மேலும் அறிய

நல்ல சமுதாயம் உருவாக இளைய தலைமுறையினரிடம் யாரை கொண்டு போய் சேர்க்க வேண்டும்

நல்ல சமூகம் உருவாக வ.உ.சி. பாரதியை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என பாரதி நினைவு நாள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: நல்ல சமூகம் உருவாக வ.உ.சி. பாரதியை இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்க்க வேண்டியது காலத்தின் கட்டாயம் என்று நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரியில் நடைபெற்ற பாரதி நினைவு நாள் கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது.

தஞ்சாவூர் பள்ளியக்ராரம் வெண்ணாற்றங் கரையில் அமைந்துள்ள நாவலர் ந.மு. வேங்கடசாமி நாட்டார் கல்லூரி மற்றும் மக்கள் சிந்தனை பேரவை தஞ்சை நகர வாசகர் வட்டம் இணைந்து பாரதி நினைவு நாள் கருத்தரங்கை நடத்தின.

கப்பலோட்டிய கதை தலைப்பில் சிறப்புரை

கல்லூரி வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வர் முனைவர் இரா. தமிழ்ச்செல்வம் தலைமை வகித்தார். மக்கள் சிந்தனை பேரவையின் துணைத்தலைவர் முனைவர் கோ.விஜய ராமலிங்கம் வரவேற்புரை நிகழ்த்தினார். வ.உ..சி. ஆய்வு வட்ட தமிழ்நாடு செயலாளர் குருசாமி மயில்வாகனன், கப்பலோட்டிய கதை என்ற தலைப்பில் சிறப்புரையாற்றினார்.

கருத்தரங்கில் இன்றைய இளைய சமுதாயம் இளைஞர்கள் முதல் மாணவர்கள் வரை மனம்போன போக்கிலே, பல்வேறு கலாச்சார சீரழிவிலே, சமூக கருத்துக்கள், பார்வைகள் இல்லாது வழி தவறி சென்று கொண்டிருக்கின்றனர். 200 ஆண்டுகால பிரிட்டிஷ் வெள்ளை ஆதிக்கத்தை எதிர்த்து நாட்டின் விடுதலைக்காக முழுமையாக தம்மை அர்ப்பணித்து உயிர் நீத்த தியாகச் செம்மல்கள் பல்லாயிரக்கணக்கானோர் தமிழ்நாட்டில் இருக்கின்றார்கள்.

பிரிட்டிஷாரை கதி கலங்க வைத்த பாரதியார்

இவர்களில் குறிப்பிடத்தக்கவர்கள் பிரிட்டிஷ் நிர்வாகத்திற்கு சவால் விட்டு கப்பலோட்டிய வ.உ.சிதம்பரனாரின் வாழ்க்கை வரலாறு, தனது கவிதை வரிகளால் பிரிட்டிஷாரை கதி கலங்க வைத்த பாரதியாரையும் இளைய தலைமுறையிடம் கொண்டு சேர்த்து, அவர்களை நல்வழிப்படுத்துவதுடன் நல்ல சமுதாயத்தையும் உருவாக்க வேண்டிய அவசியம் உள்ளது. ஆதலால் கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி.யையும், பாரதியாரையும் வருங்கால தலைமுறையிடம் கொண்டு சேர்ப்பது காலத்தின் கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டது. 

நிகழ்ச்சியில் காங்கிரஸ் மாநகர மாவட்ட செயலாளர் பி.ஜி.இராஜேந்திரன், பெரியாரியல் ஆய்வாளர் பசு.கௌதமன் மற்றும் பலர் கலந்து கொண்டனர். கல்லூரி துணை முதல்வர் பேராசிரியர் நா. பெரியசாமி நன்றி கூறினார். ஏற்பாடுகளை கல்லூரி தாளாளர் பொறியாளர் வி.விடுதலைவேந்தன் ஒருங்கிணைத்தார்.

சுப்பிரமணியன் எப்படி பாரதியானார்

சுப்பிரமணிய பாரதி 1882-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 11-ந்தேதி பிறந்தார். இவர் பாரதியார் என்றும், மகாகவி என்றும் அழைக்கப்படுகிறார். பாரதி ஒரு கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாசிரியர், விடுதலை வீரர், சமூக சீர்திருத்தவாதி என பல்வேறு பரிமாணங்கள் கொண்டவர். 

இவரது இயற்பெயர் சுப்பிரமணியன். தமிழின் கவிதை மற்றும் உரைநடையில் தன்னிகரற்ற புலமை பெற்ற பேரறிவாளரும், நவீன தமிழ் கவிதைக்கு முன்னோடியும் ஆவார். தம் எழுத்துக்களின் வாயிலாக மக்களின் மனதில் விடுதலை உணர்வை ஊட்டியவர். இந்திய வரலாற்றின் திருப்பங்கள் நிறைந்த காலகட்டத்தில் வாழ்ந்தவர்.  

இவரின் சமகாலத்தைய மனிதர்கள் மகாத்மா காந்தி, பால கங்காதர திலகர், உ.வே. சாமிநாதையர், வ. உ. சிதம்பரம் பிள்ளை மற்றும் மகான் அரவிந்தர் ஆகியோர். தமிழ், தமிழர் நலன், இந்திய விடுதலை, பெண் விடுதலை, சாதி மறுப்பு மற்றும் பல்வேறு சமயங்கள் குறித்து கவிதைகளும் கட்டுரைகளும் எழுதியுள்ளார். இவருடைய கவித்திறனை பாராட்டி 'பாரதி' என்ற பட்டம் எட்டப்ப நாயக்கர் மன்னரால் எட்டயபுரம் அரச சபையால் வழங்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Siragadikka Aasai: சிறகடிக்க ஆசை சீரியல் நடிகை தற்கொலை.. அதிர்ச்சியில் ரசிகர்கள்!
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
சென்னையில டிசம்பர் 13 இந்த இடங்கள்ல தான் மின் தடை செய்யப் போறாங்க; உங்க ஏரியா இருக்கா பாருங்க
Amit Shah in Tamil Nadu: தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
தமிழகத்தில் கால் வைக்கப்போகும் அமித்ஷா..! ஆட்டத்தை ஆரம்பிக்க பக்கா ஸ்கெட்ச் போட்ட பாஜக
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
விழுப்புரம் MSME-களுக்கு ரூ.1588 கோடி கடன்! தொழில் முனைவோருக்கு அறிய வாய்ப்பு: விழிப்புணர்வு முகாம், உடனே படியுங்கள்!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Akhanda 2 Movie Review: நாட்டை காப்பாற்ற போராடும் பாலகிருஷ்ணா.. அகண்டா 2 படத்தின் விமர்சனம் இதோ!
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Mahindra XUV 7XO: அப்க்ரேடட் XUV 7XO.. ஆண்டின் முதல் சம்பவம்.. டிச. 15 முதல் புக்கிங் - மஹிந்த்ரா கொடுத்த அப்டேட்
Magalir urimai thogai: காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
காலையிலேயே வங்கி கணக்கிற்கு வந்த ரூ.1000... குஷியில் துள்ளி குதிக்கும் குடும்பத்தலைவிகள்
Embed widget