மேலும் அறிய

வருமானத்தை உயர்த்தும் கரும்புசாறு... பதப்படுத்தி தொழில் முனைவோர் ஆக தொழில்நுட்பங்கள்!

அறுசுவை மிக்க ஆரோக்கிய பானம் கரும்புச்சாறு. கரும்பு சாறினை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த முடியும் என தஞ்சை மாவட்ட வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர்.

அறுசுவை மிக்க ஆரோக்கிய பானம் கரும்புச்சாறு... கண்ணாடி பாட்டில்களில் பதப்படுத்தி தொழில் முனைவோர் ஆக தொழில் நுட்பங்களை வேளாண் துறையினர் விவசாயிகளுக்கு தெரிவித்துள்ளனர். கரும்புச்சாறு மிகுந்த மருத்துவ குணம் கொண்டது. இது பல சத்துக்களையும், வைட்டமின்களையும், தாது பொருட்களையும் கொண்ட நல்ல அறுசுவை மிக்க ஆரோக்கிய பானம். சந்தையில் கிடைக்கும் மற்ற செயற்கை பானங்களில் வெறும் சர்க்கரை, சிட்ரிக் அமிலம் மற்றும் நிறமிகளும், மணத்திற்கான வேதிப்பொருட்கள் மட்டுமே இருக்கும்.


வருமானத்தை உயர்த்தும் கரும்புசாறு... பதப்படுத்தி தொழில் முனைவோர் ஆக தொழில்நுட்பங்கள்!

எனவே கரும்பு சாறினை பதப்படுத்தி நீண்ட நாட்களுக்குப் பயன்படுத்த முடியும் என தஞ்சை மாவட்ட வேளாண் துறையினர் தெரிவித்துள்ளனர். கரும்பு சாறு நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள மக்கள் விரும்பி அருந்தும் சுவைமிக்க சத்துணவு பானம் ஆகும். கரும்பு சாறில் சர்க்கரை மற்றும் மாவு பொருட்கள் அதிகமாக இருப்பதால் அதனை 6 மணி நேரத்திற்கு மேல் வைத்திருந்தால் கெட்டுவிடும். இதை முறையாக எளிய முறையில் பதப்படுத்தி பின்னர் உபயோகப்படுத்த முடியும். இதனை நான்கு மாதங்களுக்கு பயன்படுத்தலாம்.


வருமானத்தை உயர்த்தும் கரும்புசாறு... பதப்படுத்தி தொழில் முனைவோர் ஆக தொழில்நுட்பங்கள்!

கரும்பின் தோலினை நீக்குதல்:

கத்தி அரிவாள் போன்ற ஆயுதங்களை பயன்படுத்தி வெளிப்புறத் தோலை நீக்க வேண்டும். இவ்வாறு செய்வதால் அழுக்கில்லாத சாறு கிடைக்கும்.

சாறு பிழிதல்:

இயந்திரங்கள் மூலம் கரும்புச் சாற்றினை பிழிந்து வடிகட்டி வைக்க வேண்டும்.

கரும்புச்சாறில் சுவையைக் கூட்டுதல்:

கரும்பு சாற்றின் சுவையைக் கூட்ட எலுமிச்சை சாறு மற்றும் இஞ்சி ஆகியவற்றை சேர்த்து பிழிய வேண்டும். 20 கிலோ கரும்புக்கு 5 எலுமிச்சையும், 100 கிராம் இஞ்சியும் சாறு பிழியும் இயந்திரத்தில் கரும்பு சாற்றோடு சேர்க்க வேண்டும்.

வடிகட்டுதல்:

கரும்பு சாறு பிழிந்து எடுத்தவுடன் அதில் இருக்கும் அழுக்கு, தூசு மற்றும் துகள்களை வடி கட்ட வேண்டும். வடிகட்டியை அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டும்.

