர், நாகப்பட்டினம், தஞ்சாவூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி, கூத்தாநல்லூர் உள்ளிட்ட நான்கு நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் உள்ள குளங்களின் கறைகளை சீரமைப்பதற்காக 10 கோடிக்கு மேல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அதற்கான பணிகள் என்பது நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ருக்மணி குளத்தில் ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் குளத்தின் கரைகள் மேம்படுத்தும் பணிகள் கடந்த பல நாட்களாக நடைபெற்ற ஒரு நிலையில் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுதே ஒரு புறத்தில் கரையில் பதிக்கப்பட்டிருந்த கற்கள் சரிந்து விபத்துக்குள்ளாய் இருப்பது அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது.


மன்னார்குடியில் ருக்மணி குளத்தில் கற்கள் சரிந்து விழுந்த காட்சி வைரலாகிறது

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் அண்ணாமலை நாதர் கோவில் குளம், செங்குளம், தாமரைக்குளம், ருக்மணி குளம் உள்ளிட்ட நான்கு குளங்களின் கரைகள் செப்பனிடும் பணிகள் நடைபெற்று வருகிறது. இதில் ருக்மணி குளக்கரையின் நான்கு புறமும் கரைகள் மேம்படுத்தப்பட்டு கற்கள் பதிக்கும் பணி நடைபெற்று வருகிது. கடந்த சில தினங்களாக மன்னார்குடி பகுதியில் பெய்த மழையால் ருக்மணி குளத்தின் கீழ்கரையில் பதிக்கப்பட்டு இருந்த சிமெண்ட் கற்கள் பெயர்ந்து சரிந்தன. 1 கோடியே 24 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் இப்பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் போதே பதிக்கப்பட்டு இருந்த சிமெண்ட் கற்கள் பெயர்ந்து விழுந்ததால் கட்டுமானப் பணிகள் குறித்து அதிகாரிகள் உரிய ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து மன்னார்குடி நகரமன்ற தலைவரிடம் கேட்ட போது கட்டுமான பணிகள் முடிவுறாத நிலையில் திடீரென பெய்த மழையால் கற்கள் சரிந்துள்ளது இது குறித்து அதிகாரிகளை கொண்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என நகர மன்ற தலைவர் தெரிவித்தார். குறிப்பாக கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் பொழுது ஒரு புறத்தில் கற்கள் சரிந்து விழுந்தது மிகுந்த கேள்வியை எழுப்பி உள்ளது தரமான முறையில் கற்கள் பதிக்கப்படுகிறதா என பொதுமக்கள் கேள்விகள் எழுப்பி உள்ளனர்.


மன்னார்குடியில் ருக்மணி குளத்தில் கற்கள் சரிந்து விழுந்த காட்சி வைரலாகிறது

ஒரு கோடியே 24 லட்சம் மதிப்பில் குளத்தின் நான்கு புறங்களிலும் கற்கள் பதிக்கும் பணிகள் நடைபெற்று வரும் நிலையில் அனைத்து பகுதிகளிலும் தரமான முறையில் கற்கள் பதிக்கப்படுகிறதா என்பது குறித்து அரசு அதிகாரிகள் உரிய ஆய்வு செய்ய வேண்டும் இதுகுறித்து சம்பந்தப்பட்ட ஒப்பந்தக்காரர் உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் பொதுமக்கள் வைத்துள்ளனர். உடனடியாக மாவட்ட ஆட்சியர் மாவட்ட முழுவதும் இதே போன்று குளங்களைச் சுற்றி பராமரிக்கும் பணிகள் பல கோடி மதிப்பில் நடைபெற்று வரும் நிலையில் பணிகளை முழுமையாக ஆய்வு செய்ய வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் இந்த ருக்மணி குளத்தில் கற்கள் பதிக்கும்பொழுது ஒருபுறத்தில் கற்கள் சரிந்து விழுந்த காட்சி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் 24-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் கண்டறிந்து பதிவு
தஞ்சாவூரில் 24-க்கும் மேற்பட்ட அரிய வகை பறவை இனங்கள் கண்டறிந்து பதிவு
கும்பகோணம் அருகே தம்பதிக்கு நேர்ந்த பயங்கர விபரீதம்: பெரும் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்
கும்பகோணம் அருகே தம்பதிக்கு நேர்ந்த பயங்கர விபரீதம்: பெரும் சோகத்தில் ஆழ்ந்த மக்கள்
இஸ்ரோவில் நிரந்தர வேலை... மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம்! என்ன ரெடியா நண்பாஸ்
இஸ்ரோவில் நிரந்தர வேலை... மாதம் ரூ.1.42 லட்சம் வரை சம்பளம்! என்ன ரெடியா நண்பாஸ்
இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு
இது பனை மரமா? இல்லை தூக்கணாங்குருவிகளின் நகரமா? கும்பகோணம் மக்களின் வியப்பு

வீடியோ

Tiruppur Crime News : 4 மாத கர்ப்பிணி.. மனைவியை கொன்ற கணவன்... திருப்பூரை உலுக்கிய கொடூரம்
Theni Theft Murder : பாட்டி கொலையில் மர்மம்.. நாடகமாடிய பேரன், பேத்தி! போலீஸ் அதிரடி கைது!
Trichy VAO: போதையில் சட்டையின்றி தூக்கம்.. அலுவலகத்தில் சிக்கிய VAO! வைரலாகும் வீடியோ
RS Bharathi vs Minister Ramesh :
Senthil Balaji : செந்தில் பாலாஜி தலைமறைவு.. ஆட்டத்தை ஆரம்பித்த CM விஜய்! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
Udhayanidhi Stalin: தவெகவுக்கு திமுக பயப்படாது.. தூசி மாதிரி தட்டுவோம்.. உதயநிதி ஸ்டாலின் விளாசல்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
ஊருக்கு ஒரு ஆபீஸ்.. பள்ளிக்கல்வித்துறையில் நடந்த முறைகேடு.. போட்டுடைத்த அமைச்சர் ராஜ்மோகன்!
Iran Vs Trump: 'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
'நீங்கள் கமெனியை கொன்றீர்கள், அவரது கொள்கைகளை அல்ல'; ட்ரம்ப்புக்கு சூடான பதிலடி கொடுத்த ஈரான்
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
திருப்பதியில் படியேறி சாமி தரிசனம் செய்த 116 வயது தமிழ்நாட்டு மூதாட்டி.. குவியும் வாழ்த்து!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
8வது சம்பள கமிஷன்: மத்திய அரசு ஊழியர்களுக்கு சம்பளம் உயர புதிய குடும்ப கணக்கீடு!
Renault Kwid New Vs Old: புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
புது லோகோ, குறைந்த விலை; 2026 ரெனால்ட் க்விட்டுக்கும், பழைய க்விட்டுக்கும் என்ன வித்தியாசம்.?
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
Vaiko: திமுகவுக்கு என்னை பேச தகுதியே இல்ல.. கொந்தளித்த வைகோ.. மிரண்ட மதிமுக தொண்டர்கள்!
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
தூத்துக்குடி மின்வெட்டு (07.07.2026): எந்த பகுதிகளில் எத்தனை மணி நேரம் மின்தடை?
Embed widget