மேலும் அறிய

சொகுசு காரில் ஆடுகள் ஆட்டை : கிராம மக்கள் துரத்தியதால் தப்பியோடிய கொள்ளையர்கள்..!

கோட்டூர் அருகே சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற நபர்களை கிராம மக்கள் துரத்தி சென்றதால், காரை விட்டுவிட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

திருவாரூர் மாவட்டத்தில் நான்கு நகராட்சிகள், பத்து ஒன்றியங்கள், 430 ஊராட்சிகள் உள்ளன. குறிப்பாக திருவாரூர் மாவட்டம் அதிக கிராமங்களை உள்ளடக்கியது, மேலும் விவசாயிகளும் விவசாய கூலித் தொழிலாளர்கள் அதிகம் உள்ள மாவட்டம் திருவாரூர் மாவட்டம். திருவாரூர் மாவட்டத்தில் வசிக்கும் மக்கள் விவசாயத்தையும் ஆடு மாடுகள் வளர்க்கும் தொழிலை மட்டுமே நம்பி வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் கடந்த சில மாதங்களாக இரவு நேரங்களில் கால்நடைகள் திருட்டுப் போகும் சம்பவம் என்பது தொடர் கதையாகி வருகிறது.
 
கோட்டூர் அருகே சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற நபர்களை கிராம மக்கள் துரத்தி சென்றதால், காரை விட்டு விட்டு தப்பி ஓடிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். திருவாரூர் மாவட்டம் கோட்டூர் அருகே உள்ள சோமசேகரபுரம் கிராமத்திற்கு நேற்று இரவு மர்ம நபர்கள் சிலர் ஸ்கோடா சொகுசு காரில் வந்துள்ளனர். பின்னர் அக்கிரமத்தை சேர்ந்த குபேந்திரன் என்பவர் வீட்டில் இருந்த 3 ஆடுகள், உட்பட அருகே மற்ற வீடுகளில் இருந்த 3 ஆடுகள் என மொத்தம் 6 ஆடுகளை மர்ம நபர்கள் கார் டிக்கியில் அடைத்து கடத்தி செல்ல முயன்றனர். 

சொகுசு காரில் ஆடுகள் ஆட்டை : கிராம மக்கள் துரத்தியதால் தப்பியோடிய கொள்ளையர்கள்..!
ஆடு கத்தும் சத்தம் கேட்டு எழுந்த அப்பகுதி மக்கள் சொகுசு காரில் ஆடுகள் இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆடு கடத்திய மர்ம நபர்கள் ஆடுகளுடன் காரில் வேகமாக சென்று தப்பிக்க முயன்றனர். சோமசேகரபுரம் கிராம மக்கள் ஒன்று திரண்டு காரை துரத்தி சென்றனர். அப்போது கார் மன்னார்குடி சாலையில் சென்று கொண்டிருந்த போது இரட்டை புலி எனும் இடத்தில் எதிர்பாராத விதமாக காரில் ஏற்பட்ட கோளாறால் நடு வழியில் கார் நின்றது. இதனால் செய்வதறியாது குழம்பிய கடத்தல்காரர்கள் அவர்கள் வந்த சொகுசு காரை ரோட்டிலேயே விட்டு விட்டு தப்பி சென்றனர்.
 
இந்த சம்பவம் குறித்து கிராம மக்கள் கோட்டூர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த கோட்டூர் காவல்துறையினர் கடத்தப்பட்ட ஆடுகள், மற்றும் கடத்தலுக்கு பயன்படுத்திய சொகுசு காரை பறிமுதல் செய்தனர். மேலும் தப்பி ஓடிய மர்ம நபர்கள் குறித்து கோட்டூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். நள்ளிரவில் சொகுசு காரில் வந்து ஆடுகளை திருடி சென்ற சம்பவம் கிராம மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சொகுசு காரில் ஆடுகள் ஆட்டை : கிராம மக்கள் துரத்தியதால் தப்பியோடிய கொள்ளையர்கள்..!
காவல்துறையினர் நகர் பகுதிகளில் மட்டும் இரவு நேர ரோந்து பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் நகரத்திற்கு அப்பால் உள்ள கிராமப்புறங்களிலும், இரவு நேரத்தில் காவல் துறையினர் தங்களது ரோந்து பணியை தீவிரப்படுத்த வேண்டும். அப்படி செய்தால்தான் திருட்டு சம்பவங்கள் குறைவதற்கான வாய்ப்புகள் இருக்கும், மேலும் பொதுமக்கள் அச்சப்படாமல் இருக்க முடியும், உடனடியாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் இது போன்ற விஷயங்களில் தனி கவனம் செலுத்தி கிராமப்புறங்களில் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் காவல்துறையினருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget