மேலும் அறிய

வலங்கைமான் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் 2 மாடுகள் மர்மமான முறையில் உயிரிழப்பு

விளைநிலங்களில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட பயிர்களை தின்று மாடுகள் ஆடுகள் உயிரிழப்பதற்கு வாய்ப்பில்லை என விசாரணையில் தகவல்

வலங்கைமான் அருகே ஆதிச்சமங்கலம் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் மற்றும் 2 மாடுகள் மர்மமான முறையில் இறந்தது தொடர்பாக வழங்கைமான் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் அருகே ஆதிச்சமங்கலம் ஆதிதிராவிடர் தெரு பகுதியில் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். விவசாயக் கூலித் தொழிலாளர்களான இவர்கள் ஆடு,மாடு,கோழி உள்ளிட்டவைகளை வளர்த்து வருகின்றனர். இவர்கள் நேற்று வழக்கம்போல் ஆடு மாடுகளை சாலை ஓரங்கள் மற்றும் வாய்க்கால் ஓரங்களில் மேய்வதற்காக விட்டுள்ளனர். இந்த நிலையில் மேய்ச்சலுக்குச் சென்று ஆடுகள் சாலைகளில் வாயில் நுரை தள்ள மயங்கிக் கீழே விழுந்துள்ளது. அப்பகுதிகளை சேர்ந்த ராமையன், ஜானகி, மகேந்திரன், பாஸ்கர், மருதமுத்து ஆகியோரின் 10 ஆடுகள் ஒன்றன்பின் ஒன்றாக மயங்கி விழுந்து இறந்து உள்ளது.

வலங்கைமான் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் 2 மாடுகள்  மர்மமான முறையில் உயிரிழப்பு
 
மேலும் பாஸ்கர் என்பவரின் இரண்டு மாடுகள் வாயில் நுரை தள்ள மயங்கி விழுந்தது இதையடுத்து ஆபத்தான நிலையில் இருந்த மாட்டிற்கு சந்திரசேகரபுரம் கால்நடை மருத்துவமனை உதவி கால்நடை மருத்துவர்கள் சம்பவ இடத்திற்கு வந்து சிகிச்சை அளித்தார். இருப்பினும் சிகிச்சை பலனின்றி பசுமாடுகள் உயிரிழந்து போனது ஆடு மற்றும் மாடுகளின் மதிப்பு சுமார் ஒரு லட்சம் இருக்குமென கூறப்படுகிறது. விளைநிலங்களில் பூச்சி மருந்து தெளிக்கப்பட்ட பயிர்களை தின்று மாடுகள் ஆடுகள் உயிரிழப்பதற்கு வாய்ப்பில்லை, அதிக நச்சுத்தன்மை கொண்ட மருந்தினை வயல் ஓரங்களில் இருந்திருக்கலாம் என்றும் அவற்றை மேயும் போது ஆடு மாடுகள் உயிரிழந்துள்ளது என கூறப்படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டோர் வலங்கைமான் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் வலங்கைமான் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வலங்கைமான் பகுதியில் மேய்ச்சலுக்கு சென்ற 10 ஆடுகள் 2 மாடுகள்  மர்மமான முறையில் உயிரிழப்பு
 
கால்நடைகள் இறந்த சம்பவம் அப்பகுதியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையை அரசு வழங்க வேண்டும், ஆடு மாடுகள் கால்நடைகள் உயிரிழப்பு காரணமானவர்கள் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும், பாதிக்கப்பட்டோர் மாவட்ட நிர்வாகத்திற்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து கால்நடையை மருத்துவர்கள் ஆடு மாடுகள் இறந்த  இடத்திற்கு நேரடியாக சென்று ஆய்வு மேற்கொண்டனர் உயிரிழந்த ஆடு மற்றும் மாடுகளை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு உத்தரவிட்டுள்ளனர். மேலும் பாதிக்கப்பட்ட விவசாய கூலித் தொழிலாளர்களின் குடும்பத்திற்கு பிரேத பரிசோதனை முடிவு வந்த பிறகு உரிய இழப்பீடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் வலங்கைமான் வட்டாட்சியர் விவசாயக் கூலித் தொழிலாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

AKS Vijayan House Theft | திமுக பிரமுகர் வீட்டில்300 சவரன் கொள்ளை?தஞ்சையில் பரபரப்பு | Tanjore
சென்னையை வேட்டையாடும் மழை எங்கு கரையை கடக்க போகிறது? இடத்தை தேர்வு செய்த டிட்வா | Chennai Ditwah Cyclone
TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
TN School Leave: கனமழை எச்சரிக்கை.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை, சென்னை நிலவரம்? தமிழக வானிலை அறிக்கை
OPS Delhi Visit: ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
ஓபிஎஸ் திடீர் டெல்லி பயணம்; பாஜக உடன் மீண்டும் கூட்டா.? தனிக் கட்சியா.? யாருக்கு ஆபத்து.?
Chennai School Holiday: தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
தொடர் கனமழை; சென்னையில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்த ஆட்சியர்
TN School Leave: தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
தொடர் கனமழை; திருவள்ளூர் மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு
TN Heavy Rain Alert: சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
சென்னைக்கு அருகே டென்ட் அடித்த ‘டிட்வா‘; நாளை 3 மாவட்டங்களில் மிக கனமழை; ஆரஞ்சு அலெர்ட்
Ramadoss Vs ECI: டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
டெல்லி வரை சென்ற பாமக பதவி விவகாரம்; தேர்தல் ஆணைய முடிவை எதிர்த்து ராமதாஸ் தரப்பு வழக்கு
TN Congress : ’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
’நாளை முதல்வரை சந்திக்கும் காங்கிரஸ் குழு’ 40 தொகுதிகளை கேட்கத் திட்டம்..!
Pakistan Exposed: யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
யோவ், இது உங்களுக்கே அநியாயமா இல்ல.? இலங்கைக்கு காலாவதியான உணவுப் பொருட்களை அனுப்பிய பாகிஸ்தான்
Embed widget