மேலும் அறிய

இனியாச்சும் கொடுக்கணும்: கலெக்டரிடம் வழங்கப்பட்ட மனுவில் என்ன சொல்லியிருக்காங்க?

600க்கும் மேற்பட்ட துப்புரவு பணியாளர்களுக்கு, இந்த கூட்டுறவு கடன் சங்கம் ஐந்தரை கோடி ரூபாய் நிலுவைத் தொகையை பல ஆண்டுகளாக வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாநகராட்சி துப்புரவு பணியாளர்களுக்கு மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கத்திலிருந்து வழங்க வேண்டிய நிலுவைத் தொகையை உடன் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழ்நாடு ஒடுக்கப்பட்டோர் வாழ்வுரிமை இயக்கம் சார்பில் கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.

மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கனம் மற்றும் கடன் சங்கம் தங்கள் சங்கத்தில் உள்ள உறுப்பினர்களுக்கு பிற வங்கிகளிடமிருந்து கடன் வாங்கித் தரும் பணி மேற்கொள்கிறது. இதற்காக கடன் பெறும் உறுப்பினர்கள் தங்கள் வாங்கும் கடன் தொகையில் 10 சதவீதத்தை சேமிப்பு தொகையாக கூட்டுறவு கடன் சங்கத்தில் வைத்திருப்பது வழக்கம். இவ்வாறு 600க்கும் மேற்பட்ட, முப்பது ஆண்டுகளுக்கும் அதிகமாக துப்புரவு பணியை செய்த, துப்புரவு பணியாளர்களுக்கு, இந்த கூட்டுறவு கடன் சங்கம் ரூ,ஐந்தரை கோடி நிலுவைத் தொகையை பல ஆண்டுகளாக வழங்காமல் காலதாமதம் செய்து வருகிறது. 

மாநகராட்சி பணியாளர்கள் கூட்டுறவு சிக்கன கடன் சங்கம் துப்புரவு பணியாளர்கள் சேமிப்பு தொகையை, தஞ்சாவூர் மாநகராட்சி தனது சொந்த தேவைக்காக தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது, விதிகளுக்கு புறம்பானது.

இது துப்புரவு பணியாளர்களின் நலனுக்கு எதிரானது. எனவே அந்த தொகை முழுவதும் வட்டியுடன் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும். மாநகராட்சி துப்புரவு பணியாளர்கள் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிலுவையில் உள்ள துப்புரவு பணியாளர்கள் பெயர் பட்டியல் மற்றும் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய தொகை பற்றிய பட்டியலை பார்வைக்கு வழங்க உத்தரவு இட வேண்டும். நம் நகரை 30 ஆண்டுகள் முகம் சுழிக்காமல் தூய்மைப் பணியில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டுள்ள, தூய்மை பணியாளர்களின் உழைப்பை, அதன் பயனை உடன் வழங்க மறுப்பது எந்த வகையிலும் நியாயமில்லை.

எனவே இதுகுறித்து உடன் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் தாலுகா மட்டியூர், மாவத்திருப்பு, வாண்டையார் இருப்பு உட்பட ஏழு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் கலெக்டரிடம் அளித்த மனுவில் தெரிவித்துள்ளதாவது:

நாங்கள் திருவிடைமருதூர் தாலுகா மட்டியூர், மாவத்திருப்பு, வாண்டையார் இருப்பு, உக்கரை பரவனூர், கடம்பங்குடி, மாராச்சேரி ஆகிய ஏழு கிராமங்களை சேர்ந்தவர்கள் . இந்த கிராமங்களில் 1500 குடும்பங்களில் சுமார் 6000 திற்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகிறோம்.

கும்பகோணம் - சென்னை தேசியநெடுஞ்சாலையில் இருந்து மேற்கண்ட ஊர்களுக்கு செல்வதற்கு பொதுவாக பயன்படுத்தி வந்த சாலை தற்போது நெடுஞ்சாலை வேலை காரணமாக நிரந்தரமாக அடைக்கப்பட்டு விட்டது. இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவர்கள், அன்றாடம் வேலைக்கு செல்பவர்கள் மற்றும் நெல் கொள்முதல் நிலைய வாகனம் மற்றும் விவசாய உற்பத்தி பொருட்களை ஏற்றி செல்லும் கனரக வாகனங்கள் போன்றவை இந்த சாலை வழியாக சென்று வந்தன. 

மேலும் மட்டியூர் ஆதிதிராவிடர் தெரு, மாராச்சேரி குடியானத்தெரு, மற்றும் ஆதிதிராவிடர் தெரு மூன்று கிராமங்களுக்கும் சுடுகாடு செல்வதற்கு நீண்ட காலமாக இந்த பாதையை பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்த பாதை மூடப்பட்டால் மாற்று சமூக மக்கள் வசிக்கும் வழியாக எடுத்து செல்ல வேண்டிய நிலை ஏற்படும். 

இதனால் சாதிப்பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்பு உள்ளது. எனவே திருப்பனந்தாள் முதல் மேற்கண்ட 7 கிராமங்களுக்கு செல்ல ஏற்கனவே நாங்கள் பயன்படுத்தி வந்த சாலையை அமைத்து தருமாறு கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Modi Awarded in Trinidad: பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
IND-US Trade Deal: அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Modi Awarded in Trinidad: பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
பிரதமர் மோடிக்கு மேலும் ஒரு கவுரவம்; ட்ரினிடாட் & டொபாகோவில் காத்திருந்த விருது - விவரம் இதோ
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
அஜித்குமார் மரணத்தில் மறக்கப்படுகிறதா நடிகர் ஸ்ரீகாந்த் வழக்கு? பிடிபடுவார்களா பிரபலங்கள்?
IND-US Trade Deal: அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
அப்பாடா, தப்பிச்சோம்; 9-ம் தேதிக்குள் அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தம் - அசத்தும் இந்தியா
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
TVK Vijay: இனிதான் ஆட்டமே.. அடுத்த 10 மாசம் பம்பரமாய் சுழலப்போகும் விஜய் - ஓட்டு முக்கியம் பிகிலு!
Russia Vs Trump: ட்ரம்ப்புக்கே டஃப் கொடுக்கும் புதின்; பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே உக்ரைனை போட்டுத் தாக்கிய ரஷ்யா
ட்ரம்ப்புக்கே டஃப் கொடுக்கும் புதின்; பேச்சுவார்த்தை நடத்திக்கொண்டே உக்ரைனை போட்டுத் தாக்கிய ரஷ்யா
வாடகை வீட்டில் வாழும் அதிமுக MLA! அதுவும் 4,500 ரூபாய்தான் - இந்த காலத்துல இப்படியா?
வாடகை வீட்டில் வாழும் அதிமுக MLA! அதுவும் 4,500 ரூபாய்தான் - இந்த காலத்துல இப்படியா?
Russia Accepts Taliban: தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
தாலிபான்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த ரஷ்யா; முதல் முறையா என்ன செஞ்சாங்க தெரியுமா.?
Ponmudi Case HC Warning: “ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
“ஒழுங்கா விசாரிக்குறீங்களா, இல்ல பொன்முடி வழக்குகள சிபிஐ-க்கு மாத்தவா.?“ மிரட்டிவிட்ட உயர்நீதிமன்றம்
Embed widget