மேலும் அறிய

கேலி...கிண்டல்...சீரியஸாக நடந்த கடைகள் ஏலம்... பணத்தை குவித்த தஞ்சை மாநகராட்சி...!

’’அரசு சார்பில் வாடகையாக 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு ஏலம் எடுக்க வந்த வியாபாரிகள் அவ்வளவு தொகை கட்டுப்படியாகாது, 70 ஆயிரமாக உயர்த்தி அறிவியுங்கள் என கிண்டல் செய்யும் வகையில் கூச்சலிட்டனர்’’

தஞ்சை புதிய பஸ் நிலையம் பகுதியில் மொத்தம் 122 கடைகள் உள்ளன. இதில் 40 கடைகளை சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளதால் மீதமுள்ள 82 கடைகளுக்கு நேற்று ஏலம் நடைபெற்றது.  முதலில் பி பிளாக் பகுதியில் உள்ள 1-ம் கடைக்கு ஏலமிடப்பட்ட போது அரசு சார்பில் வாடகையாக 50 ஆயிரம் நிர்ணயிக்கப்பட்டது. அதற்கு ஏலம் எடுக்க வந்த வியாபாரிகள் அவ்வளவு தொகை கட்டுப்படியாகாது. 70 ஆயிரமாக உயர்த்தி அறிவியுங்கள் என கிண்டல் செய்யும் வகையில் கூச்சலிட்டனர். அதன் பிறகு அரசு சார்பில் 20 ஆயிரம் நிர்ணயிக்க வேண்டும் என கூறினர். அதன் பின்னர் 30 ஆயிரமாக குறைக்கப்பட்டு ஏலமிடப்பட்டது.

கேலி...கிண்டல்...சீரியஸாக நடந்த கடைகள் ஏலம்... பணத்தை குவித்த தஞ்சை மாநகராட்சி...!

இதே போன்று மற்ற கடைகளுக்கும் அரசு சார்பில் வாடகை கட்டணத்தை  உயர்த்தி அறிவித்தனர். இதற்கு வியாபாரிகள் கட்டணத்தை குறைக்க வேண்டும் என  கோஷமிட்டதால், வியாபாரிகள் கேட்க விரும்பும் தொகையில் இருந்து ஏலத்தை கேட்கலாம் என அறிவிக்கப்பட்டு ஏலம் நடைபெற்றது. அதன்படி அதிக பட்சமாக ஒரு கடை 96 ஆயிரத்துக்கும், குறைந்தபட்சமாக 11 ஆயிரத்துக்கும் ஏலம் போனது. 96 ஆயிரத்துக்கு ஏலம் எடுக்கப்பட்ட கடைக்கு  முன்னதாக வாடகையாக 25 ஆயிரமும், 11 ஆயிரத்திற்கு ஏலம் எடுக்கப்பட்ட கடை முன்பு 3 ஆயிரமும் வாடகை செலுத்தப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. 

இன்று 17 கடைகள் மட்டும் ஏலம் போனது. ஏலம் கேட்காத மற்றும் குறைந்த வாடகைக்கு கேட்கப்பட்ட மீதமுள்ள 65 கடைகளுக்கு  ஏலம் தள்ளி வைக்கப்பட்டது. அந்த கடைகளுக்கான ஏலம் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என கூறப்பட்டது.  ஏலம் நடைபெற்ற கடைகள் மூலம் டெபாசிட் வாடகை மாநகராட்சிக்கு ஒரு கோடியே 30 லட்சம் வருமானம் கிடைத்தது. தற்போது ஏலமிடப்பட்ட 17 கடைகள் மூலம் மாநகராட்சிக்கு முன்பு ஆண்டுக்கு 13 லட்சம் வருமானம் கிடைத்தது. தற்போது இது 59 லட்சமாக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேலி...கிண்டல்...சீரியஸாக நடந்த கடைகள் ஏலம்... பணத்தை குவித்த தஞ்சை மாநகராட்சி...!

தஞ்சை பழைய பஸ் நிலையத்தில் புதிதாக கட்டப்பட்ட கடைகள் ஏலமிடப்பட்ட போது பரபரப்பாக காணப்பட்டது. ஏலம் எடுக்கவும் கடும் போட்டியும், ஏலத்தை நிறுத்த வேண்டும், ஆணையரை மாற்ற வேண்டும் என திமுகவினரும், வணிகர்களும் சாலை மறியல், உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். ஆனால் போட்டிகள் அதிகமானதால், வாடகை தொகை அதிகரித்துக்கொண்டே போனது. வியாபாரிகள் ஆனால் நேற்று தஞ்சை புதிய பஸ் நிலைய கடைகளுக்கு ஏலம் எடுப்பதற்காக வியாபாரிகளும் குறைந்த அளவே வந்திருந்தனர். இதனால் இருக்கைகள் காலியாக காணப்பட்டது.  

இந்த புதிய பஸ் நிலையத்திலுள்ள கடைகளின் ஏலம், மாநகராட்சி ஆணையர் சரவணகுமார் முன்னிலையில் செயற்பொறியாளர் ஜெகதீசன்,  மேலாளர் கிளமெண்ட், உதவி நகரமைப்பு அலுவலர் ராஜசேகரன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் கடைகளை ஏலமிட்டனர். ஏலம் நடைபெற்றதையொட்டி மாநகராட்சி வளாகத்தில் போலீசாரும் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்தனர். ஏலம் நடைபெறுவதை சிசிடிவி மூலம் பதிவு செய்யப்பட்டும், 10 க்கும் மேற்பட்ட LED டிவி மூலம்  ஒளிபரப்பட்டது. மிகவும் சொற்ப அளவிலேயே வியாபாரிகள் வந்திருந்தால், மாநகராட்சி அலுவலகமும் வெறிச்சோடி காணப்பட்டது.  

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget