மேலும் அறிய

செம மாஸ் காட்டிய திருவோணம் ஆட்டுச்சந்தை; பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனை

“மாடு வளர்த்தால் அடுத்த வருடத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆனா, ஆடு வளர்த்தால் அந்த வருடத்திலேயே பலன் கிடைக்கும்” - வியாபாரிகள்

 பொங்கல் பண்டிகையையொட்டி தஞ்சை மாவட்டம் திருவோணம் ஆட்டுச்சந்தையில் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கி சென்றதால் ஆடுகள் விற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

தஞ்சை மாவட்டம் திருவோணத்தில் நடைபெறும் மாடுகள், ஆடுகள் விற்பனை சந்தை மிகவும் பிரபலமானவை. மாவட்டத்தை சுற்றியுள்ள பகுதியில் இருந்து இங்கே விற்பனைக்காக கொண்டு வரும் நாட்டு மாடுகள், ஆடுகள் தரமாகவும் ஆரோக்கியத்துடனும் காணப்படுவதால் நல்ல வரவேற்பு உள்ளது. தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் வரும் வியாபாரிகள் திருவோணம் சந்தைக்கு வந்து மாடுகளை வாங்கி செல்கின்றனர்.

அதேபோல் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து ஆடுகளையும் வாங்கி செல்கின்றனர். திருவோணம் மாட்டுசந்தை, ஆட்டுச்சந்தை வாரம்தோறும் சனி, ஞாயிற்றுக்கிழமை ஆகிய 2 நாட்கள் நடைபெறும். இதில் பண்டிகை காலங்களில் சந்தையில் ஆடுகள் அதிகம் செம மாஸ் காட்டி விற்பனையாகும்.

புதுக்கோட்டை, நெய்வேலி, இடையாத்தி உள்ளிட்ட பல்வேறு என பகுதிகளை சேர்ந்த இறைச்சி வியாபாரிகளும் இங்கு வந்து ஆடுகளை மொத்தமாக வாங்கி செல்வது உண்டு. இதேபோல் ஆடு வளர்ப்பவர்களும், ஆடு விற்பனையை தொழிலாக கொண்டவர்களும் ஆடுகளை விற்பனைக்காக திருவோணம் சந்தைக்கு கொண்டு வருவார்கள். அந்த வகையில் பொங்கல் பண்டிகையையொட்டி திருவோணம் ஆட்டுச்சந்தை நேற்று களை கட்டியது. திருவோணம், பட்டுக்கோட்டை, ஒரத்தநாடு பகுதிகளை சுற்றியுள்ள பல கிராமங்களில் இருந்து ஆடுகள் விற்பனைக்காக கொண்டு வரப்பட்டன.

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்தவர்கள் மற்றம் பிற மாவட்டங்களை சேர்ந்த வியாபாரிகள் ஆடுகளை வாங்குவதற்காக வந்து இருந்தனர். வியாபாரிகள் போட்டி போட்டு ஆடுகளை வாங்கினர். இதனால் ஆடுகளை விற்றவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். கூடுதல் விலைக்கும் ஆடுகள் விற்பனையானது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த சந்தையில் நேற்று மட்டும் பல லட்சம் ரூபாய்க்கு ஆடுகள் விற்பனையானது. மற்ற நாட்களை விட பொங்கல் பண்டிகை வியாபாரம் என்பதால் கூடுதலாக 200 ஆடுகள் விற்பனையானது. விலைக்கு வாங்கப்பட்ட ஆடுகளை வியாபாரிகள் ஆட்டோக்கள், மினி லாரிகள், இருசக்கர வாகனங்களில் எடுத்து சென்றனர்.

அதேபோல் மாட்டு சந்தையிலும் மாடுகள் விற்பனை படுஜோராக நடைபெற்றது. பல்வேறு மாவட்டங்களில் இருந்து வியாபாரிகள் வந்திருந்து மாடுகளை வாங்கி சென்றனர். இதில் நாட்டு மாடுகள் தான் அதிகஅளவில் விற்பனைக்கு வந்தது. வண்டி இழுக்கும் ஜோடி மாடுகளையும் விவசாயிகள் ஆர்வத்துடன் வாங்கி சென்றனர். பெரிய லாரிகள் மூலமாக வெளிமாவட்டங்களுக்கும் மாடுகள் கொண்டு செல்லப்பட்டன.

இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், “மாடு வளர்த்தால் அடுத்த வருடத்தில் இருந்துதான் பலன் கிடைக்கும். ஆனா, ஆடு வளர்த்தால் அந்த வருடத்திலேயே பலன் கிடைக்கும். கிராம, நகரங்களில் ஆட்டு இறைச்சியின் தேவை அதிகரித்து வருகிறது. ஆட்டின் இறைச்சிக்கு மக்கள் மத்தியில் செம வரவேற்பு இருப்பதால் ஆடு வளர்ப்பினால் நல்ல லாபம் பார்க்க முடியும். விவசாயிகளின் அவசரத் தேவைக்குகூட ஒன்று, இரண்டு ஆடுகளை விற்று அந்த தேவையை பூர்த்தி செய்யலாம் என்றனர்.

ஆட்டு இறைச்சி வியாபாரிகள் தரப்பில் கூறுகையில், வாரம்தோறும் சந்தைக்கு வந்து இறைச்சிக்காக ஆடுகளை வாங்கி செல்வோம். தற்போதும் அதேபோல் ஆடுகள் வாங்கினோம். ரூ.6 ஆயிரம் முதல் ரூ.10 ஆயிரம் வரை ஆடுகளை வாங்கினோம். ஒவ்வொரு ஆடும் 6 கிலோ முதல் 12 கிலோ வரை இருந்தது. மற்ற நாட்களை விட ஆடுகளின் விலை அதிகமாக தான் இருந்தது என்று தெரிவித்தனர். இன்றும் (ஞாயிற்றுக்கிழமை) மாட்டு சந்தை, ஆட்டுச்சந்தை நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget