மேலும் அறிய

பாம்பு கடித்து சிறுநீரகம் பாதித்த சிறுமி; காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு 

கடந்த 10 மாதங்களில் 981 பாம்புகடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 903 பேர் குணடைந்துள்ளனர்.

தஞ்சாவூர்: ஒரத்தநாடு அருகே பாம்பு கடித்து சிறுநீரகம் பாதித்த சிறுமிக்கு சிகிச்சை அளித்து காப்பாற்றிய மருத்துவக்குழுவினருக்கு மருத்துவக்கல்லூரி டீன் பாராட்டுக்கள் தெரிவித்தார்.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே துறையூர் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரபோஸ். இவரது மனைவி ஷீலா. இவர்களின் மகள் சத்திகா (10). 5ம் வகுப்பு மாணவி. கடந்த 4ம் தேதி வீட்டில் துாங்கிக் கொண்டிருந்த சிறுமியின் இடது கையில், கண்ணாடி விரியன் பாம்பு கடித்தது. இதனால் அலறி துடித்த சிறுமியை அவரது பெற்றோர் ஒரத்தநாடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். முதலுதவி சிகிச்சைக்கு பின்னர் மேல் சிகிச்சைக்காக சிறுமி தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
 
அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள், சிறுமிக்கு பாம்பு கடித்ததால் ரத்தம் உறைதல் குறைபாடு மற்றும் தற்காலிக சிறுநீரக செயலிழப்பு பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு ஆபத்தான நிலை இருப்பதை கண்டறிந்து பாம்புகடி விஷமுறிவு சிகிச்சை மற்றும் டயாலிசிஸ் சிகிச்சை அளித்தனர். மருத்துவக்குழுவினர் தொடர் கண்காணிப்பில் இருந்த சிறுமி உடல் நலம் தேறினார். இதையடுத்து 27 நாட்களுக்கு பிறகு நேற்று சிறுமி சத்திகா டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார்.

மருத்துவக்கல்லுாரி டீன் பாலாஜிநாதன், நிலைய மருத்துவ அலுவலர் செல்வம் ஆகியோர் சிறுமிக்கு பழங்கள் வழங்கி வாழ்த்தி அனுப்பி வைத்தனர். சிறுமிக்கு சிகிச்சை அளித்த சிறுநீரகத்துறை தலைவர் ராஜ்குமார், டாக்டர் கண்ணன் குழுவினருக்கு டீன் பாலாஜிநாதன் பாராட்டுக்கள் தெரிவித்தார். 

தங்கள் மகளின் உயிரை காப்பாற்ற விரைவாக சிகிச்சை அளித்த மருத்துவக்கல்லூரி நிர்வாகம் மற்றும் டீன், மருத்துவக்குழுவினருக்கு சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் நன்றியும், பாராட்டுக்களும் தெரிவித்தனர். விரைவாக செயல்பட்டு சிறுமியின் உயிரை காப்பாற்றிய மருத்துவக்குழுவினருக்கு பொதுமக்களும் பாராட்டுக்களை தெரிவித்தனர். 


பாம்பு கடித்து சிறுநீரகம் பாதித்த சிறுமி; காப்பாற்றிய மருத்துவக் குழுவினருக்கு பாராட்டு 

பின்னர் மருத்துவக்கல்லூரி டீன் பாலாஜிநாதன் நிருபர்களிடம் கூறியதாவது; இந்தாண்டு கடந்த 10 மாதங்களில் 981 பாம்புகடி நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 903 பேர் குணடைந்துள்ளனர். பாம்பு கடித்தால், விஷ முறிவை தடுப்பதற்காக கிராமங்களில் முதலுதவி என்ற பெயரில் கட்டு போடுதல், ரத்தத்தை உறிஞ்சுதல் போன்றவற்றை செய்யக்கூடாது. அரை மணி நேரத்தில் அரசு மருத்துவமனைகளில் விஷக்கடிக்கான தடுப்பூசியை செலுத்தினால் உயிருக்கு ஏற்படும் ஆபத்தை தடுக்க முடியும்.  

இதை போல உறுப்பு தானம் குறித்து மக்கள் மத்தியில் குறைந்த அளவில் தான் விழிப்புணர்வு உள்ளது. மூளைசாவு அடைந்தவர்களின் உறுப்புகள் மட்டுமே பயன்படுத்த முடியும். நமது மருத்துக்கல்லுாரியில் 9 பேருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மூளைச்சாவு அடைந்து உறுப்பு தானம் வழங்கிய 5 பேரிடம் பெறப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. டயாலிசிஸ் பெற 31 ரத்த சுத்தகரிப்பு கருவிகள் மூலம் 2,000 பேர் பயன் அடைந்துள்ளனர். டயாலிசிஸ் மூலம் சிறுநீரகம் பாதிக்கப்பட்டு, அவர்களுக்கு சிறுநீரக மாற்று அறுவைக்காக 63 பேர் பதிவு செய்துள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்
Edappadi Meet Adani ”தேர்தல் செலவு நான் பார்த்துக்கிறேன்”அதானியை சந்தித்த EPS! டீல் முடித்த அமித்ஷா
”கோவையை பிடிச்சே ஆகணும்” தூக்கியடிக்கும் செந்தில் பாலாஜி! 70 நிர்வாகிகள் ராஜினாமா
”10 நிமிஷம் பத்தாது” செங்கோட்டையன் அட்வைஸ்! விஜய்யின் அடுத்த மூவ்
TN IPS Officers Transfer | அருண் ஐபிஎஸ் மாற்றம்? டேவிட்சனுக்கு முக்கிய பதவி.. தயாரான ஐபிஎஸ் பட்டியல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Alliance Talks Team: வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
வழிக்கு வந்த விஜய்; தவெக கூட்டணி பேச்சுவார்த்தைக் குழு அமைக்க முடிவு.? பலமாகும் செங்கோட்டையன்
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
CM MK Stalin: 2 நாட்கள் திருநெல்வேலியில்.. முக்கிய அறிவிப்பை வெளியிடும் முதலமைச்சர் ஸ்டாலின்!
SIR Chennai Spl. Camp: சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
சென்னை மக்களே.! SIR-ல் பேர் விட்டுப்போச்சா.? கவலைய விடுங்க; இன்றும், நாளையும் சிறப்பு முகாம்
Tamilnadu Roundup: பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
பொருநை அருங்காட்சியகம் இன்று திறப்பு, சென்னையில் சிறப்பு முகாம், தங்கம் விலை உயர்வு - 10 மணி செய்திகள்
America Vs Syria: ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
ஆபரேஷன் ஹாக்கே; சிரியாவில் அமெரிக்கா குண்டு மழை; ISIS இலக்குகள் மீது தாக்குதல்; காரணம் என்ன.?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
TN SIR Voter List: உங்க பேரு வாக்காளர் பட்டியலில் இருக்கா? SIR வரைவு பட்டியல் வெளியீடு: 3 வழியில் சரிபார்க்கலாம்- எப்படி?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
SIR 2026 Voter List: தமிழ்நாட்டில் லட்சக்கணக்கில் நீக்கப்பட்ட வாக்காளர்கள் - எந்தெந்த மாவட்டத்தில் எத்தனை பேர்?
Bangladesh Protest Violence: வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
வங்கதேசத்தில் மீண்டும் வெடித்த கலவரம்; கொடூரமாக கொல்லப்பட்டு எரிக்கப்பட்ட இந்து இளைஞர்; பதற்றம்
Embed widget