மேலும் அறிய

வலசை பறவைகள் வரத்து குறைந்தது... ஏன் தெரியுங்களா?

ஏரிகளில் ஆகாயத்தாமரையை அகற்றி, மண் சார்ந்த தாவரங்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், பறவைகள் அமருவதற்கான மரங்களுடன் கூடிய சிறு திட்டுகளையும் உருவாக்க வேண்டும்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டத்தில் தொடர் மழை உள்ளிட்ட காரணங்களால் நீர் நிலைகளில் நீர் வரத்து அதிகமாகி உள்ளது. இதனால் நடப்பாண்டு வலசை பறவைகளின் வருகை குறைந்துள்ளது என்று தெரிய வந்துள்ளது.

ஆண்டுதோறும் அக்டோபரிலிருந்து பிப்ரவரி மாதம் வரை வட மாநிலங்கள் மற்றும் ஆப்கானிஸ்தான் உள்ளிட்ட வட திசை நாடுகளிலிருந்து டெல்டா மாவட்டங்களுக்கு பறவைகள் வருவது வழக்கம். வட மாநிலங்களிலும், வட திசை நாடுகளிலும் இந்தக் காலகட்டத்தில் கடும் குளிர் நிலவுவதால், இனப்பெருக்கம் செய்ய முடியாது. இதனால், அப்பறவைகள் இங்கு வந்து இரை தேடி, கூடு கட்டி, இனப்பெருக்கம் செய்கின்றன. அப்பறவைகளுக்கு ஏற்ற தட்ப வெப்பநிலை இங்கு இருப்பதே இதற்குக் காரணம். குஞ்சுகள் வளர்ந்து பறக்கும் நிலையை எட்டும்போது, தங்களது பகுதிக்கு அழைத்துச் செல்கின்றன. இவை வலசை பறவைகள் என அழைக்கப்படுகின்றன.


வலசை பறவைகள் வரத்து குறைந்தது... ஏன் தெரியுங்களா?

இதுபோல, வட திசையிலிருந்து தஞ்சாவூர் மாவட்டத்துக்கு நத்தைக் கொத்தி நாரை, சாம்பல் நாரை, நடுத்தர கொக்கு, பெரிய கொக்கு, சிறகி, ஆற்று ஆலா, மீசை ஆலா, அரிவாள் மூக்கன், வாத்து இனங்கள் போன்றவை அக்டோபர் - பிப்ரவரி காலகட்டத்தில் அதிக அளவில் வருவது வழக்கம். இந்தக் காலகட்டத்தில் இங்கு தேவையான இரைகள் கிடைப்பதால், வலசை பறவைகள் அதிக அளவில் வருவதற்கு காரணமாக இருக்கிறது. ஆனால், நடப்பு வடகிழக்குப் பருவ மழையின்போது இயல்பை விட அதிகமாக மழை பெய்தது. தொடர் மழை காரணமாக டெல்டா மாவட்டங்களிலுள்ள ஏரிகளில் தண்ணீர் வரத்து அதிகமாகி, நீர்மட்டமும் உயர்ந்து காணப்படுகிறது.

நீர்ப்பறவைகளைப் பொருத்தவரை நீரில் மூழ்கி இரை தேடுவது வழக்கம். அதற்கேற்ப நீர்மட்டம் குறைவாக இருந்தால்தான், அப்பறவைகளால் தண்ணீரில் மூழ்கி இரை தேட முடியும். ஆனால் நடப்பாண்டு ஏரிகளில் நீர்மட்டம் அதிகமாக இருப்பதால், அவற்றால் மூழ்கி இரை தேட முடியாத நிலை நிலவுகிறது. மேலும், பகலில் வெயிலும், இரவில் பனியும் அதிகமாக இருப்பதும், தஞ்சாவூரிலிருந்து அப்பறவைகள் வேறொரு பகுதிக்கு இடம்பெயர்ந்து சென்றிருக்கலாம் என்ற கருத்தும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மத்தியில் நிலவுகிறது.

