மேலும் அறிய

கடலில் மூழ்கிய படகு; 3 நாட்களுக்குப் பின் மீட்ட மீனவர்கள்!

சீர்காழி அருகே நடுகடலில் மூழ்கிய படகை மூன்று தினங்களுக்கு பின்னர் மீட்டு மீனவர்கள் கரை சேர்த்துள்ளனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள பழையார் மீனவ கிராம். இங்குள்ள மீன்பிடி துறைமுகத்தில் பழையார் சுற்றியுள்ள ஏராளமான மீனவ கிராமங்களில் இருந்து மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்வது வழக்கம். இந்நிலையில் பழையாறு மீன்பிடி துறைமுகத்திலிருந்து கடந்த 2 ம் தேதி சேதுராமன் என்பவருக்கு சொந்தமான விசைப்படகில் மதி, ஹரிஷ், நகுலன்,  முத்தையா, ராஜதுரை உள்ளிட்ட ஐந்து மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்கு சென்றுள்ளனர்.


கடலில் மூழ்கிய படகு; 3 நாட்களுக்குப் பின் மீட்ட மீனவர்கள்!

அப்போது இவர்கள் பழையார் துறைமுகத்திலிருந்து நான்கு நாட்டிகல் மையில் தொலைவில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, கடலில் திடீரென பலத்த சூறைக்காற்று ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி நிலைகுலைந்த விசைப்படகு உடைந்து, தண்ணீர் உள்ளே புக தொடங்கி மெல்ல நடுக்கடலில் மூழ்கியது. படகில் இருந்த மீனவர்கள் கடலில் குதித்து தங்கள் உயிரை காப்பாற்ற தத்தளித்து கொண்டிருந்தனர். அப்போது அவ்வழியாக வந்த காரைக்கால் மீனவர்கள் கடலில் தத்தளித்த ஐந்து மீனவர்களையும் பத்திரமாக மீட்டு, காரைக்கால் துறைமுகத்திற்கு அழைத்து சென்றனர். 


கடலில் மூழ்கிய படகு; 3 நாட்களுக்குப் பின் மீட்ட மீனவர்கள்!

இந்த சூழலில் பழையார் துறைமுகத்தில் இருந்து நான்கு நாட்டிகல் தொலைவில் மீன்பிடித்த போது படகில் உடைப்பு ஏற்பட்டு நடுக்கடலில் மூழ்கிய சுமார் 10 லட்ச ரூபாய் மதிப்புள்ள விசை படகை, பழையாறை சேர்ந்த சக மீனவர்கள் கடந்த மூன்று நாட்களாக மீன் பிடிக்க கடலுக்கு செல்லாமல் வேலை நிறுத்தம் செய்து,  நடுக்கடலில் மூழ்கிய படகை மீட்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வந்தனர். பழையாறு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சுமார் பத்துக்கும் மேற்பட்ட படகில் சென்று கடலில் மூழ்கிய விசைபடகை கட்டி இழுத்து வந்து கரை சேர்ந்தனர்.


கடலில் மூழ்கிய படகு; 3 நாட்களுக்குப் பின் மீட்ட மீனவர்கள்!

அதனைத் தொடர்ந்து கரையிலிருந்து மேலே எடுக்க பொக்லையன் இயந்திரம் மூலம் படகை கயிறு கட்டி கரை ஏற்றினர். மேலும் இது குறித்து அப்பகுதி மீனவர்கள் கூறுகையில், மீன்பிடி தடைக்காலம் முடிந்து கடந்த இரண்டு மாதங்களுக்கு பிறகு மீன் பிடிக்க செல்லும் எங்களுக்கு தற்போது போதிய மீன் கிடைக்காததாலும், அவ்வாறு கிடைக்கும் குறைந்த அளவிலான மீன்களையும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வியாபாரிகள் வந்து வாங்கிச் இல்லாததாலும், வாழ்வாதாரம் இழந்து பெரும் இன்னல்களை சந்தித்து வருகிறோம். இதுபோன்ற சமயங்களில் மேலும் எங்களுக்கு பேரிடியாக இயற்கை சீற்றத்தால் படகுகள் கவிழ்ந்து, நீரில் மூழ்வதும் தொடர் கதையாக இருந்துவருகிறது. மழை புயல் வெள்ளம் என இயற்கை சீற்றங்களில் தங்கள் உயிரை பணயம் வைத்து இத்தொழிலில் ஈடுபட்டு வருவதாகவும் இதனை அரசு கவனத்தில் கொண்டு இதுபோன்று ஏற்படும் இழப்புகளுக்கு அரசு உடனடியாக நிவாரணம் வழங்க வழிவகை செய்ய வேண்டும் என அப்பகுதி மீனவர்கள் தமிழ்நாடு அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

