மேலும் அறிய

திருவாரூரில் நள்ளிரவு முதல் கனமழை..... தற்போது மிதமான மழை..!

வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 தேர்தலுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இன்றும்  நாளையும் திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரண்டு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பாக திருவாரூர், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி,  குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை என்பது பெய்ய தொடங்கியது. அதிகபட்சமாக குடவாசலில் 47 மில்லி மீட்டர் மழை அளவும் மன்னார்குடியில் 45 மில்லி மீட்டர் மழை அளவும் திருவாரூரில் 40 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.குறைந்தபட்ச மழை அளவாக முத்துப்பேட்டையில் ஐந்து மில்லி மீட்டர் மழை என்பது பதிவாகியுள்ளது. 


திருவாரூரில்  நள்ளிரவு முதல் கனமழை..... தற்போது மிதமான மழை..!

தற்போது இந்த மழை என்பது மிதமான மழையாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கடந்த ஒரு வாரம் பெய்த கனமழையின் காரணமாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் 10,000 ஏக்கர் பரப்பளவில் விதைத்து 20 நாட்களாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்தது. அதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டிருந்த நிலையில் சம்பா மற்றும் தாலடி நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாய நிலங்களில் தேங்கியிருந்த மழை நீரை அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஜேசிபி எந்திரம் மண்வெட்டி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மீண்டும் தற்போது கனமழை என்பது தொடர்ந்து வருவதால் பாதிப்பு என்பது அதிகரிக்க கூடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.


திருவாரூரில்  நள்ளிரவு முதல் கனமழை..... தற்போது மிதமான மழை..!

அதுமட்டும் இன்றி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், “ஏற்கனவே குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து இருந்தால் அதனை வடிய வைப்பதற்கான நடவடிக்கை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது மிதமான மழை பெய்து வருவதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” தெரிவித்துள்ளார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget