மேலும் அறிய

தஞ்சாவூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிலிருந்த 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்தது

’’மரத்தில் ஒரு புறத்தில் இருந்த கிளைகள், வேர்கள் அகற்றப்பட்டதால், மறுபுறத்தில் சுமை அதிகமாகிவிட்டதால், மரத்தின் ஒருபுறத்தில் பாரம் தாங்காமல் வேரோடு சாய்ந்துவிட்டது’’

தஞ்சாவூர் வீட்டு வசதி வாரிய குடியிருப்பிலிருந்த 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்தது. தஞ்சாவூர் புதிய வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியில் இருந்த 100 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழைமையான ஆலமரம் பலத்த மழையால் வேரோடு சாய்ந்தது. தஞ்சாவூர் புதிய வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் சாலையோரம் சுமார் 100 ஆண்டுகளுக்கு மேல் மிகவும் பழமையான ஆலமரம் இருந்தது. படர்ந்து விரிந்து காணப்பட்ட இந்த மரம் அப்பகுதியில் மிகப் பெரிய நிழலாகவும், கோடை காலத்தில் இதமாகவும் இருந்து வந்தது. இந்த ஆலமரம் அப்பகுதிக்கு அடையாளமாக இருப்பதால், ஆலமரத்தடி பேருந்து நிறுத்தம் என அழைக்கப்படுகிறது. இந்த ஆலமரத்தால் அப்பகுதி பெயர் பெற்று வந்தது.

தஞ்சாவூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிலிருந்த 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்தது

இந்நிலையில், சாலை அகலப்படுத்தின் காரணமாக சாலையோரம் இருந்த ஆலமரத்தின் கிளைகள், வேர்கள் அகற்றப்பட்டன. இவை படிப்படியாக அகற்றப்பட்டு வந்ததால், ஒரு புறத்தில் கிளைகளும், வேர்களும், விழுதுகளும் இன்றி இருந்து வந்தது. இதனால், இந்த மரம் தந்த நிழல் பரப்பும் குறைந்துவிட்டது. மறுபுறத்தில் மட்டுமே கிளைகளும், வேர்களும் மட்டுமே இருந்தது. இந்நிலையில், தஞ்சாவூரில் கடந்த சில நாட்களாக நள்ளிரவு முதல் தொடர்ச்சியாக பலத்த மழை பெய்து வந்தது. தொடர் மழையால் இந்த ஆலமரம் திடீரென வேரோடு சாய்ந்து விழுந்தது. சாலையில் விழாமல் மறுபுறம் சாய்ந்ததால், போக்குவரத்தில் பாதிப்பு இல்லை. ஆனால், ஆலமரத்தை ஒட்டியிருந்த தேநீர் கடை, 2 இருசக்கர வாகனங்கள் ஆகியவை சேதமடைந்தன. அப்போது, அப்பகுதியில் நின்று கொண்டிருந்த 3 பேருக்கு லேசான காயம் ஏற்பட்டது. மேலும், மின்கம்பிகள் அறுந்து விழுந்ததால், மின்சார விநியோகம் தடைப்பட்டது.


தஞ்சாவூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிலிருந்த 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்தது

காயமடைந்தவர்கள் அப்பகுதியினர் 108 ஆம்புலன்ஸ் மூலம் தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தகவலறிந்த மருத்துவக்கல்லூரி காவல் நிலையத்தினரும், தஞ்சாவூர் தீயணைப்பு நிலையத்தினரும்  சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்,  தஞ்சாவூரில் 100 ஆண்டுகளுக்கு மேல் பழமையான ஆலமரம் பெயர் பெற்றதாகும். இந்த ஆலமரம் படர்ந்து விரிந்து இருந்ததால், மரத்தடியின் கீழ் பொது மக்கள் இளைப்பாரவும், வாகனங்கள் நிறுத்தி, ஒய்வு எடுத்து வந்தனர். அதன் பின்னர், மரத்தடியின் கீழ் கடைகள் அமைத்தனர்.