வெயில் வாட்டினாலும் விளைச்சலை காக்க சாலையில் நெல்லை காய வைக்கும் விவசாயிகள்
வெயில் வாட்டினாலும் விளைச்சலை காக்க சாலையில் நெல்லை காய வைக்கும் விவசாயிகள்
சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
சென்னையில் நடந்த கான்க்ளேவ் 26 நிகழ்விற்கான சிறப்பான முன்னோட்ட விழா
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
அதிநவீன என்டோஸ்கோப்பிக்  அறுவை சிகிச்சை... ஐடி பணியாளருக்கு நடமாட்ட திறனை வழங்கிய மீனாட்சி மருத்துவமனை
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
டிஜிட்டல் அரெஸ்ட் என்று கூறி சித்தா பெண் டாக்டரிடம் ரூ.52 லட்சம் பணம் மோசடி
ABP Premium

வீடியோ

Mammootty | கொத்து கொத்தாகமடியும் உயிர்கள்மனிதநேயம் எங்கே? மம்மூட்டி EMOTIONAL! | Iran Israel Attack
Iran Israel conflict | சீனுக்கு வந்த 3 நாடுகள்! அமெரிக்காவுடன் கூட்டு! சமாளிக்குமா ஈரான்? | America
Gold Price Hike | ஷாக் கொடுத்த தங்கம் ஈரான் தான் காரணமா? எப்போது குறையும் Gold Price | Iran War
Iran IRGC | ஈரானின் வலிமையான படை! US-க்கு பயம் காட்டிய IRGC தரைமட்டமாக்கிய ட்ரம்ப்! பகீர் காட்சி
Vijay Sangeetha divorce | சங்கீதா போட்ட குண்டு ஆடிப்போயிருக்கும் விஜய் அரசியல் சதியா? | TVK

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Assembly Election: 3 முதலமைச்சர்களுக்கு முதன்முறை! தமிழ்நாட்டை புரட்டிப்போட்ட 1989 சட்டமன்ற தேர்தல்!
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
TN Election 2026: நாங்க கஷ்டபடனுமா? அரசியல் கட்சிகளால் அவதிப்படும் மக்கள்! இதெல்லாம் எப்போ மாறும்?
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
மயிலாடுதுறை: தேங்கிக் கிடக்கும் லட்சக்கணக்கான நெல் மூட்டைகள்; சிட்டா அடங்கல் கிடைக்காமல் விவசாயிகள் தவிப்பு - ஆட்சியர் கூட்டத்தில் குமுறல்
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
Chandra Grahan Time: இன்று மாலை ரத்த நிலவு! சந்திர கிரகணம் எப்போது, எங்கே, எப்படி பார்க்கலாம்? முழு வழிகாட்டி!
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
ஹீரோ ஸ்பிளெண்டர் vs பஜாஜ் பிளாட்டினா: ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு அதிக மைலேஜ் தரும் பைக் எது? அதன் விலை என்ன?
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
நாங்குநேரி கொடூர சம்பவத்துக்கு இதன் வெறித்தனமே காரணம் - அன்புமணி சொல்லும் காரணங்கள்
Congress Vs TVK: திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
திடீர் டுவிஸ்ட்.! தவெகவுடன் கூட்டணி வைப்பது தற்கொலைக்கு சமம்.! பல்டி அடித்த காங்கிரஸ்
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
பொன்முடிக்கு செக்? 13 ஆண்டு கால செம்மண் குவாரி வழக்கில் ஏப்ரல் 2-ல் அதிரடி தீர்ப்பு!
Embed widget