மேலும் அறிய

தஞ்சை : கழிவறை பொது ஏலம் விவகாரம்.. ஆடிட்டர் கொலை வழக்கு.. 4 பேர் கொண்ட கும்பல் கைது!

கழிவறை பொது ஏலத்தில் ஆடிட்டர் மகேஸ்வரனுக்கு சாதகமாக முடிந்து அந்த மாநகராட்சி கழிவறை கான்ட்ராக்ட் அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் ஏலத்தில் பங்கேற்ற ஒரு தரப்பினருக்கும், மகேஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது.

தஞ்சாவூரில் கழிவறை பொது ஏலம் தொடர்பாக ஆடிட்டர் மகேஸ்வரன் கொல்லப்பட்ட வழக்கில் நான்கு பேர் கொண்ட கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். 

முன்னதாக, தஞ்சை கரந்தையில் உள்ள சேர்வைக்காரன் தெருவை சேர்ந்தவர் மகேஸ்வரன். அவருக்கு வயது 45. இவர் ஆடிட்டராக உள்ளார். இவர் தன் வீட்டுக்கு அருகில் விவசாயப் பண்ணை ஒன்று வைத்துள்ளார். இதில் ஆடு, கோழி, தென்னை மரங்கள் உட்பட பல மரங்களை பராமரித்து வளர்த்து வருகிறார். இந்த பண்ணைக்கு எதிரில் மாநகராட்சி குளியல் மற்றும் கழிவறை கட்டிடம் உள்ளது.

இந்த கழிவறையும் பொது ஏலத்திற்கு வந்துள்ளது. இந்த ஏலத்தில் ஆடிட்டர் மகேஸ்வரனும் கலந்து கொண்டுள்ளார். ஏலத்தில் ஆடிட்டர் மகேஸ்வரனுக்கு சாதகமாக முடிந்து அந்த மாநகராட்சி கழிவறை கான்ட்ராக்ட் அவருக்கு கிடைத்துள்ளது. இதனால் ஏலத்தில் பங்கேற்ற ஒரு தரப்பினருக்கும், மகேஸ்வரனுக்கும் இடையே முன்விரோதம் ஏற்பட்டுள்ளது. 

தஞ்சை : கழிவறை பொது ஏலம் விவகாரம்.. ஆடிட்டர் கொலை வழக்கு.. 4 பேர் கொண்ட கும்பல் கைது!

இந்த நிலையில், ஆடிட்டர் மகேஸ்வரன் நேற்று இரவு தனது பண்ணையை வலம் வந்து மரங்களை எல்லாம் பார்த்துவிட்டு பண்ணையிலே உள்ள அறையில் ஓய்வு எடுத்துக் கொண்டு இருந்தார். அப்போது அடையாளம் தெரியாத மூன்று பேர் கொண்ட கும்பல் மகேஸ்வரனின் பண்ணைக்குள் புகுந்துள்ளது. மகேஸ்வரன் ஓய்வு எடுத்துக்கொண்டிருந்த அறைக்குள் அந்த கும்பல் புகுந்தது. 

மகேஸ்வரன் என்ன நடக்கிறது என்று சுதாரிப்பதற்குள் அந்த கும்பல் தாங்கள் வைத்திருந்த அரிவாளால் மகேஸ்வரனை சரமாரியாக வெட்டிக் கொன்றது. மகேஸ்வரனை வெட்டிக்கொன்ற உடனே அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடியது. ஆடிட்டர் மகேஸ்வரனின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடிவந்து பார்த்தபோது மகேஸ்வரன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இதையடுத்து, போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு விரைந்த தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா தலைமையிலான போலீசார் மகேஸ்வரன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தனிப்படை அமைத்து தேடி வந்தனர். இந்தநிலையில் கார்த்திக், ரஞ்சித், அர்ஜுனன் மற்றும் மணிகண்டன் ஆகியோரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த வழக்கில் யாருக்கேனும் தொடர்பு உள்ளதா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது. 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget