மேலும் அறிய

தஞ்சை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு இடையூறாக நிறுத்தப்படும் பைக்குகள்: அபராதம் விதிக்க வலியுறுத்தல்

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வருபவர்களும் ஆங்காங்கே பைக்குளை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் பல்வேறு சிரமதிற்கு ஆளாகி வருகின்றனர்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகளுக்கு நடந்து செல்வதற்கு இடையூறாக நிறுத்தப்படும் பைக்குகளின் உரிமையாளர்களுக்கு உரிய அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

தஞ்சை புதிய பேருந்து நிலையம் மிக முக்கியமான பகுதியாக உள்ளது. இங்கிருந்து  மதுரை, வேளாங்கண்ணி, கன்னியாகுமரி, திருச்செந்தூர், கோவை, திருச்சி, புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம், பட்டுக்கோட்டை, கும்பகோணம், மயிலாடுதுறை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த பேருந்து நிலையத்திற்கு மையப்பகுதியில் உள்ள வாயில் வழியாக நகரத்துக்குள் இயக்கப்பபடும் பேருந்துகள் சென்று வருகின்றன.

இந்த பகுதியில் இருந்து தஞ்சை பழைய பேருந்து நிலையத்திற்கும், மருத்துவக்கல்லூரிக்கும் பேருந்துகள் தொடர்ந்து இயக்கப்பட்டு வருகின்றன. இரவு நேரங்களில் மட்டும் இங்கிருந்து நகர பேருந்துகள் இயக்கப்படுவது இல்லை. மற்ற நேரங்களில் நகர பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தஞ்சையில் இருந்து கல்லூரிகளில் படிப்பதற்கும், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் வேலைக்காகவும் ஏராளமானோர் வெளியூர்களுக்கு சென்று வருகின்றனர். வெளியூர்களில் வேலை பார்ப்பவர்கள் கொண்டு வரும் பைக்குகளை நிறுத்த ஸ்டாண்டும் செயல்பட்டு வருகிறது.

தஞ்சை நகர் பகுதியில் இருந்து பலர் பைக்குகளில் புதிய பேருந்து நிலையத்திற்கு வருகின்றனர். அப்படி வருபவர்களில் சிலர் முறையாக வாகன நிறுத்தும் இடத்தில் தங்களது இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். சிலர் பேருந்துகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக பைக்குகளை பயணிகள் அமர்வதற்காக கட்டப்பட்டுள்ள இருக்கைகள் பகுதியில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். காலையில் பைக்குகளை நிறுத்தவிட்டு சென்றால் மாலையில் வந்து தான் அதை எடுத்து செல்கின்றனர்.

புதிய பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளுக்கு வருபவர்களும் ஆங்காங்கே பைக்குளை நிறுத்திவிட்டு செல்கின்றனர். இதனால் பயணிகள் பல்வேறு சிரமதிற்கு ஆளாகி வருகின்றனர். பட்டுக்கோட்டை மார்க்கமாக செல்லக்கூடிய பேருந்துகள் நிறுத்துவதற்கு இடவசதி செய்யப்பட்டுள்ளது. ஆனால் அந்த பகுதியில் பைக்குகளை வரிசையாக நிறுத்திவிட்டு செல்வதால் பேருந்துகள் அதற்குரிய இடத்தில் நிற்காமல் வேறு இடத்தில் நிறுத்தி பயணிகளை ஏற்றி செல்கிறது.

இதனால் மற்ற பேருந்துகள் வந்து செல்வதற்கும் சிரமமாக இருக்கிறது. அதேபோல் பயணிகள் நடமாடக்கூடிய இடங்களிலும் பைக்குகளை வரிசையாக நிறுத்திவிட்டு செல்வதால் பயணிகளும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர். ஏற்கனவே ஒரு வாகன நிறுத்தம் இருக்கும் நிலையில் அந்த வாகன நிறுத்தும் இடத்தில் வாகனங்கள்  நிரம்பி வருவதால் திறந்தவெளியில் தான் வாகனங்களை நிறுத்தக்கூடிய நிலை உள்ளது.

இதை கருத்தில் கொண்டும் சிலர் அங்கே வாகனத்தை நிறுத்தாமல் பயணிகள், பேருந்துகளுக்கு இடையூறாக வாகனங்களை நிறுத்திவிட்டு செல்கின்றனர். எனவே பேருந்துகள் மற்றும் பயணிகளுக்கு இடையூறாக வாகனங்கள் நிறுத்தப்படுவதை தடுப்பதுடன், கூடுதலாக  வாகன நிறுத்துமிடம் அமைக்க வேண்டும். அவ்வாறு அமைத்தால் தான் இருசக்கர வாகனங்கள் இடையூறாக நிறுத்துவதை தவிர்க்க முடியும். மேலும் போக்குவரத்து பிரிவு காவலர்கள் புதிய பேருந்து நிலையத்தில் பேருந்துகளுக்கு இடையறாக வாகனங்களை நிறுத்தும் உரிமையாளர் மீது அபராதம் விதிக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து பயணிகள் தரப்பில் கூறுகையில், பயணிகள் நடப்பதற்கும், பேருந்துகள் வரும் வரை காத்திருப்பதற்காக அமைக்கப்பட்டுள்ள இருக்கைகள் பகுதிவரை பைக்குகளை நிறுத்தி உள்ளனர், இதனால் நடந்து செல்லவும் பெரும் அவதியாக உள்ளது. காலை முதல் இரவு பணி முடிந்து அந்த பைக்குகளின் உரிமையாளர்கள் வந்து எடுத்தால்தான் அந்த இடம் காலியாகும். இப்படி அனைத்து தரப்பினருக்கும் அவதியை அளித்து வருகின்றனர். எனவே இனியும் இது போல் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சை பெரிய கோயில் பகுதியில் ரூ.25 கோடியில் மேம்பாட்டு பணிகள்: விரைவில் டெண்டர்: எம்.பி. முரசொலி மகிழ்ச்சி தகவல்
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தஞ்சாவூருக்கு இன்று மதியம் துணை குடியரசுத் தலைவர் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம் ஹெலிகாப்டரில் ஒத்திகை
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
TVK VCK Alliance: இனி விஜய்கூடதான் டிராவல்.. ஆட்சியில் உக்காந்து 3 மாசம் முடிஞ்சு சொன்ன திருமா - என்ன காரணம்?
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
மீண்டும் ஒரு காவல் மரணம்: மதுரை பூசாரி பலி! தவெக ஆட்சியிலும் மனித உரிமை மீறலா? அன்புமணி கேள்வி
Director Cheran: ”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
”அப்பா - மகன் சண்டையால் படம் நின்னு போச்சு” அன்புமணி - ராமதாஸால் கடுப்பான இயக்குனர் சேரன்
Aavin Price: ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
ஆவின் பால் கொள்முதல் விலையை உயர்த்த தமிழக அரசு முடிவு? உற்பத்தியாளர்கள் ஹாப்பி & கலக்கத்தில் பயனர்கள்
"எஸ்.ஐ மேலேயே கைய வச்சியா?" - பளார் விட்ட தஞ்சை இளைஞரின் கதி என்ன? என்னென்ன பிரிவுகளில் கேஸ்?
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
காவல் நிலையத்தில் என்ன நடந்தது? அய்யா பரமசிவம் மரணத்திற்கு காரணம் யார்? கேள்வி கேட்கும் வேல்முருகன்
SUV Rivals: எஸ்யுவி தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
SUV தான் வேணும்னு அடம்பிடிக்காதிங்க..! இந்த 4 கார் மாடல்களை ஓட்டியதுண்டா? - விலை, மைலேஜ், வசதி
TN Weather News: இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இன்றைய கனமழை எச்சரிக்கை..! எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Embed widget