மேலும் அறிய

பாசன பொறியியலின் எடுத்துக்காட்டான கல்லணைக்கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்

கல்லணைக் கால்வாயை மினி கூவமாக மாற்றாமல் இருக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

தஞ்சாவூர்: பாசனப் பொறியியலில் உன்னத எடுத்துக்காட்டாக விளங்கும் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக் கால்வாய் இன்று குப்பைகள் கொட்டப்பட்டு மினி கூவம் போல் மாறி வருவதை பார்த்து சமூக ஆர்வலர்கள் வேதனையடைந்துள்ளனர்.

ஆறுகள் இயற்கையாக உருவாக்கப்பட்டவை. ஆனால் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய் செயற்கையாக உருவாக்கப்பட்டது. தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி இந்த புது ஆறு 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்கிறது.

பாசனப்பொறியியலின் உன்னதம்

பாசனப் பொறியியலின் உன்னதம் இந்த புது ஆறு என்றால் மிகையில்லை. இது விவசாயத்துக்காக மனிதனால் வெட்டப்பட்டது. ஒரு சொட்டு நீரும் அனுமதி இல்லாமல் இதில் கலக்க முடியாது என்பதும் இதன் பெருமை. தமிழகத்தில் மேட்டூர் அணை கட்டப்பட்டபோது தஞ்சை மாவட்டத்தின் வானம் பார்த்த பூமியாக இருந்தவைதான் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, பேராவூரணி, மதுக்கூர், அதிராம்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டத்தின் அறந்தாங்கி வரையிலான சுமார் 2.50 லட்சம் ஏக்கர் நிலங்கள். மழை பெய்தால் மட்டுமே இங்கு விவசாயம் நடக்கும். மழை பொய்த்தால் விவசாயம் நடக்காது. செயற்கையாக வெட்டப்பட்ட ஆறு. இப்பகுதிகள் வளம் பெற வேண்டியும், இந்த பகுதிகளுக்கு தண்ணீர் கிடைத்து சாகுபடிகள் நடக்க வேண்டும் என்பதற்காகவும் வெட்டப்பட்டதுதான் புது ஆறு என்று அழைக்கப்படும் கல்லணைக்கால்வாய். இந்த புது ஆற்றை அன்றைய பிரிட்டிஷ் அரசின் ராணுவப் பொறியாளர் கர்னல் டபிள்யூ.எம்.எல்லிஸ் என்பவர் வடிவமைத்தார்.


பாசன பொறியியலின் எடுத்துக்காட்டான கல்லணைக்கால்வாயில் கொட்டப்படும் குப்பைகள்

149 கி.மீ. நீளமுள்ள கல்லணைக்கால்வாய்

கல்லணை தலைப்பில் தொடங்கி புதுக்கோட்டை மாவட்டம் தொண்டியில் உள்ள மும்பாலை வரையிலான 149 கி.மீ. நீளமுள்ள இந்த ஆற்றில், 109 கி.மீ. நீளம் பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் வெட்டப்பட்டது. மீதம் உள்ளவை சுதந்திரம் பெற்ற பின்னர் இந்திய அரசால் வெட்டப்பட்டவை. இந்த ஆற்றில் எங்குமே கழிவுநீரும், காட்டாற்று தண்ணீரும் கலக்க முடியாத வகையில் ஆற்றின் குறுக்கே சைபன் எனப்படும் சுரங்கங்கள், மேலே சூப்பர் பேஸேஜஸ் எனப்படும் மேல்நிலை கால்வாய்களும்,  பெருவெள்ளக் காலங்களில் காட்டாற்று தண்ணீரை உள்வாங்கி வெளியேற்ற அக்யுடக்ட் எனப்படும் கால்வாய் சுரங்கங்களும், தண்ணீரின் விசையை சீராக வைத்துக் கொள்ள 505 இடங்களில் டிராப் எனப்படும் நீரொழுங்கிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன என்பதும் குறிப்பிடத்தக்க ஒன்று.

