மேலும் அறிய

திருச்சியை பயமுறுத்திய விமானம்: விஷயம் தெரிந்த பின்னர் மக்கள் ஆசுவாசம்

இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GSI) மூலம் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய ஆய்வின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர்.

தஞ்சாவூர்: தாழ்வாக சுற்றிப்பறந்த சிறிய ரக விமானம் திருச்சி மக்களை பீதியில் ஆழ்த்தியது. விஷயம் தெரிஞ்ச பின்னாடி இதுக்குதான் இம்புட்டு பயந்தோமா என்று மக்கள் ஆசுவாசம் அடைந்தனர். விஷயத்தை பாருங்க. 

திருச்சியில் நேற்று நகரின் பல பகுதிகளில் தாழ்வாகப் ஒரு விமானம் பறந்தது. இதனால் மக்கள் மத்தியில் சிறிது நேரம் பீதி ஏற்பட்டது. நேற்று வியாழக்கிழமை காலை, மக்கள் அதிகம் வசிக்கும் காந்தி மார்க்கெட் பகுதிக்கு மேலே முதலில் இந்த ஒற்றை எஞ்சின் விமானம் பறந்தது. பின்னர், பாலக்கரை, தென்னூர், கன்டோன்மென்ட், பீமா நகர் மற்றும் சத்திரம் பேருந்து நிலையம் போன்ற பகுதிகளிலும் இந்த சிறிய ரக விமானத்தை மக்கள் மிகவும் தாழ்வாக கண்டனர். அதன் சத்தமும் அதிகளவில் இருந்தது. 

விமானம் தரையிலிருந்து சுமார் 250 அடி உயரத்தில் மிகத் தாழ்வாகப் பறந்ததால், அதன் என்ஜின் சத்தம் அதிகமாக இருந்தது. இதனால் மக்களுக்கு அச்சத்தில் காய்ச்சலே வந்து இருக்கலாம். ஆனால் இந்த சிறிய ரக விமானம் எதற்காக பறந்தது என்ற விஷயம் தெரிந்த பின்னர் வடிவேலு காமெடிப் போல் சுனாபானா இதுக்காடா இம்புட்டு பயந்தோம் என்றுதான் மக்கள் மத்தியில் கமெண்ட் எழுந்து இருக்கும்.

இந்த சிறிய விமானம், இந்திய புவியியல் ஆய்வுத் துறை (GSI) மூலம் மேற்கொள்ளப்படும் ஒரு பெரிய ஆய்வின் ஒரு பகுதியாகும் என்று அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். இந்த ஆய்வு, ஜனவரி 1ம் தேதி வரை நடைபெறும். திருச்சி உட்பட 13 மாவட்டங்களில் நிலத்தடியில் உள்ள கனிம வளங்களைக் கண்டறிவதே இதன் நோக்கம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஆனால் இதை திருச்சி மாவட்ட நிர்வாகம் சொல்லலைங்க. ஆச்சரியமாக, அரியலூர் மாவட்ட நிர்வாகம் ஏற்கனவே இதுகுறித்து பொதுமக்களுக்கு ஒரு செய்தி வெளியீட்டை அனுப்பியிருந்தது. ஆனால், திருச்சி நிர்வாகத்திடம் இருந்து இதுபோன்ற எந்த அறிவிப்பும் வரவில்லை. இந்த விமானம் சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரிகளிடம் இருந்து அனுமதி பெற்றுள்ளது. நாங்கள் அவர்களிடம் முன்கூட்டியே எங்களுக்குத் தெரிவிக்கச் சொல்லியிருக்கிறோம்," என்று திருச்சி மாவட்ட ஆட்சியர் வி. சரவணன் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் புதுக்கோட்டையில் ஒரு நெடுஞ்சாலையில் இதுபோன்ற ஒரு விமானம் அவசரமாக தரையிறங்கிய சம்பவம் நடந்ததால், நாங்கள் கொஞ்சம் கவலைப்பட்டோம் என்று காந்தி மார்க்கெட் பகுதியை சேர்ந்த வியாபாரிகள் தரப்பில் தெரிவித்தனர். 

இந்த விமான ஆய்வுக்கு செஸ்னா கேரவன் 208B வகை விமானம் பயன்படுத்தப்படுகிறது. இது நிலத்தடியில் உள்ள கனிமப் படிவுகளைக் கண்டறிய சிறப்பு சென்சார்களைப் பயன்படுத்துகிறது. இந்த சென்சார்கள் பூமியின் அடியில் என்ன இருக்கிறது என்பதைப் படம் பிடித்து அனுப்பும். இது ஒருவகையில், பூமியின் உள்ளே மறைந்திருக்கும் புதையல்களைத் தேடுவது போன்றதுதான்.

