மேலும் அறிய

கண்களில் கருப்பு துணியை கட்டி கைகளில் கருப்பு கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இந்த வருடம் விவசாயிகள் குறித்து பதிவேற்றம் செய்வதில் சில குளறுபடிகள் உள்ளது. நிலம் உரிமையாளர்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யும் வகையில் கணினியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு விவசாயிகள் கண்களை கட்டிக் கொண்டு ஈடுபட்ட கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது.

குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்காமல், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய தமிழக அரசை வலியுறுத்தி தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு, கண்களில் கருப்பு துணிகளை கட்டி, தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கவன ஈர்ப்பு முழக்க ஆர்ப்பாட்டம் நடந்தது.

மேட்டூர் அணையில் இருந்து வரும் 12-ஆம் தேதி பாசனத்திற்காக தண்ணீர் திறந்து விடப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. இதனால் தஞ்சாவூர் மற்றும்  டெல்டா மாவட்டங்களில் விவசாயிகள் குறுவை சாகுபடி முன்னேற்பாடு பணிகளில் மும்முரம் காட்ட தொடங்கி உள்ளனர். இதற்காக தங்களின் வயல்களை உழுது, எரு அடித்து வருகின்றனர்.


கண்களில் கருப்பு துணியை கட்டி கைகளில் கருப்பு கொடியேந்தி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்

இந்த சூழ்நிலையில் குறுவை சிறப்பு தொகுப்பு திட்டத்தை தமிழக அரசு  அறிவித்துள்ளது. இதில் இந்த வருடம் விவசாயிகள் குறித்து பதிவேற்றம் செய்வதில் சில குளறுபடிகள் உள்ளது. நிலம் உரிமையாளர்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யும் வகையில் கணினியில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தை பொறுத்தவரையில் பெரும் அளவில் குத்தகை விவசாயிகள் உள்ளனர். நில உரிமையாளர்கள் மட்டுமே குறுவை சாகுபடி தொகுப்பை பெற முடியும் என்றால் பெரும் அளவில் குத்தகை சாகுபடி செய்துள்ள மற்றும் சாகுபடி செய்ய இருக்கின்ற விவசாயிகள் பாதிப்படைவார்கள். எனவே  குறுவை சாகுபடி அதிக அளவில் குறைந்து, நெல் கொள்முதலும் பாதிக்கும் அபாய நிலையில் உள்ளது.

இதனை கருத்தில் கொண்டு, குறுவை சிறப்பு தொகுப்பு திட்ட பயனாளிகளின் எண்ணிக்கையை குறைக்காமல், கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும். தமிழக அரசு உடனடியாக இந்த அறிவிப்பினை திரும்ப பெற்று அனைத்து விவசாயிகளும் பயன்பெறும் வகையில் பழைய நடைமுறையை அமல்படுத்த  வேண்டும் என்பன போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் சார்பில், பாபநாசம் வட்டார உதவி வேளாண்மை இயக்குனர் அலுவலகம் முன்பு கண்களில் கருப்பு துணிகளை கட்டி, பேனர் மற்றும் கருப்பு கொடிகளை கைகளில் ஏந்தி விவசாயிகள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் செய்தனர். 

இந்த கோரிக்கைளை நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஆர்ப்பாட்டத்திற்கு பின்னர் தமிழ்நாடு காவிரி உழவர்கள் பாதுகாப்பு சங்கம் செயலாளர் சுந்தர.விமல்நாதன் நிருபர்களிடம் கூறியதாவது: நடப்பாண்டு வரும் 12ம் தேதி மேட்டூர் அணை திறக்கப்பட உள்ளது.

பாரபட்சமில்லாமல் அனைத்து விவசாயிகளுக்கும் குறுவை தொகுப்பு திட்டத்தை நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். குத்தகை விவசாயிகளுக்கும் வழக்கம் போல் குறுவை தொகுப்பு திட்ட நிதியை வழங்க வேண்டும். காவிரி சமவெளி அல்லாத மாவட்டங்களுக்கு இந்த திட்டத்தை தமிழக அரசு நீட்டிக்கிறது. இதை நாங்கள் வரவேற்கிறோம். இதற்கு கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்ய வேண்டும். ஏற்கனவே உள்ள பயனாளிகளை குறைக்க கூடாது. இதை வலியுறுத்தி இந்த கவனஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

”50 வருஷம் போனதே தெரியல அடுத்த ஜென்மத்தில் நான்...” உணர்ச்சிவசப்பட்ட ரஜினி | Rajini Goa Speech
புரட்டிப்போட்ட டிட்வா புயல் மரத்தில் மாட்டிக்கொண்ட நபர் மூழ்கிய இலங்கை | Sri Lanka Ditwah Cyclone
Hindu Muslim | இதாண்டா தமிழ்நாடு! இந்து-முஸ்லீம் கூட்டு பிரார்த்தனை! கடலூரில் மத நல்லிணக்கம்!
Puducherry CM vs People | ’’ஒரு வாரத்துல நடக்கல..’’முதல்வரை மிரட்டிய நபர்புதுச்சேரியில் பரபரப்பு
Cyclone Ditwah | ’’நெருங்கும் டிட்வா புயல்நவம்பர் 30 சம்பவம் இருக்கு!’’பிரதீப் ஜான் எச்சரிக்கை

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
Ditwah Cyclone: மிரட்டும் டித்வா புயல்.. இன்றும், நாளையும் தமிழ்நாட்டில் ரெட் அலர்ட் - எந்த மாவட்டங்களுக்கு?
MK STALIN: குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
குட்ட குட்ட குனிய மாட்டோம்....மோடி அரசுக்கு எதிராக சீறிய ஸ்டாலின்
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
Ditwah Cyclone:: சுழற்றி அடிக்கும் சூறைக்காற்று... கர்ஜிக்கும் கடல்; தாக்குபிடிக்குமா மரக்காணம்?
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
கோலி மீண்டும் களத்தில்! தென்னாப்பிரிக்காவுக்கு எதிராக 'கிங்'கின் மிரட்டல் சாதனை
Crop insurance for farmers: விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
விவசாயிகளுக்கு குஷியோ குஷி... பயிர் காப்பீடு செய்ய விலக்கு- தமிழக அரசு அசத்தல் அறிவிப்பு
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
Toyota Glanza: ரூ.8 லட்சம்தான் ஆரம்ப விலை.. Glanza காரின் விலை, மைலேஜ் எப்படி?
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
சபரிமலை ஐயப்ப பக்தர்கள் கவனத்திற்கு! விமானத்தில் இருமுடி அனுமதி: எதிர்பாராத அறிவிப்பு!
Ditwah Cyclone: புயல் சென்னையில் கரையை கடக்குதா.?  பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
புயல் சென்னையில் கரையை கடக்குதா.? பொதுமக்களுக்கு அலர்ட் விடுத்த அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர்
Embed widget