மேலும் அறிய

“நாங்க வேதனையில் இருக்கோம்”.. வெட்டப்படும் பனைமரங்களை கண்டு விவசாயிகள் கண்ணீர்

வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக வேறு மரங்கள் நட்டாலும் அது பயன்தரும் மரங்களாக இருப்பதில்லை. எனவே இதேபோன்று பனைமர விதைகள், பயன்தரும் மரங்களை நட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

தஞ்சாவூர்: நான்கு வழிச்சாலைக்காக நூற்றுக்கணக்கான பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டுள்ளதை கண்டு விவசாயிகள் பெரும் வேதனையில் உள்ளனர். இது வேறு எங்கேயும் இல்லைங்க. தஞ்சை மாவட்டத்தில்தான்.

தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை 4 வழிச்சாலையாக மாற்றும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலையோரம் உள்ள நூற்றுக்கணக்கான பனைமரங்கள் வெட்டப்பட்டு வருகின்றன. ராட்சத புளியமரங்கள், வேப்பமரங்களும் வெட்டி அகற்றப்பட்டுள்ளன. 

நெடுஞ்சாலை துறை கோட்ட கட்டுப்பாட்டில் உள்ள தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை போக்குவரத்து முக்கியத்துவம் வாய்ந்த மாநில நெடுஞ்சாலை ஆகும். இந்த சாலை வழியாக தினமும் ஆயிரக்கணக்கான கனரக மற்றும் இலகுரக வாகனங்கள் மற்றும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த சாலையில் போக்குவரத்து நெரிசலுக்கு ஏற்ப சாலையின் அகலம் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. பொதுமக்கள் மற்றும் சாலை உபயோகிப்பாளர்களின் தேவையை உணர்ந்து இந்த சாலையை அகலப்படுத்த தமிழக அரசின் நெடுஞ்சாலைத்துறை சார்பாக இந்த சாலையை 4 வழிச்சாலையாக மேம்படுத்த முடிவு செய்தது.

நெடுஞ்சாலைத்துறை உட்கட்டமைப்பு மேம்பாடு திட்டத்தின் கீழ் தஞ்சை- பட்டுக்கோட்டை சாலை 4 வழிச்சாலையாக அகலப்படுத்தும் பணிகள் பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதில் நெடுஞ்சாலைத்துறையின் தஞ்சை மற்றும் ஒரத்தநாடு உட்கோட்ட பகுதியில் மட்டும் 33 கி.மீ. நீளமும், இதர பணிகள் பட்டுக்கோட்டை உட்கோட்டம் சார்பிலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதில் தஞ்சை உட்கோட்டம் சார்பிலும், ஒரத்தநாடு உட்கோட்டம் சார்பிலும் பணிகள் தற்போது தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை நெடுஞ்சாலைத்துறை கோட்டத்தில் தஞ்சை மற்றும் ஒரத்தநாடு உட்கோட்ட பகுதிகளில் உள்ள நெடுஞ்சாலைகள் அமைப்பது, சாலையில் பாலம் கட்டுவது, அகலப்படுத்துவது என 5 ஆண்டு திட்டத்துக்கு ரூ.650 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த திட்டத்தின் கீழ் 4-வது ஆண்டில் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தஞ்சை- பட்டுக்கோட்டை நெடுஞ்சாலையில் சாலை தொடங்கும் இடமான கீழவஸ்தாசாவடியில் உள்ள சுற்றுவட்ட சாலை பாலம் அருகில் இருந்து பணிகள் தொடங்குகின்றன.

தற்போது இந்த பணிகளுக்காக சாலையை அகலப்படுத்துவதற்காக மரங்கள் வெட்டும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக சாலையோரம் உள்ள நூற்றுக்கணக்கான பனைமரங்கள், 60 ஆண்டுகளுக்கும் மேலான புளியமரங்கள், வேப்பமரங்கள் மற்றும் புங்கன்மரங்கள் உள்ளிட்ட மரங்கள் வெட்டப்பட்டு அகற்றப்படுகிறது. இந்த மரங்கள் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் அனுமதி பெற்று வெட்டப்பட்டு வருகின்றன.

சாலையின் இருபுறமும் உள்ள மரங்கள் தற்போது வெட்டும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. உரிய பாதுகாப்பு வசதியுடன் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மரங்கள் வெட்டப்படுவதால் சோலையாக காணப்பட்ட அந்த பகுதி வெட்ட வெளியாக காட்சி அளிக்கிறது. சாலையின் இருபுறமும் மரங்கள் அதிக அளவில் நடப்பட்டு நிழல்தரும் இடமாக காட்சி அளித்த சாலை தற்போது மரங்கள் வெட்டப்பட்டு வருவதால் வெட்ட வெளியாக காட்சி அளித்து வருகிறது. முக்கியமாக மண்வளத்தை மேம்படுத்தும் நூற்றுக்கணக்கான பனைமரங்கள் வெட்டி சாய்க்கப்பட்டதை கண்டு விவசாயிகள் பெரும் கவலையில் உள்ளனர். இதற்கு பதில் இந்த மரங்களை வேரோடு அகற்றி வேறு எங்காவது ஊன்றி இருக்கலாமே என்று வேதனையுடன் தெரிவிக்கின்றனர்.