இந்த ஆய்வு, எதிர்காலத்தில் நமக்குத் தேவையான கனிம வளங்களைக் கண்டறிய உதவும். இதனால், நமது நாட்டின் வளர்ச்சிக்கு இது மிகவும் முக்கியமானது. ஆனால், இதுபோன்ற ஆய்வுகள் நடக்கும்போது பொதுமக்களுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிப்பது அவசியம். அப்போதுதான் தேவையற்ற பீதி ஏற்படாது. மக்கள் தங்கள் அன்றாட வேலைகளை நிம்மதியாகச் செய்ய முடியும்.

இந்த விமானம் பற்றிய செய்தி பரவியதும், பலரும் என்ன நடக்கிறது என்று தெரியாமல் திகைத்தனர். இது நாட்டின் வளர்ச்சிக்கு உதவும் ஒரு அறிவியல் ஆய்வு என்பது பின்னர் தெரியவந்தது. இதுபோன்ற ஆய்வுகள் நடக்கும்போது, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களுக்குத் தெளிவான தகவல்களை அளிப்பது மிகவும் முக்கியம். அப்போதுதான் மக்கள் அச்சமின்றி இருப்பார்கள். இதை மாவட்ட நிர்வாகம் உணர வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

தலைப்பு செய்திகள்

400 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரம்! ஆசியாவின் மிகப்பெரிய திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் 
400 ஆண்டுகளைக் கடந்தும் கம்பீரம்! ஆசியாவின் மிகப்பெரிய திருப்பாலைத்துறை நெற்களஞ்சியம் 
வரும் ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கணும்... எதற்கு? எங்கு வேலை வாய்ப்பு என்று தெரியுங்களா?
வரும் ஜூன் 10-க்குள் விண்ணப்பிக்கணும்... எதற்கு? எங்கு வேலை வாய்ப்பு என்று தெரியுங்களா?
நெல் சாகுபடிக்கு மாற்றாக மலர் விவசாயம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் செண்டிப்பூக்கள் 
நெல் சாகுபடிக்கு மாற்றாக மலர் விவசாயம்: தஞ்சை அருகே பூத்துக் குலுங்கும் செண்டிப்பூக்கள் 
சாலையா? புதர்க்காடா? பூதலூர் - தஞ்சாவூர் பாதையில் உயிரைக் கையில் பிடித்துச் செல்லும் வாகன ஓட்டுனர்கள்!
சாலையா? புதர்க்காடா? பூதலூர் - தஞ்சாவூர் பாதையில் உயிரைக் கையில் பிடித்துச் செல்லும் வாகன ஓட்டுனர்கள்!

வீடியோ

DMK On INDIA Alliance | துரோகம் செய்த காங்கிரஸ் திமுகவின் அதிரடி முடிவு பலவீனமான I.N.D.I.A கூட்டணி?
Annamalai New Party |
NEET Exam Student Suicide |
Illegal Relationship | மனைவி உயிரோடுதான் இருக்காங்க குழந்தையுடன் கணவன் தலைமறைவு போலீஸார் விசாரணை!
Annamalai Resignation | பாஜகவுக்கு Bye Bye! புதிய பாதையில் அண்ணாமலை.. வெளியான அறிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
DMK - Congress: திருட்டு மாடல்.. அரசியல் ஒழுக்கமும் வேண்டும்.. திமுகவை வறுத்தெடுத்த மாணிக்கம் தாகூர்!
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: கேட்டைக்கூட திறக்காத தவெக.. கால்கடுக்க காத்திருந்த அதிமுக முன்னாள் அமைச்சர்கள்! பனையூரில் நடந்தது என்ன?
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
TVK: உள்ளாட்சி தேர்தல்தான் அடுத்த டார்கெட்! அதிமுக மாஜிக்களை வைத்து அஸ்திவாரம் போடும் தவெக!
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
India Team Squad: இந்திய டி20 புது கேப்டன் ஸ்ரேயாஸ்! அறிமுக வீரராக களமிறங்கும் சுட்டிப்பையன் சூர்யவன்ஷி - டீமே மாஸா இருக்கே
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
MK Stalin: விரைவில் தவெக ஆட்சிக்கு முற்றுப்புள்ளி.. தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் அழைப்பு!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
Rahul Gandhi: விஜயுடன் கூட்டணி.. தன் தலையில் மண்ணை அள்ளிப்போட்ட ராகுல்.. திமுக கடும் விமர்சனம்!
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
'கூகுள் பண்ணி பாருடா தற்குறி' .. தவெகவினரை விளாசிய எம்.எல்.அப்துல்லா.. நடந்தது என்ன?
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Tasmac: பாட்டிலுக்கு பத்து ரூபா.. இன்னும் 10 நாட்களில் தீர்வு.. டாஸ்மாக் ஊழியர் சொன்ன தகவல்!
Embed widget