மேலும் அறிய

ஆதரவற்ற முதியவர்களுடன் மேயர் தீபாவளி கொண்டாட்டம்! நெகிழ்ச்சியில் உருகிய உள்ளங்கள்!

இதுபோன்று தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுவதில் உள்ள இன்பம் வேறு எதில் இருக்க முடியும். இவர்கள் அனைவரும் என்னை அவர்களின் மகனாகவே பார்க்கின்றனர்.

தஞ்சாவூர்: யாருக்கும் யாரும் இல்லை என்ற எண்ணமே ஏற்படக்கூடாது என்பதுதான் என் விருப்பம். அதற்காகவே என் குடும்பமாக நினைத்து இவர்களுடன் நான் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுகிறேன் என்று மேயர் சண்.ராமநாதன் தெரிவித்தார்.

தீபாவளி பண்டிகையை தன் குடும்பத்தினருடன் கொண்டாடாமல் ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் கொண்டாடி, அங்கிருந்தவர்களை பாசத்தால் நெகிழ வைத்தது மட்டுமில்லாமால் ஆனந்த கண்ணீரை வரவழைத்து வட்டார் தஞ்சை மேயர் சண்.ராமநாதன். நான் உங்க பிள்ளைம்மா என்று கூறி மேலும் நெகிழ வைத்து விட்டார். 

தீபாவளி... பலருக்கு அது வலியும் கூட. உற்றார், உறவினர்கள் இருந்தும் ஒதுக்கப்பட்டு ஆதரவு இல்லாமல் மனதிற்குள் கனமான வலியை சுமந்து வாழும் முதியோர்களை அன்பு என்ற பிணைப்பில் கட்டி போட்டி நான் இருக்கிறேன் என்று வார்த்தைகளில் இல்லாமல் செயலிலும் செய்து காட்டி அவர்களை மகிழ்ச்சி கடலில் ஆனந்தமாக உலா வரும்படி செய்து உள்ளார் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன்.


ஆதரவற்ற முதியவர்களுடன் மேயர் தீபாவளி கொண்டாட்டம்! நெகிழ்ச்சியில் உருகிய உள்ளங்கள்!

தீபாவளி பண்டிகை அன்று புத்தாடைகள் அணிந்தோமா, குடும்பத்தினர் உறவினர்களுடன் பட்டாசுகளை வெடித்து நேரத்தை செலவிட்டோமா என்றுதான் பலருக்கும் அன்றைய பொழுது நகர்ந்திருக்கும். விவிஐபிக்கள் கூட தங்களின் குடும்பத்தினருடன் தீபாவளியை உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்தனர். மகிழ்ச்சி என்பது எப்படி இருக்கும்... வெடித்து சிதறும் பட்டாசுகள் போலவா அல்லது சாப்பிட்டு மகிழும் இனிப்பு போலவா. அதெல்லாம் இல்லைங்க... இதுதான் உண்மையான மகிழ்ச்சி என்று தஞ்சாவூர் மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன் ஆண்டுதோறும் தீபாவளியை ஆதரவற்ற முதியோர் இல்லம் சென்று பிள்ளைகளின் அரவணைப்பு இல்லாமல் வாடும் முதியோர்களிடம் நானும் உங்கள் பிள்ளை தான் எனக் கூறி அவர்களை நெகிழ வைத்து ஆனந்தக் கண்ணீர் வடிக்க வைத்து வருகிறார். 

ஆதரவற்ற முதியோர் பிள்ளைகள் வந்து பார்க்கவில்லையே என யாரும் கவலைப்படக் கூடாது என்றும் நான் மேயராக வரவில்லை, உங்கள் பிள்ளையாக வந்திருக்கிறேன் எனவும் கூறி தனது கையாலேயே அவர்களுக்கு தீபாவளி விருந்து வைத்து அவர்கள் மனமார, வயிறு நிரம்ப சாப்பிட்டதை கண்டு மகிழ்ந்தும் உள்ளார். பண்டிகை நாளன்று கூட பெற்றப் பிள்ளைகள் கூட எட்டிபார்க்காததால் மிகுந்த மன சஞ்சலத்தில் இருந்த முதியோர்கள், மேயர் சண்.ராமநாதன் வருகையால் கவலையை மறந்தனர். வயதை மறந்தனர். குழந்தையாகவே மாறிவிட்டனர். புஸ்வாணத்தை பற்றவைத்து அது படபடவென்று மேல் எழும்பியதை கண்டு பரவசப்பட்டு குழந்தையாக குதூகலித்தனர். 

உண்மையான மகிழ்ச்சி புத்தாடைகள் அணிவது, இனிப்புகள், அசைவ உணவுகள் சாப்பிடுவது, புதுப்படம் பார்ப்பது என தீபாவளி அன்று கொண்டாட்டங்கள் களைக்கட்டினாலும் இது போன்ற ஆதரவற்ற குழந்தைகள், முதியோர் இல்லங்களில் அவர்களை மகிழ்வித்து மகிழ்வதில் உள்ள ஆனந்தம் வேறு எதற்கும் ஈடாகாது என்பதை செய்தே காட்டி விட்டார் தஞ்சாவூர் மேயர் சண்.ராமநாதன். தொடர்ந்து தீபாவளியை இங்குதான் கொண்டாடி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து மேயர் சண்.ராமநாதன் கூறுகையில், யாருக்கும் யாரும் இல்லை என்ற எண்ணமே இருக்கக்கூடாது. என் குடும்பத்தினருடன் கொண்டாடி மகிழ்வதை விட இவர்களையே என் குடும்பமாக நினைத்து நான் இங்கு வந்து காலையில் அறுசுவை விருந்து அளித்து பின்னர் வெடி வெடித்து மகிழ்வித்து மகிழ்கிறேன். தங்களுக்கு யாரும் இல்லை என்று இவர்கள் எப்போதும் நினைக்கக்கூடாது. இவர்களின் மகனான நான் எப்போதும் இருப்பேன். இவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் நான் எப்போதும் செய்வேன். இதுபோன்று தீபாவளியை உற்சாகமாக கொண்டாடுவதில் உள்ள இன்பம் வேறு எதில் இருக்க முடியும். இவர்கள் அனைவரும் என்னை அவர்களின் மகனாகவே பார்க்கின்றனர். அவர்களின் மகனாக இருந்து மகிழ்விக்கிறேன். மனமும் நிறைந்து இவர்கள் கூறும் வாழ்த்துக்கள் தலைமுறைகள் தாண்டியும் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் கூறினார். 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
முன்பட்ட குறுவை: நாற்றங்கால் தயாரிப்பில் தீவிரம் காட்டும் தஞ்சை விவசாயிகள்!
"கர்ம வினையின் கணக்குப்பிள்ளை: பாசக்கயிறோடு தீர்ப்பெழுதும் காலதேவன்!"
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
நல்லெண்ணெய்க்கு தரமான எள் விளைவிக்க என்ன செய்ய வேண்டும்?
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
மண்ணின் உயிர் நண்பன் மண்புழு... மண்வளத்தை பெருக்கும் அற்புத சக்தி!
West Bengal | Phase 1

152 Constituencies 23RD APRIL 2026 | Thursday

92.22% VOTING
West Bengal | Phase 2

142 Constituencies 29TH APRIL 2026 | Wednesday

92.67% VOTING
Tamil Nadu | Single Phase

234 Constituencies 23RD APRIL 2026 | Thursday

85.01% VOTING
Puducherry | Single Phase

30 Constituencies 9TH APRIL 2026 | Thursday

89.83% VOTING
Kerala | Single Phase

140 Constituencies 9TH APRIL 2026 | Thursday

78.03% VOTING
Assam | Single Phase

126 Constituencies 9TH APRIL 2026 | Thursday

85.38% VOTING

Counting Day 4th MAY 2026 | Monday

வீடியோ

Vijay warns Ministers |
சுத்துப்போட்ட திமுக கவுன்சிலர்கள்! “பேசவே விடமாட்றாங்க” கடுப்பாகி கிளம்பிய தவெக MLA
உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார் தமிழ்ப்பெண் வழக்கறிஞர்! யார் இந்த மோகனா?
கோவை சிறுமி வழக்கு 2 பேர் மீதும் குண்டாஸ் வெளியவே வர முடியாது IG ரம்யா அதிரடி
காரை ஓட்டி கொன்ற சிறுவன் ஜாமீனில் வெளிவந்த தந்தை குத்தாட்டம் போட்ட குடும்பம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
Mahesh Kumar IPS: தமிழ்நாட்டின் புதிய டிஜிபி ஆக மகேஷ்குமார் அகர்வால் நியமனம்; யார் இவர்?
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
ஆசிரியர்களுக்கு அசத்தல் வாய்ப்பு; டெட் தேர்வில் தேர்ச்சி பெற அவகாசம் நீட்டிப்பு
Udhayanidhi Stalin: “நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
“நீங்க கத்துக்கிட்டு வந்து காப்பாத்துற வரை தமிழ்நாடு தாங்காது CM Sir“ - வெளுத்துவிட்ட உதயநிதி
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Ramesh: ”பிராமணர்னு லஞ்சம் வாங்குனவர மன்னிச்சு விட்டுட்டேனா?” அமைச்சர் ரமேஷ் அதிரடி பேச்சு
Minister Nirmal Kumar: ''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
''அரசியலுக்காக சர்ச்சை செய்யும் டி.கே. சிவக்குமாருக்கு கண்டனம்''; அமைச்சர் நிர்மல் குமார் அதிரடி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
முதல்வர் விஜய் அறிவிப்பின்படி 717 மதுக்கடைகளும் மூடப்படாதது ஏன்? எத்தனை மூடல்? அன்புமணி கேள்வி
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
கல்வியை வணிகமாக்குவதா? பள்ளிக் கட்டணத்தில் வெளிப்படைத்தன்மை; உடனடி நடவடிக்கை எடுக்கக் கோரிக்கை!
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Sivakumar: ”விஷக்கிருமிகள் 69 ஆண்டுகள் ஆண்டு இருக்கே, திமுகவை புடிக்கல” சிவக்குமாரின் ஓபன் டாக்
Embed widget