மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் வேளாண் வளர்ச்சிப்பணிகள்... மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வேளாண் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வேளாண் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம் குருங்குளம் மேற்கு கிராமம், திருக்கானூர்பட்டி ஆகிய இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று பார்வையிட்டார். 

குருங்குளம் மேற்கு கிராமத்தில் 24 ஏக்கர் பரப்பளவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலத் தொகுப்பு-5ல் 12 விவசாயிகளுக்கான நிலத்தில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டார்.

அப்போது விவசாயிகள் சசிகுமார், செல்வராஜ், சிவகாசி கூறியதாவது: வானம் பார்த்த பூமியாக இருந்த எங்கள் நிலத்தில் 24 ஏக்கர் அளவிற்கு 12 விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரூ.15 லட்சம் செலவில் மோட்டார் கிணறு அமைத்து தந்ததை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலம் முந்திரி பயிரிட்டும். உளுந்து பயிரிட்டும் வேளாண் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறச் செய்த மாண்புமிகு தமிழ்நாடு முலமைச்சர் அவர்களுக்கும்., மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி என்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் தெரிவித்தனர். 


தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் வேளாண் வளர்ச்சிப்பணிகள்... மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

இதையடுத்து திருக்கானூர்பட்டியில் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டத்தின் மூலமாக சகாயமேரி என்பவரது நிலத்தில் 1.43 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.1,84,568 கடனுதவியில் ரூ.1,38,313 மானியமாக பெற்று சொட்டுநீர் பாசன திட்டத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் செய்தியாளர்களுடன் பார்வையிட்டார்.

அங்கிருந்த விவசாயிகளிடம் வேளாண் துறையில் தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு, வேளாண் பணிகளில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்,  கேட்டுக்கொண்டார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது: தஞ்சை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் 14 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் சிறப்பு இனமாக சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்களை கண்டறிந்து, அதற்கு சொந்தமான விவசாயிகளை குழுவாக அமைத்து, குழுவினை பதிவு செய்து, பங்கு பெரும் விவசாயிகளின் தரிசு நிலங்களில் இருந்த முட்புதற்கள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டது.

பின்னர் பாசன வசதியை ஏற்படுத்த குழாய் கிணறு அமைக்கப்பட்டு, இலவச மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, மரப்பயிர்கள், பழப்பயிர்கள், பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வேளாண்மை உழவர்-நலத்துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, துணை இயக்குநர்கள் ஈஸ்வர். சுஜாதா, கோமதி தங்கம் (நேர்முக உதவியாளர்), உதவி இயக்குநர் அய்யம்பெருமாள்,. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், வேளாண்மை அலுவலர் தினேஷ்வரன், தோட்டக்கலை அலுவலர் சோபியா, தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள்ராஜ். உதவி அலுவலர்கள் ஞானசுந்தர், வெங்கடாஜலபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Jallikattu Guidelines : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
ABP Premium

வீடியோ

குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்
டெல்லியில் கடும் மூடுபனி அடுத்தடுத்து மோதிய வாகனங்கள் பற்றி எரிந்த பேருந்துகள்4 பேர் உயிரிழப்பு | Delhi Accident

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Jallikattu Guidelines : ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
ஜல்லிக்கட்டு போட்டிக்கு தயாரா.! கண்டிப்பா இதெல்லாம் கடைப்பிடிக்கனும்- வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
TN TET: ஆசிரியர் தகுதித் தேர்வில் 96% கேள்விகள் தவறு..ஆட்சேபிக்கும் தேர்வர்கள்- டிஆர்பி பதில் என்ன?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
Railway Job: ”ரயில் இருக்கு, ஓட்ட தான் ஆள் இல்லையாம்” - ரயில்வேயில் இவ்ளோ காலி பணியிடங்களா? லோகோ பைலட்?
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
‘தொகுதி மாறும் செந்தில்பாலாஜி?’ கோவையை தேர்வு செய்தது ஏன்? – பரபரப்பு பின்னணி..!
Old Pension Scheme: பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
பழைய ஓய்வூதிய திட்டம்.! அரசு ஊழியர்களுக்கு ஜாக்பாட்.? 3 அமைச்சர்கள் கையில் இன்று முக்கிய முடிவு
Embed widget