மேலும் அறிய

மாநகராட்சியுடன் இணைத்தால் பாதிப்பு ஏற்படும்... ராமநாதபுரம் ஊராட்சி மக்கள் கலெக்டரிடம் மனு

ராமநாதபுரம் ஊராட்சியை இணைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்து பொதுமக்கள் தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தஞ்சாவூர்: தஞ்சை மாநகராட்சியுடன் ராமநாதபுரம் ஊராட்சியை இணைத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படும். எனவே ராமநாதபுரம் ஊராட்சியை இணைக்கக்கூடாது என்று கோரிக்கை விடுத்து பொதுமக்கள் தஞ்சை கலெக்டரிடம் மனு அளித்தனர்.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு ராமநாதபுரம் ஊராட்சியை சேர்ந்த பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டவர்கள் ஒன்றிய கவுன்சிலர் அண்ணாகோபிநாத் தலைமையில் வந்தனர். பின்னர் அவர்கள் கலெக்டர் பிரியங்கா பங்கஜத்திடம் ஒரு மனுவை அளித்தனர். அதில் அவர்கள் தெரிவித்துள்ளதாவது:

தஞ்சை அருகே உள்ளது ராமநாதபுரம் ஊராட்சி. இந்த ஊராட்சியை சேர்ந்த மக்கள் விவசாய கூலித் தொழிலாளர்கள். இந்த ஊராட்சியை தஞ்சை மாநகராட்சியுடன் இணைக்கப்போவதாக தெரிய வந்தது. இப்படி இணைத்தால் எங்களது கிராமத்தை சேர்ந்த பொதுமக்களுக்கு 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் வேலை கிடைப்பதில் பாதிப்பு ஏற்படும். இந்த 100 நாள் வேலைத்திட்டத்தில் வரும் ஊதியத்தை நம்பியே இந்த ஊராட்சியை சேர்ந்த தொழிலாளர்கள் உள்ளனர். இதனால் எங்களின் பொருளாதாரம் பாதிக்கப்படுவதுடன், வாழ்வாதாரமும் பாதிக்கப்படும்.

இந்த கிராமத்தில் உள்ள பொதுமக்கள் ஏழ்மை நிலையில் உள்ளனர். மாநகராட்சியுடன் இணைத்தால் வீட்டுவரி, தண்ணீர் வரி உயரும். இவற்றை கட்டுவதற்கு மிகுந்த சிரமம் உருவாகும். குடிநீர் இணைப்பு வழங்குவதிலும், சாலைகளை பராமரிப்பதிலும் தாமதம் ஏற்படும். நியாய விலைக்கடைகளில் பொருட்களை பெறுவதிலும் பல்வேறு சிரமங்களை நாங்கள் சந்திக்க நேரிடும். மேலும் அரசின் பல்வேறு திட்டங்களை பெறுவதிலும் சிக்கல்கள் உருவாகும் நிலை உள்ளது.

பொதுமக்கள் தங்களது தேவைக்காக தஞ்சையில் உள்ள மாநகராட்சி அலுவலகத்திற்கு தான் வர வேண்டி இருக்கும். எனவே தற்போது உள்ளது போல ஊராட்சி மன்றம் மூலமே செயல்பாடுகள் இருக்கும்பட்சத்தில் பொதுமக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். எனவே ராமநாதபுரம் ஊராட்சி பொதுமக்கள் நலன் கருதி உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும். இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