சூடுபடுத்துதல்:

வடிகட்டிய சாறினை 80 டிகிரி வெப்ப நிலையில் 10 நிமிடங்கள் சூடாக்க வேண்டும். 80 டிகிரிக்கு மேல் சூடாக்கினால் சாற்றின் சுவை மாறிவிடும். சூடாக்கும்போது மிதந்து வரும் அழுக்கினை நீக்கி இயல்பு நிலைக்கு கொண்டு வர வேண்டும்.

பதப்படுத்துவதற்கு சேர்க்கப்படும் வேதிப்பொருட்கள்:

சாறு இயல்பான வெப்ப நிலையில் இருக்கும்போது இரண்டாம் நிலை உணவு பதப்படுத்தும் வேதிப்பொருட்களை சேர்க்க வேண்டும். 100 மில்லி கொண்ட கரும்பு சாறில் மொத்த சர்க்கரை அளவு 11.5, அஸ்கார்பிக் அமிலம் 1.5 , பாஸ்பரஸ் 6.8, இரும்பு 0.5 , சுண்ணாம்பு 2.1 சதம் இருக்கும்.

கண்ணாடி பாட்டில்களில் சாறு நிரப்புதல்:

சுத்தம் செய்யப்பட்ட கண்ணாடி பாட்டில்களில் 10-15 மில்லி மீட்டர் இடைவெளி விட்டு நிரப்ப வேண்டும் சாறு நிரப்பப்பட்ட பாட்டில்களை 10 நிமிடம் சூடான நீரில் அல்லது ஆவியில் வைக்கலாம். இவ்வாறு தயாரிக்கப்பட்ட பானங்களை விவசாயிகள் வீட்டு விசேஷங்களுக்கும், சொந்த உபயோகத்திற்கும் பயன்படுத்தி செலவினை குறைத்து மதிப்பு கூட்டப்பட்ட பொருள்களாக உபயோகப்படுத்தலாம்.


மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Namakkal woman bus fall video | பேருந்தில் இருந்து தவறி விழுந்த பெண்! பதறவைக்கும் CCTV காட்சிTeam India Victory Parade | தோளில் உலகக் கோப்பை! இந்திய வீரர்களின் ENTRY! கட்டுக்கடங்காத கூட்டம்Subramanian Swamy | ”சோனியா, ராகுலுடன் டீல்! கொலை வழக்கு பயமா மோடி?” பற்றவைத்த சுப்ரமணியன் சுவாமிTN Cabinet Reshuffle | பதறும் அமைச்சர்கள்.. கட்டம் கட்டிய ஸ்டாலின்! அமைச்சரவையில் மாற்றம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Britain Election 2024: இங்கிலாந்து தேர்தலில் அடித்து நொறுக்கும் எதிர்க்கட்சி - ரிஷி சுனக்கின் பிரதமர் பதவி காலி..!
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
Breaking News LIVE, June 5: தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு மழை இருக்கு - வானிலை மையம் சொன்ன தகவல்
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
நாட்டுக்கோழி பண்ணை வைக்க ஆர்வமா? அரசு தரும் மானியம் பற்றி தெரியுமா ? நீங்கள் செய்ய வேண்டியது இதுதான்..
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Elon Musk: மறுபடியும் போச்சா! இந்திய முதலீட்டை நிறுத்தி வைத்த எலான் மஸ்கின் டெஸ்லா, காரணம் என்ன?
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Vikravandi By-Election: விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தல் - திமுக வேட்பாளருக்கு ஆதரவாக ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
Coolie Shooting starts: கூலி பராக்! அடுத்த ஆட்டத்துக்கு தயாரான தலைவர்... இன்று முதல் படப்பிடிப்பு ஆரம்பம்!
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
கவுண்டம் பாளையம் படம் வெளிவராது; மிரட்டுகிறார்கள்; இனி முடிவை பாருங்கள் - நடிகர் ரஞ்சித்
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
EPS Condolence: ”இதற்காகத்தான் அதிமுக நிர்வாகி வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார்” - இபிஎஸ் கூறும் பகீர் பின்னணி!
Embed widget