மேலும் அறிய

வருமானத்தை உயர்த்தும் கரும்புசாறு... பதப்படுத்தி தொழில் முனைவோர் ஆக தொழில்நுட்பங்கள்!

அறுசுவை மிக்க ஆரோக்கிய பானம் கரும்புச்சாறு. கரும்பு சாறினை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த முடியும் என தஞ்சை மாவட்ட வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அறுசுவை மிக்க ஆரோக்கிய பானம் கரும்புச்சாறு... கண்ணாடி பாட்டில்களில் பதப்படுத்தி தொழில் முனைவோர் ஆக தொழில் நுட்பங்களை வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளனர். கரும்புச்சாறு மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இது பல சத்துக்களையும், வைட்டமின்களையும், தாது பொருட்களையும் கொண்ட நல்ல அறுசுவை மிக்க ஆரோக்கிய பானம். சந்தையில் கிடைக்கும் மற்ற செயற்கை பானங்களில் வெறும் சர்க்கரை, சிட்ரிக் அமிலம் மற்றும் நிறமிகளும், மணத்திற்கான வேதிப்பொருட்கள் மட்டுமே இருக்கும்.


வருமானத்தை உயர்த்தும் கரும்புசாறு... பதப்படுத்தி தொழில் முனைவோர் ஆக தொழில்நுட்பங்கள்!

எனவே கரும்பு சாறினை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த முடியும் என தஞ்சை மாவட்ட வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். கரும்பு சாறு நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்கள் விரும்பி அருந்தும் சுவைமிக்க சத்துணவு பானம் ஆகும். கரும்பு சாறில் சர்க்கரை மற்றும் மாவு பொருட்கள் அதிகமாக இருப்பதால் அதனை 6 மணி நேரத்திற்கு மேல் வைத்திருந்தால் கெட்டுவிடும். இதை முறையாக எளிய முறையில் பதப்படுத்தி பின்னர் உபயோகப்படுத்த முடியும். இதனை நான்கு மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.


வருமானத்தை உயர்த்தும் கரும்புசாறு... பதப்படுத்தி தொழில் முனைவோர் ஆக தொழில்நுட்பங்கள்!

கரும்பின் தோலினை நீக்குதல்:

கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வெளிப்புறத் தோலை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அழுக்கில்லாத சாறு கிடைக்கும்.

சாறு பிழிதல்:

இயந்திரங்கள் மூலம் கரும்புச் சாற்றினை பிழிந்து வடிகட்டி வைக்க வேண்டும்.

கரும்புச்சாறில் சுவையைக் கூட்டுதல்:

கரும்பு சாற்றின் சுவையைக் கூட்ட எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பிழிய வேண்டும். 20 கிலோ கரும்புக்கு 5 எலுமிச்சையும், 100 கிராம் இஞ்சியும் சாறு பிழியும் இயந்திரத்தில் கரும்பு சாற்றோடு சேர்க்க வேண்டும்.

வடிகட்டுதல்:

கரும்பு சாறு பிழிந்து எடுத்தவுடன் அதில் இருக்கும் அழுக்கு, தூசு மற்றும் துகள்களை வடி கட்ட வேண்டும். வடிகட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

சூடுபடுத்துதல்:

வடிகட்டிய சாறினை 80 டிகிரி வெப்ப நிலையில் 10 நிமிடங்கள் சூடாக்க வேண்டும். 80 டிகிரிக்கு மேல் சூடாக்கினால் சாற்றின் சுவை மாறிவிடும். சூடாக்கும்போது மிதந்து வரும் அழுக்கினை நீக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

பதப்படுத்துவதற்கு சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள்:

சாறு இயல்பான வெப்ப நிலையில் இருக்கும்போது இரண்டாம் நிலை உணவு பதப்படுத்தும் வேதிப்பொருட்களை சேர்க்க வேண்டும். 100 மில்லி கொண்ட கரும்பு சாறில் மொத்த சர்க்கரை அளவு 11.5, அஸ்கார்பிக் அமிலம் 1.5 , பாஸ்பரஸ் 6.8, இரும்பு 0.5 , சுண்ணாம்பு 2.1 சதம் இருக்கும்.

கண்ணாடி பாட்டில்களில் சாறு நிரப்புதல்:

சுத்தம் செய்யப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் 10-15 மில்லி மீட்டர் இடைவெளி விட்டு நிரப்ப வேண்டும் சாறு நிரப்பப்பட்ட பாட்டில்களை 10 நிமிடம் சூடான நீரில் அல்லது ஆவியில் வைக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பானங்களை விவசாயிகள் வீட்டு விசேஷங்களுக்கும், சொந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தி செலவினை குறைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக உபயோகப்படுத்தலாம்.


தலைப்பு செய்திகள்

தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
தஞ்சாவூரில் கண்களை கட்டிக் கொண்டு மாதர் சங்கம், மாணவர் சங்கம் போராட்டம்: எதற்காக தெரியுங்களா?
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம்: மனித சங்கிலி அமைத்து உழவர்கள் பாதுகாப்பு சங்கத்தினர் போராட்டம்
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
கும்பகோணத்தில் லாரி உரிமையாளர்கள் திடீர் தர்ணாவால் பரபரப்பு
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்
உயர்நீதிமன்ற உத்தரவை நடைமுறைப்படுத்தக் கோரி சிஐடியு ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
ரேசன் கடையில் கைரேகை, கருவிழி பதிவாகலயா? கவலை வேண்டாம்.. புதிய முறை விரைவில் அறிமுகம்!
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
மாநாட்டில் மாஸ் காட்டிய CM விஜய்!.! அமித்ஷா முன் நடந்தது என்ன? திரும்பிப் பார்த்த தென்மாநில முதல்வர்கள்
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
விவசாயிகளுக்கு ஹாப்பி நியூஸ்! நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் 899 ஆக உயர்த்தப்படும் - அமைச்சர் வெங்கட்ரமணன் அறிவிப்பு
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
Vijay Sethupathy: விக்ரம் வேதா படத்தில் நடிக்க மறுத்த விஜய் சேதுபதி... அப்புறம் எப்படி ஓகே சொன்னார்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
நேற்று சொன்ன சிஎம்.. இன்று தலைமைச் செயலகம் வந்த கார்கள் - என்னென்ன வண்டி? என்னென்ன ஸ்பெஷல்?
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
காவிரி நீர்: கர்நாடக சதி வலையில் தமிழகம் சிக்கக்கூடாது; என்னென்ன பிரச்சினைகள்? பட்டியலிட்ட அன்புமணி!
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
190 எம்எல்ஏக்களிடம் ஏற்கெனவே கார்; ஊதாரித்தனம்- நெல் கிடங்குக்கு காசு இல்லை, இதுக்கு இருக்கா? சீமான் சரமாரி கேள்வி
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
மாஸ் காட்டும் ஐஐடி மெட்ராஸ்! பொறியியல் தாண்டி மருத்துவக் கல்வி- ஏன்? என்ன பயன்?
Embed widget