மேலும் அறிய

அறிவிக்கப்படாமல் அடிக்கடி மின்தடை, அதிகாரிகளின் அலட்சியம் - பூதலூர் அருகே மக்கள் திடீர் சாலை மறியல்

தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே அடிக்கடி ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் அருகே அடிக்கடி ஏற்பட்டு வரும் அறிவிக்கப்படாத மின்வெட்டை கண்டித்து பொதுமக்கள் திடீர் சாலை மறியல் செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. 

தஞ்சாவூர் மாவட்டம் பூதலுார் பகுதியில் தொடர்ந்து நான்கு நாட்களாக, அறிவிக்கப்படாத மின்வெட்டு ஏற்பட்டு வந்தது. ஒருநாளைக்கு குறைந்தது 6 அல்லது 7 முறை மின்சாரம் நிறுத்தப்பட்டு வந்தது. இதனால் வியாபாரிகள் பெரும் அவதிக்கு உள்ளாகினர். மேலும் காலையில் 7 மணிக்கு தொடங்கி 9 மணிக்குள் பலமுறை மின்சாரம் நிறுத்தப்பட்டதால் குடும்பத் தலைவிகள் வெகுவாக அவதிக்குள்ளாகினர். பள்ளிகள் திறக்கப்பட்டுள்ள நிலையில் காலைவேளையில் சமையல் பணிகள் மின்வெட்டால் பாதிக்கப்பட்டதால் அவதியடைந்து வந்தது. இதுகுறித்து பொதுமக்கள் மின் வாரிய அதிகாரிகளிடம் கேட்ட போது, மிகவும் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள், வணிகர் சங்கத்தினர், பூதலுார் மக்கள் உரிமை கூட்டமைப்பு, கார்,ஆட்டோ ஓட்டுனர் உரிமையாளர் சங்கத்தினர் இணைந்து பூதலுார் – செங்கிப்பட்டி சாலையில் வீரமசன்பேட்டை மின்வாரிய துணை மின் நிலைய அலுவலகம் முன்பு திடீரென்று சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, பூதலுார் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெகதீசன், வருவாய் துறையினர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை சமாதானம் செய்தனர். பிறகு, வீரமரசன்பேட்டை மின்சார வாரிய உதவி பொறியாளர் பாஸ்கரன், போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி, இனி வரும் காலங்களில் இதுபோன்ற மின்வெட்டு இருக்காது என உறுதி அளித்தார். இந்த உறுதிமொழியின் பெயரில் சாலை மறியல் போராட்டத்தை பொதுமக்கள் கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இதுகுறித்து மக்கள் உரிமை கூட்டமைப்பு தலைவர் பழ.ராஜ்குமார் கூறுகையில், ஒரு நாளைக்கு குறைந்தது 5 முறைக்கு மேல் மின்தடை செய்யப்படுகிறது. காலை வேளையில் மின்தடை ஏற்படுவதால் குழந்தைகளை பள்ளிக்கு சரியான நேரத்தில் அனுப்ப முடியாமல் குடும்பத் தலைவிகள் தவிக்கின்றனர். ஒருமுறை மின்தடை செய்யப்பட்டால் குறைந்தது அரை மணி நேரத்திற்கு பின்னர்தான் வருகிறது. இதேபோல் அடிக்கடி மின்தடை செய்யப்படுவதால் வியாபாரிகள் பெருமளவில் பாதிக்கப்படுகின்றனர்.

டிபன் கடைகள், மளிகை கடைகள், ஜவுளி கடைகள், வங்கிகள் என்று ஏராளமான வர்த்தக நிறுவனங்கள் பூதலூர் பகுதியில் செயல்பட்டு வருகிறது. இப்படி அறிவிக்கப்படாத மின்தடையால் அனைத்து தரப்பினரும் வெகுவாக அவதிக்கு உள்ளாகின்றனர். இதற்கு காரணம் மிகவும் பழமையான மின்சாதனப் பொருட்கள் பயன்பாட்டில் உள்ளதுதான். எனவே இதுபோன்ற மிகவும் பழமையாக மின்சாதனப் பொருட்களை உடன் மாற்றி புதிதாக பொருத்த வேண்டும். மாதத்திற்கு ஒருமுறை பராமரிப்பு பணிகளுக்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. அந்த நேரத்தில் இதுபோன்ற பழமையான மின்சாதன பொருட்களை மாற்றி புதிய பொருட்களை பொருத்தும் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

மின்தடை குறித்து மின்வாரிய அதிகாரிகளிடம் கேட்டால் உரிய முறையில் பதில் அளிப்பதில்லை. இதுபோன்ற நிலை இனியும் தொடர்ந்தால் மக்களை அதிகளவில் திரட்டி பெரிய அளவில் போராட்டம் நடத்தப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK - காங்கிரஸ் கூட்டணி?“ செங்கோட்டையனை சந்தித்தேன்..” திருநாவுக்கரசர் பளீச் | Sengottaiyan | Thirunavukkarasar on Sengottaiyan |
சமந்தாவை கரம் பிடித்த ராஜ் கோவையில் இன்று டும் டும் முதல் மனைவி போட்ட ட்வீட் | Raj Nidimoru Samantha Marriage
நாகூர் தர்கா கந்தூரி விழா ஆட்டோவில்  வந்திறங்கிய AR ரகுமான்  AR Rahman in Nagapattinam Nagore Dargah
”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
ADMK EPS: ”ஷூட்டிங் நடத்தினால் மட்டும் போதாது.. களத்திற்கு செல்ல வேண்டும்!” ரவுண்டு கட்டிய இபிஎஸ்
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
செம்பரம்பாக்கம் ஏரிக்கு அதிகரிக்கும் நீர்வரத்து! டிட்வா புயல் எச்சரிக்கை: சென்னைக்கு ரெட் அலர்ட்!
TN Rain School Holiday:  மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில்  பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
TN Rain School Holiday: மாணவர்களுக்கு ஹேப்பி நியூஸ்! கனமழை எச்சரிக்கை! நாளை 4 மாவட்டங்களில் பள்ளி கல்லுரிகளுக்கு விடுமுறை..
Red Alert: சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
சென்னைக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை - 20 செ.மீ., மேல் அதிகனமழை பெய்யும் அபாயம் - மக்களே உஷார்
Kongu Region : ‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
‘கொங்கு மண்டலம் யாருக்கு’ மோதும் முக்கிய தலைகள்..!
Chennai Heavy Rain: சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
சென்னையில் 8 மணி நேரமாக தொடரும் மழை... தயார் நிலையில் 103 படகுகள்- களத்தில் 22ஆயிரம் ஊழியர்கள்
MK STALIN: மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
மழையால் பாதித்த பயிர்களுக்கு நிவாரணம்... விவசாயிகளுக்கு முக்கிய அறிவிப்பை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்
Chennai Heavy Rain: 2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது மிக கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
2 நாள் சென்னையை வைத்து செய்யப்போகுது கனமழை.! ஆரஞ்ச் அலர்ட் - வானிலை மையம் திடீர் அறிவிப்பு
Embed widget