மேலும் அறிய

தஞ்சையில் தற்காலிக மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய பணிகள் மும்முரம்

தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்றுவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. முக்கியமாக போக்குவரத்து நெரிசல், மீன் கழிவு நீரால் துர்நாற்றம் போன்ற காரணங்களால் இந்த தற்காலிக மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் கொண்டிராஜபாளையம் அகழி கரைபகுதியில் தற்காலிக மீன் மார்க்கெட் அமைக்கப்பட்டு இயங்கி வருகிறது. இந்த தஞ்சை மீன் மார்க்கெட்டுக்கு நாகை, தூத்துக்குடி, ராமேஸ்வரம், சென்னை மற்றும் ஆந்திரா உள்ளிட்ட பல்வேறு பகுதியில் இருந்து கடல் மற்றும் உள்நாட்டு மீன் வகைகள் வருகின்றன. மேலும் கள்ளக்குறிச்சி, வேலூர் ஆகிய இடங்களில் இருந்தும், தஞ்சை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் இருந்தும் உயிர் கெண்டை மீன்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.

தற்காலிக மீன்மார்க்கெட்டில் ஏராளமான சில்லறை விற்பனை கடைகள் செயல்பட்டு வருகின்றன. பழைய மீன்மார்க்கெட் முன்பு மொத்த மீன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. செவ்வாய், வெள்ளிக்கிழமைகளை தவிர மற்ற நாட்களில் மக்கள் அதிகளவில் வந்து மீன்களை வாங்கி செல்வார்கள். ஞாயிற்றுக்கிழமை மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும். அன்று மற்ற நாட்களை விட அதிகளவில் விற்பனை ஆகும். மீன் வாங்க வருபவர்கள் இருசக்கர வாகனங்களில் தான் அதிகபட்சம் வருகின்றனர். தற்காலிக மீன்மார்க்கெட் முன்பு சாலையோரத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர்.


தஞ்சையில் தற்காலிக மீன் மார்க்கெட்டை இடமாற்றம் செய்ய பணிகள் மும்முரம்

அவர்கள் மீன்கள் வாங்கி சுத்தம் செய்து திரும்பி வர குறைந்தபட்சம் அரை மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இப்படி சாலையோரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்பவர்கள் திரும்பி வர தாமதம் ஆவதால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. ஒரு வாகனத்திற்கு பின்னால் மற்றொரு வாகனத்தை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் கும்பகோணம் பகுதியில் இருந்து தஞ்சைக்கு வரக்கூடிய பஸ்கள், லாரிகள் மற்றும் இருசக்கர வாகனங்கள், ஆட்டோ போன்றவை இப்பகுதியை கடந்து செல்ல முடியாமல் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும் மீன்மார்க்கெட்டில் இருந்து மீன்கள் கழுவிய கழிவு நீர்,  தொட்டிகளில் தண்ணீர் ஊற்றி உயிர் மீன் வைத்து பின்னர் அந்த தண்ணீரையும் சாலையோரத்தில் ஊற்றி விடுகின்றனர்.

இப்படி கழிவு நீர் தேங்கி நிற்பதால் அப்பகுதி முழுவதம் துர்நாற்றம் வீசி வருகிறது. இதனால் தற்காலிக மீன்மார்க்கெட்டை வேறு இடத்திற்கு மாற்ற வேண்டும் என பொதுமக்கள் மற்றும் பல்வேறு அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில் மக்களின் கோரிக்கையை நிறைவேற்றும் வகையில் தற்காலிக மீன் மார்க்கெட்டை வேறொரு இடத்திற்கு மாற்ற மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளது.

அதன்படி கொண்டிராஜபாளையம் பகுதியிலேயே வெள்ளை பிள்ளையார் கோவில் பின்புறமும் ஏற்கனவே மாநகராட்சி சார்பில் திருமண மண்டபம் கட்டுவதற்காக பணிகள் தொடங்கப்பட்டு, பாதியிலேயே நிறுத்தப்பட்ட இடத்தில் தற்காலிக மீன் மார்க்கெட்டை மாற்ற முடிவு செய்யப்பட்டது.

அதன்படி தற்காலிக மீன் மார்க்கெட்டை இடமாற்றுவதற்கான பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. சில்லறை கடைகள் வரிசையாக அமைக்கவும், அந்த கடைகளுக்கு பின்புறம் மீன்கள் வெட்டும் இடம் அமைக்கவும் இடம் ஒதுக்கப்பட்டு, தகரத்தால் மேற்கூரை அமைக்கப்பட்டு பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது. மேலும் மண்ணில் கழிவுநீர் தேங்காமல் நிற்பதற்கு வசதியாக சிமெண்டு தளமும் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இருசக்கர வாகனங்களை நிறுத்துவதற்கும் இடவசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த இடத்திற்கு தற்காலிக மீன்மார்க்கெட் இடமாற்றம் செய்யப்பட்டால் கொண்டிராஜபாளையம் பகுதியில் போக்குவரத்து நெரிசல் குறைய வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget