மேலும் அறிய

பேராவூரணி பெரிய குளத்தினை நிலஅளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு

தஞ்சை மாவட்டம் பேராவூரணி பெரிய குளத்தினை நிலஅளவை செய்து ஆக்கிரமிப்பை  அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்பாக கடைமடைப்பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சாவூர்: தஞ்சை மாவட்டம் பேராவூரணி பெரிய குளத்தினை நிலஅளவை செய்து ஆக்கிரமிப்பை  அகற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தொடர்பாக கடைமடைப்பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்கள் குறை கேட்கும் கூட்டம் நடந்தது. இதில் மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த மக்கள் தங்களின் கோரிக்கைகளை மனுக்களாக அளித்தனர். அந்த வகையில் கைபா என்கிற கடைமடை பகுதி ஒருங்கிணைந்த விவசாயிகள் சங்கம் சார்பில் ஒரு மனு அளிக்கப்பட்டது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி பெரிய ஏரியில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்றுவதற்கு ஏதுவாக நில அளவை மேற்கொண்டு எல்லை நிர்ணயம் செய்து ஆக்கிரமிப்பு நபர்களின் பெயர் மற்றும் முகவரி அடங்கியபடிவம் - | வழங்கிடுமாறு வட்டாட்சியரிடம் கோரப்பட்டுள்ளது. கடந்த 10.07.2023 அன்று நிலஅளவை செய்வதாக வட்டாட்சியர் தெரிவித்தார்.

நிலஅளவை செய்தபின் ஆக்கிரமிப்பு விவரங்கள் படிவம் வட்டாட்சியரிடமிருந்து கிடைக்கப் பெற்ற பின் படிவம் மற்றும் ஆக்கிரமிப்பாளர்கள் விவரம் தெரிவிக்கப்பட்டு ஆக்கிரமிப்புகள் 15 நாட்களுக்குள் ஆக்கிரமிப்பாளர்களால் அகற்றப்படாவிட்டால், இத்துறையின் மூலம் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் பேராவூரணி பெரியகுளத்தில் அளவை இன்னும் முழுமையாக முடியவில்லை. 5 மாதங்கள் கடந்தும் பல முயற்சிகள், பல மனுக்கள் கொடுத்தும் அரசு அதிகாரிகள் தனி நபர் விருப்பத்திற்காக பேராவூரணி பெரியகுளத்தில் அளவைக்கு முன்வர வில்லை. இன்னும் ஆக்கிரமிப்புகள் அகற்றும் பணிகள் முன்வர வில்லை. எனவே பேராவூரணி மக்களின் நீர் ஆதாரமான  பெரியகுளத்தை முழுவதுமாக அளந்து ஆக்கிரமிப்புகளை அகற்றி தருமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


பேராவூரணி பெரிய குளத்தினை நிலஅளவை செய்து ஆக்கிரமிப்பை அகற்ற கோரி மனு

இதேபோல் தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பழஞ்சூர், அணைக்காடு பொன்னவராயன் கோட்டை பகுதிகளில் உயர் மின் அழுத்த கோபுரம் அமைக்க வெட்டப்பட்ட தென்னை மரங்களுக்கு உரிய  இழப்பீட்டை வழங்கக்கோரி தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை தாலுகாவுக்கு உட்பட்ட பழஞ்சூர், புதுக்கோட்டை உள்ளூர், அணைக்காடு, பொன்னவராயன் கோட்டை கிராமங்களில் விவசாய குடும்பத்தினர் அதிக அளவில் வசித்து வருகின்றனர். இங்கு விவசாயிகள் பலருக்கு முக்கிய வாழ்வாதாரமாக தென்னை மரங்கள் இருந்து வருகிறது.

இப்பகுதியில் கடந்த ஐந்து மாதத்திற்கு முன்பு உயர் மின் கோபுரத்திற்காக அரசு விவசாயிகளின் காய்க்கும் தென்னை மரங்களை அகற்றி மின் வழிப் பாதை அமைத்தனர். விவசாயிகளின் வாழ்வாதாரமாக விளங்கிய 1500 க்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அகற்றப்பட்டது. இதற்கான நிவாரணத் தொகை 40 நாளில் வழங்குவதாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால் இதுவரை பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் கிடைக்கவில்லை. மேலும் நிவாரணத் தொகையும் குறைவாக உள்ளது. பாதிக்கப்பட்ட விவசாயிகளின் தென்னை மரங்களுக்கு மதிப்பீடும் செய்யப்படாமல் உள்ளது.

எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு விவசாயிகளுக்கு நிவாரண இழப்பீட்டின் தொகையை உயர்த்தி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவர் அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

சித்தராமையாவுக்கு ஆப்பு? டெல்லியில் குவிந்த MLA-க்கள்! DK சிவக்குமார் ப்ளான்
விழுந்து நொறுங்கிய தேஜஸ்! பறிபோன விமானி உயிர்! பதறவைக்கும் வீடியோ
Madurai School Bus Fire | திடீரென தீப்பற்றிய SCHOOL BUSHERO-வாக மாறிய டிரைவர் மதுரையில் பரபரப்பு
cyclone season starts |
Divya Bharathi Angry | ’’என்னையே தப்பா பேசுறியா வேடிக்கை பார்க்குறவன் ஹீரோவா’’பொளந்த திவ்யபாரதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Weather Report: நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
நாளை உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி; 24-ம் தேதி வரை சம்பவம் இருக்கு; வானிலை மைய தகவல் என்ன.?
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
IND vs BAN: திக்.. திக்..! சூப்பர் ஓவரில் 0 ரன்.. வங்கதேசத்திடம் இறுதிப்போட்டி வாய்ப்பை இழந்த இந்தியா!
Trump Ukraine Peace Plan: ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
ட்ரம்ப்பின் 28 அம்ச அமைதித் திட்டம்; ‘வேதனை தரும் சலுகைகள்‘-ஜெலன்ஸ்கி; என்ன நிபந்தனைகள்.?
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
பொம்மை முதல்வராக மாறுகிறாரா நிதிஷ்குமார்? முக்கிய துறைகளை கைவசப்படுத்திய பாஜக!
Tejas Accident: துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
துபாய் வானில் சாகசம்; விழுந்து நொறுங்கிய இந்திய தேஜஸ் போர் விமானம்; விமானி உயிரிழந்த சோகம்
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
கிரெடிட் கார்டு EMI: வாங்க ஆசையா? ஜாக்கிரதை! இந்த ரகசியங்களை தெரிஞ்சிக்கோங்க!
Modi Vs Congress: பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
பிரதமர் மோடியின் தென்னாப்பிரிக்க(G20) பயணம்; காங்கிரஸ் கிண்டல் - என்ன இப்படி சொல்லிட்டாங்க.?!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
தெற்கு ரயில்வேயின் புதிய சாதனை! பார்சல் சேவை: வர்த்தகர்களுக்கு ஒரு பொன்னான வாய்ப்பு!
Embed widget