குப்பைக்கூளங்களால் மினி கூவமாகிறது

இத்தகைய பெருமை வாய்ந்த இந்த கல்லணைக்கால்வாயில் கொட்டப்படும் குப்பைக்கூளங்களால் மினி கூவமாக மாறி வருகிறது. ஆயிரக்கணக்கான ஏக்கர்கள் பாசன வசதி பெறும் இந்த கல்லணைக்கால்வாயில் தஞ்சையின் பல பகுதிகளில் பிளாஸ்டிக் கழிவுகள், ஓட்டல் கழிவுகள், வீடுகளின் குப்பைகள் போன்றவை கொட்டப்படுகின்றன. இந்த ஆற்றில் தண்ணீர் வரும் போது இவை அடித்துச் செல்லப்பட்டு ஷட்டர்கள் உள்ள பகுதியில் தேங்கி தண்ணீர் ஓட்டத்தை தடுக்கிறது. இதுபோன்று இந்த ஆற்றின் பல பகுதிகளில் பொதுமக்களால் 

இந்த ஆறு, முழுக்க முழுக்க பாசனத்துக்காக மட்டுமே வெட்டப்பட்டது என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும். இயற்கையான ஆறுகள் பள்ளத்தை நோக்கியே ஓடும். ஆனால், இந்த ஆறு மேடான பகுதிகளுக்குள்ளும் புகுந்து செல்லும்.

வரை கோடுகள் மூலம் துல்லியம்

கடைமடை வரை தண்ணீரை தடையில்லாமல் கொண்டு செல்லும் வகையில் கடல் மட்டத்திலிருந்து ஒரு குறிப்பிட்ட அடி உயரம் கொண்ட நிலப் பகுதிகளை வரைகோடுகள் மூலம் துல்லியமாக இணைத்து அதற்கேற்ப மேடான பகுதிகளை வெட்டி உருவாக்கப்பட்ட சமஉயர் கால்வாய் இது என்கின்றனர் பொறியாளர்கள்.

தஞ்சை பெரிய கோயிலை ஒட்டி இந்த புது ஆறு 30 ஆடி ஆழத்திலும், ஒரத்தநாடு திருவோணம் அருகே 30 அடி உயரத்திலும் செல்லும் என்பதே இதற்கு சாட்சி. மேலே பார்ப்பதற்கு நீரோட்டம் சலனமின்றி தெரிந்தாலும் அடி நீரோட்டம் அதிவேகமாக இருக்கும். அது மேலே தெரிவதைவிட கீழே மூன்று மடங்கு அதிகமாக இருக்கும். செயற்கையாக உருவாக்கப்பட்டாலும் கடைமடை வரை தண்ணீர் செல்லும் வகையில் துல்லியமாக அமைக்கப்பட்டுள்ளது. இந்த புது ஆறு எனப்படும் கல்லணைக்கால்வாய். இதை மினி கூவமாக மாற்றாமல் இருக்க பொதுமக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்பதுதான் அனைவரின் எதிர்பார்ப்பு.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
மதுரையில் முதலீட்டு மாநாடு: ரூ.36,000 கோடி அறிவிப்பு, ஆனால் மதுரைக்கு வெறும் 4% மட்டும் தானா?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
UGC: இனி கல்லூரிகளிலும் மும்மொழிக் கொள்கை; யுஜிசி உத்தரவு- தமிழ்நாட்டில் எப்படி?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
பள்ளி, கல்லூரி ஆசிரியர்களுக்கு குஷி; இனி சம்பளத்தில் பிடித்தம் கிடையாது- வெளியான முக்கிய அறிவிப்பு- யார் யாருக்கெல்லாம்?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IPL Auction 2026: கீரினுக்கு ஸ்கெட்ச் போடும் சிஎஸ்கே! ஏலத்தில் குதிக்கும் 350 வீரர்கள்.. யார் யாருக்கு என்ன அடிப்படை விலை?
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
IND vs SA 1st T20:டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா.. மேட்ச்சை ஜெயிக்குமா இந்தியா? பேட்டிங் செய்யும் சூர்யா பாய்ஸ்
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Kia Sonet: ரூ.8 லட்சம் இருந்தால் போதும்.. Kia Sonet கார் மைலேஜ், சிறப்புகள் என்னென்ன?
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
Suryakumar Yadav: சொதப்போ சொதப்பல்.. என்னதான் ஆச்சு சூர்யகுமார்? கடைசி 13 டி20 ரன்களை பாருங்க!
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
சாதனை படைத்த வந்தாரா! அனந்த் அம்பானிக்கு கிடைத்த பெருமை! விலங்கு நலனுக்காக உலகளாவிய அங்கீகாரம்..
Embed widget