மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் வேளாண் வளர்ச்சிப்பணிகள்... மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வேளாண் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் நடந்து வரும் வேளாண் வளர்ச்சிப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

தஞ்சாவூர் மாவட்டம், தஞ்சாவூர் ஒன்றியம் குருங்குளம் மேற்கு கிராமம், திருக்கானூர்பட்டி ஆகிய இடங்களில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் வேளாண் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் நேரில் சென்று பார்வையிட்டார். 

குருங்குளம் மேற்கு கிராமத்தில் 24 ஏக்கர் பரப்பளவில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் தரிசு நிலத் தொகுப்பு-5ல் 12 விவசாயிகளுக்கான நிலத்தில் முந்திரி சாகுபடி செய்யப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் பார்வையிட்டார்.

அப்போது விவசாயிகள் சசிகுமார், செல்வராஜ், சிவகாசி கூறியதாவது: வானம் பார்த்த பூமியாக இருந்த எங்கள் நிலத்தில் 24 ஏக்கர் அளவிற்கு 12 விவசாயிகள் பயன்பெறும் வகையில் தமிழக அரசு ரூ.15 லட்சம் செலவில் மோட்டார் கிணறு அமைத்து தந்ததை பயன்படுத்தி சொட்டுநீர் பாசனம் மூலம் முந்திரி பயிரிட்டும். உளுந்து பயிரிட்டும் வேளாண் உற்பத்தி பணியில் ஈடுபட்டுள்ளோம். எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு இத்திட்டத்தின் மூலமாக பயன்பெறச் செய்த மாண்புமிகு தமிழ்நாடு முலமைச்சர் அவர்களுக்கும்., மாவட்ட நிர்வாகத்திற்கும் நன்றி என்று மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப்பிடம் தெரிவித்தனர். 


தஞ்சை மாவட்டத்தில் நடந்து வரும் வேளாண் வளர்ச்சிப்பணிகள்... மாவட்ட கலெக்டர் நேரில் சென்று ஆய்வு

இதையடுத்து திருக்கானூர்பட்டியில் பிரதம மந்திரி நுண்ணுயிர் பாசன திட்டத்தின் மூலமாக சகாயமேரி என்பவரது நிலத்தில் 1.43 ஹெக்டேர் பரப்பளவில் ரூ.1,84,568 கடனுதவியில் ரூ.1,38,313 மானியமாக பெற்று சொட்டுநீர் பாசன திட்டத்தில் நிலக்கடலை பயிரிடப்பட்டுள்ளதை மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் செய்தியாளர்களுடன் பார்வையிட்டார்.

அங்கிருந்த விவசாயிகளிடம் வேளாண் துறையில் தமிழக அரசின் திட்டங்களை பயன்படுத்திக் கொண்டு, வேளாண் பணிகளில் முன்னேற வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப்,  கேட்டுக்கொண்டார். 

பின்னர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்ததாவது: தஞ்சை மாவட்டத்தில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் 2021-22 ஆம் ஆண்டு முதல் 14 வட்டாரங்களிலும் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

இத்திட்டத்தில் சிறப்பு இனமாக சாகுபடி செய்யப்படாத தரிசு நிலங்களை கண்டறிந்து, அதற்கு சொந்தமான விவசாயிகளை குழுவாக அமைத்து, குழுவினை பதிவு செய்து, பங்கு பெரும் விவசாயிகளின் தரிசு நிலங்களில் இருந்த முட்புதற்கள் அகற்றப்பட்டு சமன்படுத்தப்பட்டது.

பின்னர் பாசன வசதியை ஏற்படுத்த குழாய் கிணறு அமைக்கப்பட்டு, இலவச மின் இணைப்பு ஏற்படுத்தப்பட்டு, சொட்டுநீர் பாசனம் அமைத்து விவசாயிகளின் விருப்பத்திற்கு ஏற்ப, மரப்பயிர்கள், பழப்பயிர்கள், பணப்பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு விவசாயிகளின் வாழ்வாதாரத்தை உயர்த்தும் நோக்குடன் வேளாண்மை உழவர்-நலத்துறை மூலம் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

நிகழ்ச்சியில் மாவட்ட வேளாண்மை இணை இயக்குநர் நல்லமுத்துராஜா, துணை இயக்குநர்கள் ஈஸ்வர். சுஜாதா, கோமதி தங்கம் (நேர்முக உதவியாளர்), உதவி இயக்குநர் அய்யம்பெருமாள்,. செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் மதியழகன், வேளாண்மை அலுவலர் தினேஷ்வரன், தோட்டக்கலை அலுவலர் சோபியா, தஞ்சாவூர் வட்டாட்சியர் அருள்ராஜ். உதவி அலுவலர்கள் ஞானசுந்தர், வெங்கடாஜலபதி மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

CSK Bowling Coach : KKR-க்கு தாவிய BRAVO CSK-க்கு வரும் மல்லிங்கா? SKETCH போடும் தோனிTN Cabinet Shuffle : ”PTR நீங்களே வாங்க!” மீண்டும் நிதித்துறை அமைச்சர்? ஸ்டாலின் பக்கா ஸ்கெட்ச்!Thrissur ATM Robbery | ”நாங்க திருடாத AREA-ஏ இல்ல” கொள்ளையர்கள் பகீர் வாக்குமூலம்!Pawan Kalyan |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Udhayanidhi Stalin: துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
துணை முதலமைச்சர் ஆகிறார் உதயநிதி ஸ்டாலின்.. இன்று பிற்பகல் 3.30 மணிக்கு பதவியேற்பு
Breaking News LIVE 28th Sep 2024: அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் துணைமுதல்வர் பொறுப்பு
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
பாஜக எச்சரிக்கையாக இருக்கணும்.!கொஞ்சம் கேப் விட்டாலும் புகுந்துருவோம்: முதல்வர் ஸ்டாலின் அதிரடி பேச்சு.!
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:-  திருமாவளவன்
”முதல்வர் ஸ்டாலினை அண்ணா தட்டி கொடுத்திருப்பார், கலைஞர் உச்சி முகர்ந்திருப்பார்”:- திருமாவளவன்
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
அறிஞர் அண்ணா வீட்டுக்குச்சென்று பதிவேட்டில் எழுதிய முதல்வர் ஸ்டாலின்.. என்ன எழுதினார் தெரியுமா?
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
ஜாக்பாட்! பெண்களுக்கு ரூ. 2000.. ஏழைகளுக்கு வீடுகள்.. வாக்குறுதிகளை வாரி வழங்கிய காங்கிரஸ்!
Second Moon: பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
பூமிக்கு 2-வது நிலா! நிலாவுக்கு புது நண்பன்.. ஆச்சர்யமூட்டும் நாளைய வானியல் நிகழ்வு
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
என்னது மிரட்டி பணம் பறிச்சாங்களா? மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிவு!
Embed widget