மேலும் அறிய

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிடில் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது - மூத்த பொறியாளர் பரந்தாமன்

மேகதாதுவில் அணை கட்டி விட்டால், 67 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு வராது. அவர்கள் இஷ்டத்திற்கு தான் தண்ணீரை திறப்பார்கள்.

மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிடில் தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது என்று தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க தஞ்சாவூர் கிளை தலைவர் பரந்தாமன் வேதனையுடன் தெரிவித்தார்.

தஞ்சாவூரில், தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூத்த பொறியாளர் சங்க, தஞ்சாவூர் கிளை சார்பில் தமிழக நீர்வள மேம்பாடு விழிப்புணர்வு மற்றும் கலந்துரையாடல் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சங்கத்தின் தலைவர் பரந்தாமன் தலைமை வகித்தார். செயலாளர் முரளி, இணை செயலாளர் அசோகன், பொருளாளர் வீரரமணி மற்றும் பலர் கலந்துக்கொண்டனர்.

கூட்டத்திற்கு பிறகு பரந்தாமன் நிருபர்களிடம் கூறியதாவது; தமிழகத்தில் சராசரி ஆண்டு மழை 925 மி.மீ., பெய்கிறது. இதனால், ஆண்டு ஒன்றுக்கு 2,500 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது. ஆனால், தமிழகத்திற்கு தண்ணீர் தேவை என்பது 1,260 டி.எம்.சி., மட்டுமே தான்.  இந்நிலையில்,  100 நீர்த்தேக்கங்கள், 40 ஆயிரம் கண்மாய்கள் மூலம் நமக்கு 1,058 டி.எம்.சி., தண்ணீர் கிடைக்கிறது. தற்போது கண்மாய்கள், நீர்தேக்கங்கள் வண்டல் படிந்து 20 சதவீதம் தூர்ந்து போய் உள்ளது. இதனால், 142 டி.எம்.சி., தண்ணீர் அதில் தேக்க முடியாமல், தண்ணீர் கடலில் கலந்து விடுகிறது. இதனால் 916 டி.எம்.சி., தான் கிடைக்கிறது.


மேகதாது அணை கட்டுவதை தடுத்து நிறுத்தாவிடில் தமிழகத்தில் உணவுப் பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது - மூத்த பொறியாளர் பரந்தாமன்

எனவே, தமிழக அரசு துர்ந்துபோயுள்ள நீர்த்தேக்கங்கள், கண்மாய்களை ஒரு மீட்டர் அளவிற்கு அழப்படுத்தி துார்வாரினால், தண்ணீரை முழுமையாக தேக்க முடியும் என அரசுக்கு கருத்துரை அனுப்பியுள்ளோம். சரியான முறையில் நீர்தேக்கங்களை கையாண்டால் தமிழகம் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாத தன்னிறைவு மாநிலமாக விளங்கும்.

கர்நாடக அரசு மேகதாதுவில் அணை கட்ட முயற்சித்து வருகிறது. ஆனால் மேகதாது கர்நாடக மாநிலத்தின் எல்லையில் உள்ளது. மேகதாதுவிற்கு கீழே கர்நாடகவிற்கு எந்த தண்ணீர் தேவையும் இல்லை. 67 டி.எம்.சி., அளவு தண்ணீர் தேக்கும் அளவிற்கு கொண்ட அணையை கட்ட முயற்சிக்கிறார்கள். இதன் மூலம் பெங்களூருக்கு தண்ணீரை குடிநீருக்காக கொண்டு செல்ல உள்ளதாக கூறுகின்றனர்.

கபினி, கிருஷ்ணசாகர் அணையில் இருந்து திறக்கும் தண்ணீர் மேட்டூர் அணைக்கு தான் வருகிறது. ஆனால் மேகதாதுவில் அணை கட்டி விட்டால், 67 டி.எம்.சி., தண்ணீர் தமிழகத்திற்கு வராது. அவர்கள் இஷ்டத்திற்கு தான் தண்ணீரை திறப்பார்கள். தமிழக அரசு நீதிமன்றத்தையும், மத்திய நீர்வளத்துறை அமைச்சரையும் எம்.பி.,க்கள் மூலம் அணுகி அணை கட்டுவதால் ஏற்படும் பாதிப்பை உணர்த்த வேண்டும்.

தமிழகத்தில் காவிரி பாசனப் பரப்பில் மூன்றில் ஒரு பங்கு என 33 சதவீதம் காவிரி டெல்டாவில் உள்ளது. இங்கு பாசனம் நின்று போனால், தமிழ்நாட்டில் உணவுப் பஞ்சம் வருவதை யாராலும் தடுக்க முடியாது. மேலும், டெல்டா பாலைவனமாக மாறினால், எளிதாக மீத்தேன் போன்ற திட்டங்களை செயல்படுத்த மத்திய அரசு நினைக்கிறது. பாலாற்று படுகையில் ஆம்பூர் துவங்கி ராணிப்பேட்டை, வாலாஜா வரை தோல் பதனிடும் தொழிற் சாலைகளிலிருந்து வரும் ரசாயனக் கழிவுகள் பாலாற்றுப் படுகை பாழாகியுள்ளது.

இதனால் விவசாயம், கால்நடைகள் பாதிக்கப்படும். இதை போல நொய்யல் ஆற்றுப்படுகையும் பாழ்ப்பட்டு உள்ளது. எனவே தண்ணீர் பாழாகி வருவதை மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் இவ்வாறு அவர் தெரிவித்தார்.

 
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
ABP Premium

வீடியோ

Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP
அன்று நீதிபதி மீது காலணி எறிந்த Lawyer இன்று செருப்பால் அடிவாங்கினார் நீதிமன்ற வாசலில் சம்பவம் | Rakesh Kishore | Supreme Court | BR Gavai
”எந்த ஷா வந்தாலென்ன? தமிழ்நாடு Out of Control தான்” ஸ்டாலின் பதிலடி! | MK Stalin On Amit Shah

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
CM Stalin: கலைஞர் மகளிர் உரிமைத்தொகை - இன்று முதல் யார் யாருக்கு கிடைக்கும்? - முழு விவரம் இதோ
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Bus Accident: மீண்டும் பேருந்து கவிழ்ந்து கோர விபத்து - 9 பேர் பலி, 29 பேரின் நிலை என்ன?
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Tamilnadu Round Up: 17 லட்சம் பேருக்கு ரூ.1000, ரஜினி பிறந்தநாள், திருப்பரங்குன்றம் வழக்கு - தமிழ்நாட்டில் இதுவரை
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Kia Hybrid: சூப்பர் கார்.. ஹைப்ரிட் எடிஷனில் விற்பனையில் இறக்கும் கியா - உள்ளூர் உற்பத்தி, லாஞ்ச் எப்போது?
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Trump Modi: புதின் எண்ட்ரி.. கால் போட்ட ட்ரம்ப்.. முக்கிய விவகாரங்களை கையிலெடுத்த பிரதமர் மோடி
Japan sunami alert: மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
மீண்டும் அதிகாலையில் நில நடுக்கம்... மெகா சுனாமி அலர்ட்.? அலறி அடித்து ஓடும் மக்கள்
TVK Vijay ERD Meeting: ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
ஈரோட்டில் தவெக மாநாடு நடைபெறுமா.? அறநிலையத்துறை வடிவில் வந்த சிக்கல்.? என்ன பிரச்னை.?
Embed widget