மேலும் அறிய

மாலை நேரத்தில் மக்கள் கூடும் தஞ்சாவூரின் மாஸான இடம்... ராஜப்பா பூங்கா..!

தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகில் மிகவும் பழமையான, 138 ஆண்டுகள் கடந்தும் கனகச்சிதமாக கம்பீரமாக நிற்கும் மணிக்கூண்டு அமைந்துள்ள ராஜப்பா பூங்கா

காற்று வாங்க போனேன்... வரலாற்றை படித்து வந்தேன் என்று ராகம் போட்டு பாடலாம். எங்கு தெரியுங்களா. தஞ்சையில் பழைய பேருந்து நிலையம் அருகில் மிகவும் பழமையான, 138 ஆண்டுகள் கடந்தும் கனகச்சிதமாக கம்பீரமாக நிற்கும் மணிக்கூண்டு அமைந்துள்ள ராஜப்பா பூங்காவில்தான். மாலை நேரத்தில் மக்களுக்கு பொழுது போக்க மாஸான ஒரு இடமாக உள்ளது.

தஞ்சை நகரின் மைய பகுதியில் அண்ணா சிலை அருகே அமைந்துள்ளது ராஜப்பா பூங்கா உள்ளது. மராட்டிய கட்டிட கலை மற்றும் ஆங்கிலேயர் கட்டிட கலை இணைந்து கட்டப்பட்டுள்ளது என கூறப்படுகிறது. மணிகூண்டின் உச்சியில் உள்ள கடிகாரம் ஒவ்வொரு மணி நேரத்துக்கும் ஒலி எழுப்பும். மேலும் கீழிருந்து கோபுரத்துக்குள் செல்ல படிக்கட்டுகள் உள்ளன. இதன்மூலம் கோபுரம் உச்சிக்கு சென்று தஞ்சை நகரின் அழகை ரசிக்க முடியும்.

மாலை நேரத்தில் மக்கள் கூடும் தஞ்சாவூரின் மாஸான இடம்... ராஜப்பா பூங்கா..!
தஞ்சை மக்களின் மாலைநேர பொழுது போக்கு பூங்காவாக இருந்த இந்த ராஜப்பா பூங்கா ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பொலிவு பெற்றுள்ளது. கண்கவர் விளக்குகள், ஹாயாக அமர்ந்து ரிலாக்சாக குடும்ப கதை, ஆபீஸ் கதை பேச மர இருக்கைகள், சுற்றிலும் உள்ள மரங்களில் இருந்து சிலுசிலுவென்று வீசும் தென்றல் என்று மாலைநேரத்து சுகத்தை மனம் முழுவதும் நிரப்பி ரிலாக்ஸ் ஆக மாற்றிக் கொள்ளும் அளவிற்கு ராஜப்பா பூங்கா தக, தகவென்று மாறி உள்ளது.

இந்த பூங்காவில் மணிக்கூண்டு உள்ளது. இதனை ராணிஸ் டவர் என்றும் அழைப்பது உண்டு. மணிக்கூண்டு ராசா மிராசுதார் மருத்துவமனையின் ஒரு பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மணிக்கூண்டு 1883-ம் ஆண்டு அமைக்கப்பட்டுள்ளது.

மாலை நேரத்தில் மக்கள் கூடும் தஞ்சாவூரின் மாஸான இடம்... ராஜப்பா பூங்கா..!
விக்டோரியா மகாராணி முடி சூட்டியதை நினைவுப்படுத்தும் வகையில் இந்த மணிக்கூண்டு அமைக்கப்பட்டது என்றும், மணிக்கூண்டை கட்ட தஞ்சாவூர் நகராட்சிக்கு மராட்டிய ராணி நிதி கொடுத்ததால் ராணிஸ் டவர் என்று அழைக்கப்படுவதாகவும் காற்று வழி செய்திகள் உலா வருகிறது. இந்த பூங்கா 3,284 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ளது. இதில் மணிக்கூண்டு 185 சதுரமீட்டர் பரப்பளவில் உள்ளது. இந்த மணிக்கூண்டு 130 அடி உயரம் கொண்டது. கட்டிடம் முழுவதும் செங்கல் மற்றும் சுண்ணாம்பு கலவையால் கட்டப்பட்டது. செங்கலின் மேல் சிமெண்டு பூச்சு இல்லாமல் மிகுந்த கலை நயத்துடன் காட்சி அளிக்கிறது.

புதுப்பொலிவு பெற்றுள்ள இந்த பூங்கா தஞ்சை பகுதி மக்களுக்கு மட்டுமின்றி பெரிய கோயிலுக்கு வரும் பக்தர்கள், வெளி மாவட்ட, மாநில மக்கள் இளைப்பாறவும் வெகுவாக பயன்பட்டு வருகிறது. மாலை நேரத்தில் உடலை பிட்டாக வைத்துக் கொள்ள நடைப்பயணம் செய்யவும் இங்கு வசதி உள்ளது. குழந்தைகள் விளையாடி மகிழ விளையாட்டு மையமும் உள்ளதால் அனைத்து தரப்பு மக்களின் விருப்ப இடமாக உள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Breaking News LIVE 28th Sep 2024: இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் - இன்றும் மழை வருமா?
Breaking News LIVE 28th Sep 2024: இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் - இன்றும் மழை வருமா?
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Nirmala Sitharaman: ”தேர்தல் பத்திரம் மூலம் பணம் பறிப்பு” - நிர்மலா சீதாராமன் மீது வழக்குப்பதிய நீதிமன்றம் உத்தரவு
Breaking News LIVE 28th Sep 2024: இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் - இன்றும் மழை வருமா?
Breaking News LIVE 28th Sep 2024: இந்தியா - வங்கதேசம் டெஸ்ட் போட்டியின் 2வது நாள் - இன்றும் மழை வருமா?
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
டெல்லியில் இருந்து திரும்பிய முதல்வர் ஸ்டாலின்.. விமான நிலையத்திற்கே சென்று சந்தித்த செந்தில் பாலாஜி!
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !
திருப்பதி லட்டு விவகாரத்தில் சந்திரபாபு நாயுடு, கடவுளோடு விளையாடுகிறார் - மதுரையில் ரோஜா பேட்டி !
திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம்... 'டீ' வியாபாரியை வழிமறித்து வெட்டி படுகொலை...
திருவிழாவில் ஏற்பட்ட முன் விரோதம்... 'டீ' வியாபாரியை வழிமறித்து வெட்டி படுகொலை...
Rasi Palan Today, Sept 28: மிதுனத்துக்கு முகப் பொலிவு அதிகரிக்கும்; கடகத்துக்கு பகை விலகும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rasi Palan Today: மிதுனத்துக்கு முகப் பொலிவு அதிகரிக்கும், கடகத்துக்கு பகை விலகும்.. உங்கள் ராசிக்கான பலன்
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Rain Update: மக்களே உஷார்..! இன்று 19 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு - எங்கெல்லாம் தெரியுமா?
Nalla Neram Today Sep 28: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Nalla Neram: நல்ல நேரம் இன்று எப்போது? இன்றைய பஞ்சாங்கம்! சுபகாரியங்கள் எப்போ செய்யலாம்?
Embed widget