மன்னார்குடி அருகேயுள்ள வடுவூர் ஏரியில் தண்ணீர் அளவு அதிகமாக இருப்பதால், ஒரத்தநாடு அருகேயுள்ள உளூர் ஏரிக்கு வலசை பறவைகள் கணிசமான அளவுக்கு வந்து தங்கியுள்ளன. தஞ்சாவூர் அருகேயுள்ள சமுத்திரம் ஏரியில் வெங்காயத்தாமரை பரவலாக படர்ந்திருப்பதால், அருகில் குளிச்சப்பட்டு கிராமத்திலுள்ள பொன்னன் ஏரியில் தஞ்சமாகிவிட்டன. இதனால், உளூர் ஏரி மற்றும் குளிச்சப்பட்டு பொன்னன் ஏரியில் வழக்கத்தை விட வலசை பறவைகளின் வருகை அதிகமாக உள்ளது. என்றாலும், கடந்த ஆண்டை விட நடப்பாண்டு வலசை பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. இதனால், வழக்கமாக வலசை பறவைகளைக் காணும் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள், சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறுகையில், தஞ்சாவூர் அருகேயுள்ள சமுத்திரம் ஏரி, கள்ளப்பெரம்பூர் ஏரி, குளிச்சப்பட்டு பொன்னன் ஏரி ஆகியவற்றில் பறவைகள் கணக்கெடுப்பு செய்யப்பட்டது. இந்த ஏரிகளில் கடந்த ஜனவரி மாதத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்புடன் ஒப்பிடுகையில், பிப்ரவரி மாதம் பறவைகளின் எண்ணிக்கை குறைவாகவே இருக்கிறது. கள்ளப்பெரம்பூர் ஏரியில் ஜனவரி மாதத்தில் மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பில் 1,128 பறவைகளைப் பார்த்தோம். பிப்ரவரி தொடக்கத்தில் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 79 வகைகளில் ஏறத்தாழ 700 பறவைகளையே பார்க்க முடிந்தது. இதேபோல, சமுத்திரம் ஏரியில் பிப்ரவரி 2 ஆம் தேதி எடுக்கப்பட்ட கணக்கெடுப்பில் 48 வகைகளில் 418 பறவைகளை மட்டுமே காண முடிந்தது. இது, கடந்த ஆண்டை விட குறைவு. இதனால், வழக்கமாக வரக்கூடிய பறவைகளில் கிட்டத்தட்ட 30 சதவீதம் குறைந்துள்ளது. 

வலசை பறவைகள் அதிகமாக வரக்கூடிய கள்ளப்பெரம்பூர் ஏரி, சமுத்திரம் ஏரி உள்ளிட்ட ஏரிகளில் மண் சார்ந்த தாவரங்களை விட ஆகாயத்தாமரை போன்ற வெளிநாட்டு ஆக்கிரமிப்பு செடிகள்தான் அதிகமாக இருக்கின்றன. இதனால், பறவைகளுக்குத் தேவையான இரைகளான பூச்சிகள் கிடைப்பதில்லை. இதுவும் பறவைகள் வருகை குறைவதற்குக் காரணம் எனக் கூறப்படுகிறது.

எனவே, ஏரிகளில் ஆகாயத்தாமரையை அகற்றி, மண் சார்ந்த தாவரங்களை வளர்ப்பது மட்டுமல்லாமல், பறவைகள் அமருவதற்கான மரங்களுடன் கூடிய சிறு திட்டுகளையும் உருவாக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தரப்பில் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
ABP Premium

வீடியோ

Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Imran Khan in Trouble: பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
பாக். முன்னாள் பிரதமர் இம்ரான் கானுக்கு தொடரும் கஷ்டகாலம்; ஊழல் வழக்கில் 17 ஆண்டுகள் சிறை
Ather Budget Scooter EL01: ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
ஓலா-க்கு போட்டியாக மலிவு விலை இ-ஸ்கூட்டரை களமிறக்கும் ஏதர்; எப்போது அறிமுகம்.? அம்சங்கள் என்ன.?
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
Embed widget