தஞ்சாவூர் வீட்டு வசதி வாரியக் குடியிருப்பிலிருந்த 100 ஆண்டுகள் பழைமையான ஆலமரம் சாய்ந்தது

அவர்கள், ஆலமரத்தின் விழுதுகள் விழாமல் இருப்பதற்காக, விழுதுகளை வெட்டி வந்தனர். இதனால் தாய் மரத்தின் தன்மை தளர்ந்து விட்டது.  மேலும், சாலை விரிவாக்கத்தின் போது, இந்த மரத்தில் ஒரு புறத்தில் இருந்த கிளைகள், வேர்கள் அகற்றப்பட்டதால், மறுபுறத்தில் சுமை அதிகமாகிவிட்டதால், மரத்தின் ஒருபுறத்தில் பாரம் தாங்காமல் வேரோடு சாய்ந்துவிட்டது. இது போன்ற மிகவும் பழமையானதும், தஞ்சாவூருக்கு பெருமை சேர்த்த ஆலமரத்தை மாவட்ட நிர்வாகம் கண்டு கொள்ளாமல் இருந்ததால், வேருடன் சாய்ந்து விட்டது. ஆலமரம் சாலையோரம் விழுந்திருந்தால், பெரும் உயிர்சேதம் ஏற்பட்டிருக்கும்  என்றனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மஹா வாராஹி அம்மனுக்கு ஆஷாட நவராத்திரி விழா
Recovery effort: 642 ஏக்கர் செங்கழுநீர் ஏரிக்கு மீண்டும் உயிர் கொடுக்க களமிறங்கிய மக்கள்! 3 ஹிட்டாச்சி இயந்திரங்களுடன் தூர்வாரும் பணி தீவிரம்
Recovery effort: 642 ஏக்கர் செங்கழுநீர் ஏரிக்கு மீண்டும் உயிர் கொடுக்க களமிறங்கிய மக்கள்! 3 ஹிட்டாச்சி இயந்திரங்களுடன் தூர்வாரும் பணி தீவிரம்
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
நெருப்பாய் சுட்டெரிக்கும் தஞ்சை: வறண்ட நீர்நிலைகள், தகிக்கும் வெயிலால் மக்கள் பெரும் அவதி
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்
தஞ்சை மாவட்டம் சிவகாமிபுரத்தில் பாசன வாய்க்கால் பாலத்தின் கீழ்ப்பகுதியில் விரிசல்... அச்சத்தில் மக்கள்

வீடியோ

நாகர்கோவில் LOCKUP DEATH உடற்கூராய்வில் அதிர்ச்சி! 3 போலீஸார் அதிரடி கைது!
பட்டப்பகலில் திருட்டு !கல்லாப்பெட்டி சூறையாடல்..மர்ம நபர் கைவரிசை..
+2 மாணவனுக்கு கத்திக்குத்து!சக மாணவர்கள் வெறிச்செயல்..அரசு பள்ளியில் பயங்கரம்
தவணை தொகை கட்ட தாமதம்! அசிங்கபடுத்திய வங்கி ஊழியர்கள்.. விவசாயி தற்கொலை
பெண் நிர்வாகி மீது தாக்குதல் !ஆடையை கிழித்த தவெகவினர்..கோவையில் வெடித்த மோதல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Meghalaya Project : ’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
’தவெக ஆட்சியை கவிழ்க்க சதி – ஆபரேஷன் மேகாலயா’ பெயருக்கான காரணம் என்ன?
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
NEET UG Result 2026: நீட் மறுதேர்வில் யார் முதலிடம், தேர்ச்சி சதவீதம், பெண்களே அதிகம், கட் ஆஃப்- முக்கிய ஹைலைட்ஸ்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
மாணவர்கள் உயர்கல்விக்கு பிணையில்லா கடன்: சிஎம் விஜய் திட்டம்!- தனி அலுவலர் நியமனம்!
Vaiko : என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
என் வாழ்க்கையில் நான் செய்த இரண்டு மிகப்பெரிய தவறுகள்.! பட்டியலிட்டு கொந்தளித்த வைகோ
Hyundai EV: ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
ரூ.12 லட்சம் பட்ஜெட்டில் 500KM ரேஞ்ச் - ஹுண்டாயின் காம்பேக்ட் எஸ்யுவி - மற்ற அம்சங்கள் எப்படி?
TVK Govt: ”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
”ப்ராஜெக்ட் மேகாலயா” தவெக ஆட்சிக்கு போட்ட ஸ்கெட்ச் - விசாரணையில் பிரபல ஊடகவியலாளர்
Rohit Sharma: ”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
”2027 ODI உலகக் கோப்பைக்கு நீங்க வேண்டாம்” ரோகித் சர்மாவிற்கு தகவல் சொன்ன பிசிசிஐ? ஜுலை.19
Cheapest Diesel SUV: நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
நாட்டின் மலிவான டீசல் எஸ்யுவி, 24KM மைலேஜ், ப்ரீமியம் அம்சங்கள், 3 ஸ்டார் ரேட்டிங் - EMI விவரங்கள்
Embed widget