EPS Speech :
EPS Speech : "மனசாட்சியுடன் பேசுங்க திருமா..உங்களுக்கும் இதே நிலை தான்! விஜய்க்கு அட்வைஸ் சொன்ன இபிஎஸ்
India-China Flight Service:  4 வருட இடைவெளி.. டிரம்ப்பால் நடந்த  நன்மை! இந்தியா-சீனா விமான சேவை மீண்டும் தொடக்கம்
India-China Flight Service: 4 வருட இடைவெளி.. டிரம்ப்பால் நடந்த நன்மை! இந்தியா-சீனா விமான சேவை மீண்டும் தொடக்கம்
Rahul Gandhi: ”ஜனநாயகத்தின் மீது தாக்குதல்” ராகுல் காந்தி பேச்சு.. கடும் எதிர்ப்பை பதிவு செய்த பாஜக! என்ன நடந்தது?
Rahul Gandhi: ”ஜனநாயகத்தின் மீது தாக்குதல்” ராகுல் காந்தி பேச்சு.. கடும் எதிர்ப்பை பதிவு செய்த பாஜக! என்ன நடந்தது?
Karur Stampede: விஜய் கைது செய்யப்படுவார்; எப்போது? திமுக பரபரப்பு பதில்!
Karur Stampede: விஜய் கைது செய்யப்படுவார்; எப்போது? திமுக பரபரப்பு பதில்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Roshni Nadar Profile : அம்பானி, அதானி வரிசையில்..முதல் இந்திய பெண் பணக்காரர்!யார் இந்த ரோஷ்னி நாடார்?
Vijay Arrest | விஜய் ARREST எப்போ?ஆணையம் சொல்வது என்ன?திமுக திடீர் அறிவிப்பு
”விஜய்க்கு பாதுகாப்பு இருக்கா?” விளக்கம் கேட்கும் அமித்ஷா! மத்திய அரசின் ப்ளான் என்ன?
”ஏன் இவ்ளோ பதட்டம்! செந்தில் பாலாஜி மேல சந்தேகம்” அண்ணாமலை ரியாக்‌ஷன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS Speech :
EPS Speech : "மனசாட்சியுடன் பேசுங்க திருமா..உங்களுக்கும் இதே நிலை தான்! விஜய்க்கு அட்வைஸ் சொன்ன இபிஎஸ்
India-China Flight Service:  4 வருட இடைவெளி.. டிரம்ப்பால் நடந்த  நன்மை! இந்தியா-சீனா விமான சேவை மீண்டும் தொடக்கம்
India-China Flight Service: 4 வருட இடைவெளி.. டிரம்ப்பால் நடந்த நன்மை! இந்தியா-சீனா விமான சேவை மீண்டும் தொடக்கம்
Rahul Gandhi: ”ஜனநாயகத்தின் மீது தாக்குதல்” ராகுல் காந்தி பேச்சு.. கடும் எதிர்ப்பை பதிவு செய்த பாஜக! என்ன நடந்தது?
Rahul Gandhi: ”ஜனநாயகத்தின் மீது தாக்குதல்” ராகுல் காந்தி பேச்சு.. கடும் எதிர்ப்பை பதிவு செய்த பாஜக! என்ன நடந்தது?
Karur Stampede: விஜய் கைது செய்யப்படுவார்; எப்போது? திமுக பரபரப்பு பதில்!
Karur Stampede: விஜய் கைது செய்யப்படுவார்; எப்போது? திமுக பரபரப்பு பதில்!
RTE மாணவர் சேர்க்கை தொடக்கம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு- பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!
RTE மாணவர் சேர்க்கை தொடக்கம்; தமிழ்நாடு அரசு அறிவிப்பு- பள்ளிகளில் 25% இட ஒதுக்கீடு!
TVK Vs Police: புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரை துரத்தும் போலீஸ்; இன்று இரவுக்குள் கைது செய்ய தீவிரம்-ஏன் தெரியுமா.?
புஸ்ஸி ஆனந்த், நிர்மல்குமாரை துரத்தும் போலீஸ்; இன்று இரவுக்குள் கைது செய்ய தீவிரம்-ஏன் தெரியுமா.?
Stalin Slams Modi: “RSS; பிரதமரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலை“: மோடியை சாடிய டாடி
“RSS; பிரதமரே அஞ்சல் தலையும் நினைவு நாணயமும் வெளியிடும் அவல நிலை“: மோடியை சாடிய டாடி
Karur Stampede: ''ஆபத்தான சக்தி விஜய்; திமுகவுக்கும் விஜய்க்கும் ரகசிய டீலிங்?'' திருமா பரபரப்பு பேச்சு!
Karur Stampede: ''ஆபத்தான சக்தி விஜய்; திமுகவுக்கும் விஜய்க்கும் ரகசிய டீலிங்?'' திருமா பரபரப்பு பேச்சு!
Embed widget