மேலும் அறிய

திருவாரூரில் நள்ளிரவு முதல் கனமழை..... தற்போது மிதமான மழை..!

வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.

வளிமண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ள காரணத்தினால் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 10 தேர்தலுக்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக திருவாரூர் உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக இன்று வங்கக் கடலில் காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதால் இன்றும்  நாளையும் திருவாரூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று சென்னை மண்டல வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. அதன் அடிப்படையில் திருவாரூர் மாவட்டத்தில் நேற்று மாலை முதல் இரண்டு மேகங்கள் சூழ்ந்து காணப்பட்டு வந்த நிலையில் நள்ளிரவு முதல் திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு மாவட்ட பகுதிகளில் கனமழை கொட்டித் தீர்த்தது குறிப்பாக திருவாரூர், கூத்தாநல்லூர், கொரடாச்சேரி, நன்னிலம், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி,  குடவாசல் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று நள்ளிரவு முதல் கனமழை என்பது பெய்ய தொடங்கியது. அதிகபட்சமாக குடவாசலில் 47 மில்லி மீட்டர் மழை அளவும் மன்னார்குடியில் 45 மில்லி மீட்டர் மழை அளவும் திருவாரூரில் 40 மில்லி மீட்டர் மழை அளவும் பதிவாகியுள்ளது.குறைந்தபட்ச மழை அளவாக முத்துப்பேட்டையில் ஐந்து மில்லி மீட்டர் மழை என்பது பதிவாகியுள்ளது. 


திருவாரூரில் நள்ளிரவு முதல் கனமழை..... தற்போது மிதமான மழை..!

தற்போது இந்த மழை என்பது மிதமான மழையாக தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஏற்கனவே கடந்த ஒரு வாரம் பெய்த கனமழையின் காரணமாக ஒரு லட்சத்து 15 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் பயிரிடப்பட்டுள்ள தாளடி நெற்பயிர்கள் 10,000 ஏக்கர் பரப்பளவில் விதைத்து 20 நாட்களாக நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கி பாதிப்படைந்தது. அதனை அடுத்து கடந்த இரண்டு நாட்களாக மழை விட்டிருந்த நிலையில் சம்பா மற்றும் தாலடி நெல் சாகுபடி பணிகளில் ஈடுபட்டுள்ள விவசாய நிலங்களில் தேங்கியிருந்த மழை நீரை அந்தந்த பகுதியைச் சேர்ந்த விவசாயிகள் ஜேசிபி எந்திரம் மண்வெட்டி உள்ளிட்ட இயந்திரங்களைக் கொண்டு மழை நீரை வடிய வைக்கும் பணியில் ஈடுபட்டு வந்தனர். இந்த நிலையில் மீண்டும் தற்போது கனமழை என்பது தொடர்ந்து வருவதால் பாதிப்பு என்பது அதிகரிக்க கூடும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். உடனடியாக வேளாண் துறை மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பாதிக்கப்பட்ட இடங்களில் நேரடியாக சென்று ஆய்வு செய்து மழை நீரை வடிய வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்.


திருவாரூரில் நள்ளிரவு முதல் கனமழை..... தற்போது மிதமான மழை..!

அதுமட்டும் இன்றி பாதிக்கப்பட்ட விவசாய நிலங்களை கணக்கெடுப்பு செய்து விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்குவதற்கான நடவடிக்கையை மாவட்ட நிர்வாகம் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் மாவட்ட ஆட்சியருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். மேலும் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் காயத்ரி கிருஷ்ணன் இதுகுறித்து கூறுகையில், “ஏற்கனவே குறுவை அறுவடைக்கு தயாராக இருந்த நெல் பயிர்கள் குறித்து கணக்கெடுப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. தாழ்வான பகுதிகள் மற்றும் விவசாய நிலங்களில் மழைநீர் சூழ்ந்து இருந்தால் அதனை வடிய வைப்பதற்கான நடவடிக்கை அரசு அதிகாரிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் திருவாரூர் மாவட்டத்தில் தற்பொழுது மிதமான மழை பெய்து வருவதால் பெரிய அளவில் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை” தெரிவித்துள்ளார்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
தஞ்சையை பரபரப்பாக்கிய லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் நடத்திய அதிரடி ரெய்டு 
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
கேங்மேன் தொழிலாளர்களுக்கு பதவி உயர்வு எப்போது? தஞ்சையில் ஆர்ப்பாட்டம்
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
புதிய மருத்துவக் காப்பீட்டு திட்டம்... எதிர்ப்பு தெரிவிக்கும் ஓய்வூதியர்கள்: காரணம் என்ன?
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!
கையில் கரும்புடன் களம் இறங்கிய விவசாயிகள்! தஞ்சாவூர் குருங்குளம் சர்க்கரை ஆலை முன் எதிரொலித்த கோரிக்கைகள்!

வீடியோ

Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?
RSS to கல்வி அமைச்சர் மோடியின் நம்பிக்கை!யார் இந்த பிரகலாத் ஜோஷி?
வைத்திலிங்கம் ரூ.28 கோடி ஊழல்?
SHIFT ஆகும் CM விஜய் அலுவலகம்.. BEACH VIEW உடன் புதிய OFFICE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Minister Arunraj:
Minister Arunraj: "வரலாற்று துரோகத்தை மறைக்க வெற்று அறிக்கை.." மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர் அருண்ராஜ் பதில்!
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
MK Stalin: திமுக சீரமைப்பை தள்ளிப்போட்ட மு.க.ஸ்டாலின்! என்ன காரணம் தெரியுமா?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
Cauvery Water: தமிழ்நாட்டுக்கு தண்ணீர் தர முடியாது; கர்நாடக முதல்வர் அதிரடி, என்ன காரணம்?
US Iran Tensions: ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
ட்ரம்ப்பின் அறிவிப்பால் கொந்தளித்த ஈரான்.! ஹார்முஸில் 3 கப்பல்கள் வழிமறிப்பு; எகிறும் பதற்றம்
CM Vijay: முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
முதலில் Ex.அமைச்சர்கள்..! அடுத்து அதிகாரிகள், கட்டம் கட்டும் TVK அரசு? பட்ஜெட் முடிந்ததும் ஆக்‌ஷன்?
Tata Punch EV 5 star Rating: ‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
‘உங்க பாதுகாப்புக்கு நாங்க கேரண்டி.!‘ மோதல் சோதனையில் 5 ஸ்டார் ரேட்டிங்கை அள்ளிய டாடா பஞ்ச் EV
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 260 கி.மீட்டர் மைலேஜ்.. பட்டைய கிளப்பும் Avore EX2S இ பைக் - விலை எவ்ளோ?
TVS Raider 125: ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
ஒரு லிட்டருக்கு 60 கிமீ மைலேஜ்.! நீங்க ஆஃபீஸ் போறதுக்கு இது தான் பெஸ்ட் பைக்; TVS ரைடர் 125 விலை என்ன.?
Embed widget