இருப்பினும் போக்குவரத்திற்கு ஏற்ப மாற்றங்கள் செய்யப்படுவது நியாயம்தானே என்றும் ஒருதரப்பினர் தெரிவிக்கின்றனர். இப்படி மரங்கள் வெட்டப்பட்டு சாலை 15 மீட்டர் அகலத்துக்கு விரிவுபடுத்தப்படுகிறது. பின்னர் சாலையின் மையப்பகுதியில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு தார்சாலை போடப்பட உள்ளது. தஞ்சை- பட்டுக்கோட்டை இடையே மொத்த தூரம் 47 கி.மீ. ஆகும். இதில் தஞ்சை மற்றும் ஒரத்தநாடு உட்கோட்டம் சார்பில் மட்டும் 33 கி.மீ. தூரத்துக்கு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. மீதமுள்ள பணிகள் பட்டுக்கோட்டை உட்கோட்டம் சார்பில் மேற்கொள்ளப்படுகிறது.

தஞ்சை - பட்டுக்கோட்டை 4 வழிச்சாலைத்திட்டம் கடந்த சில மாதங்களாகவே தொடங்கி நடைபெற்று வருகின்றன. முதல் கட்டமாக தஞ்சை உட்கோட்ட பகுதியில் சூரக்கோட்டை பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டது. இதே போன்று ஒரத்தநாடு பகுதிகளிலும் சாலை விரிவுபடுத்தப்பட்டு போடப்பட்டுள்ளது. தற்போது தஞ்சையில் இருந்து பட்டுக்கோட்டை நெடுஞ்சாலை தொடங்கும் இடத்தில் இருந்து பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது சாலை விரிவாக்கம் செய்யப்படும் இடங்களில் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மரங்கள் வெட்டப்படும் மற்றும் மின்கம்பங்கள் மாற்றும் இடங்களில் தற்போது பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சாலையில் மரங்கள் வெட்டப்பட்டு சாலை போடப்பட்ட இடத்தில் மரங்கள் நடப்பட்டுள்ளன. ஒரு மரம் வெட்டிய இடத்தில் அதற்கு பதிலாக 10 மரங்கள் வீதம் நடப்பட்டு வருகின்றன. சில இடங்களில் மரக்கன்றுகள் நடப்பட்டு நன்றாக வளர்ந்துள்ளன. தற்போது வெட்டப்படும் மரங்களுக்கு பதிலாகவும் மரங்கள் நடப்படும். இந்த பணிகள் அனைத்தும் 2026-ம் ஆண்டு பிப்ரவரி மாதத்துக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு வரும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தரப்பில் தெரிவித்தனர். வெட்டப்படும் மரங்களுக்கு மாற்றாக வேறு மரங்கள் நட்டாலும் அது பயன்தரும் மரங்களாக இருப்பதில்லை. எனவே இதேபோன்று பனைமர விதைகள், பயன்தரும் மரங்களை நட வேண்டும் என்று விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
992
Active
27610
Recovered
152
Deaths
Last Updated: Mon 7 July, 2025 at 04:49 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
US Texas Flood: அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
Watch Video: “நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
“நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hari Nadar | சிறைக்கு சென்றவருடன் அமைச்சர்.. ஹரிநாடார் திருப்புவனம் விசிட்! வெளியான பரபரப்பு பின்னணி
Annamalai vs Nainar | அமித்ஷாவுக்கு PHONE CALL நயினாருக்கு முட்டுக்கட்டை அ.மலை கட்டுப்பாட்டில் பாஜக?
Theni Custodial Violence | இளைஞரை தாக்கிய POLICE.. மீண்டும் ஒரு சம்பவம்! வெளியான அதிர்ச்சி வீடியோ
Ajithkumar Lockup Death | தலைமை செயலகத்திலிருந்து வந்த PHONECALL? யார் அந்த  அதிகாரி?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Edappadi K Palaniswami : ’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
’ஆட்சியை பிடித்தே ஆகனும்’ முதல் ஆளாக சுற்றுப்பயணம் தொடங்கிய EPS..!
US Texas Flood: அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
அமெரிக்காவின் டெக்சாஸில் வரலாறு காணாத கனமழையால் வெள்ளம் - பலி எண்ணிக்கை 82 -ஆக உயர்வு
Watch Video: “நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
“நீங்க ஏன் இங்க இருக்கீங்க.? இந்தியாவுக்கே போங்க“; இனவெறி பேச்சு - அமெரிக்கருக்கு வலுக்கும் கண்டனங்கள்
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
இது நல்லா இருக்கேப்பா.. அரசு அதிரடி! தனியார் பேருந்துகளுக்கு சவால் விடும் புதிய பேருந்துகள் அறிமுகம்!
CHN Power Shutdown(08.07.25): அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?!  எங்கெங்கன்னு தெரியுமா.?
அடேங்கப்பா.!! சென்னையில நாளை ஒரே நாள்ல இத்தனை இடங்கள்ல பவர் கட்டா.?! எங்கெங்கன்னு தெரியுமா.?
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
Trump BRICS: என்னையே எதிர்த்து பேசுறீங்களா? 10 சதவிகிதம் கூடுதல் வரி போடுவேன் - இந்தியாவிற்கு ட்ரம்ப் மிரட்டல்
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
’சமூக நீதியை படுகொலை செய்த முதல்வர் மு.க.ஸ்டாலின்’ அன்புமணி சரமாரி விமர்சனம்..!
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
CNG vs Electric Car: சிஎன்ஜி ஆ? எலெக்ட்ரிக் காரா? நம்ம ஊருக்கு எது பெஸ்ட்? ஏன்? மைலேஜ் மட்டுமா கணக்கு?
Embed widget