மேலும் அறிய

ஏமாத்திட்டாங்கப்பா..ஏமாத்திட்டாங்க.. நாமம் போட்டு குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்த விவசாயிகள்!

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து மறுபரிசீலனை செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் விவசாயிகள் ஏமாற்றப்பட்டுள்ளனர். எனவே இதுகுறித்து மறுபரிசீலனை செய்து, உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி தமிழக அனைத்து விவசாயிகள் சங்கக் கூட்டியக்க மாநில துணைத் தலைவர் கக்கரை சுகுமாரன் தலைமையில் 5 விவசாயிகள் நெற்றில் நாமம் இட்டு வந்து தஞ்சை கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவரிடம் மனு அளித்தனர். இதனால் விவசாயிகள் கூட்டத்தில் சற்றே சலசலப்பு ஏற்பட்டது.

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று விவசாயிகள் குறைதீர் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில், கடந்த சம்பா பருவ பயிர் காப்பீடு இழப்பீடு வழங்கப்பட்டதில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு பாரபட்சமாக காப்பீட்டு நிறுவனம் செயல்பட்டது.

மாவட்டத்தில் கடந்த 2021-22 ஆம் ஆண்டு சம்பா பருவத்துக்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை 7 கிராமங்களுக்கு ரூ. 36 லட்சம் மட்டுமே கிடைத்தது. இந்த முரண்பாடு குறித்து காப்பீட்டு நிறுவனமும், புள்ளியல் துறையினரும் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும் விவசாயிகள் வலியுறுத்தினர்.

தொடர்ந்து, அக்ரிகல்சர் இன்சூரன்ஸ் நிறுவன தஞ்சாவூர் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் சதீஷ்குமார் விளக்கம் அளிக்கத் தொடங்கினார். ஆனால், விவசாயிகள் எழுப்பிய கேள்விகளுக்கு அவரால் பதில் அளிக்க முடியாமல் திணறினார். இதையடுத்து, விவசாயிகளை கலெக்டர் சமாதானப்படுத்தினார்.

பின்னர், புள்ளியல் துறை அலுவலர் பேசுகையில், எங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட இடங்களில் பயிர் அறுவடை சோதனை மேற்கொள்ளப்பட்டது. ஐந்து ஆண்டு கால சராசரி மகசூல் கணக்கிடுவதற்கும், எங்களுக்கும் தொடர்பு இல்லை எனவும், அப்பணியைக் காப்பீட்டு நிறுவனமே மேற்கொள்ளும் என்றும் விளக்கம் அளித்தார்.

தொடர்ந்து கூட்டத்தில் விவசாயிகள் பேசியதாவது: சுவாமிமலை சுந்தர. விமல்நாதன்: பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் அறுவடை சோதனை ஒளிவுமறைவாக நடத்தப்படுகிறது. எனவே, இத்திட்டம் தொடங்கப்பட்ட காலம் முதல் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும். எந்தவொரு காப்பீட்டு நிறுவனத்துக்கும் மாவட்ட அலுவலகம் கிடையாது.

பொன்னவராயன்கோட்டை வா. வீரசேனன்: கடந்த ஆண்டு சம்பா பருவத்தின்போது பெய்த பெரு மழை காரணமாக பயிர்கள் பாதிக்கப்பட்டதை தமிழக முதல்வர், அமைச்சர்கள் பார்வையிட்டனர். ஆனால், விவசாயிகள் செலுத்திய பிரிமிய தொகை கூட இந்த மாவட்டத்துக்குக் கிடைக்கவில்லை. எனவே, பாதிக்கப்பட்ட விவசாயிகளை ஊக்கப்படுத்தும் விதமாக ஏக்கருக்கு ரூ. 5,000 வழங்க தமிழக முதல்வர் முன்வர வேண்டும்.

மதுக்கூர் ஏ.பி. சந்திரன்: திருவாரூர் மாவட்டத்துக்கு ரூ. 94 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்துக்கு 7 கிராமங்களுக்கு ரூ. 36 லட்சம் மட்டும் பயிர் காப்பீடு வழங்கியிருப்பது வேதனை அளிக்கிறது. பயிர் காப்பீடு தவறாகக் கணக்கிடப்பட்டதால், விவசாயிகள் மன உளைச்சலுக்கும், வேதனைக்கும் ஆளாக்கியுள்ளனர். எனவே மறு பரிசீலனை செய்ய வேண்டும்.


ஏமாத்திட்டாங்கப்பா..ஏமாத்திட்டாங்க.. நாமம் போட்டு குறைதீர் கூட்டத்தில் மனு கொடுத்த விவசாயிகள்!

தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலர் என்.வி. கண்ணன்: தமிழக முதல்வர் பார்வையிட்ட மதுக்கூர் வட்டாரத்தில் ஒருவருக்குக் கூட பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகை கிடைக்கவில்லை. எனவே பிரிமிய தொகையைச் செலுத்துவதால் எந்தப் பயனும் இல்லை என்ற நிலைமை உள்ளது.

அன்னப்பன்பேட்டை எம். செல்வராஜ்: கடந்த 2017 -18 ஆம் ஆண்டில் பயிர் சேதம் 62 சதவீதம் எனக் கணக்கிடப்பட்டு, அறிவிக்கப்பட்ட ரூ. 16,000 இழப்பீடு இதுவரை கிடைக்கவில்லை. இவ்வாறு பேசினர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

ABP Southern Rising Summit 2025 LIVE:  தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
ABP Southern Rising Summit 2025 LIVE: தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

தீவிரவாதிகள் தற்கொலைத் தாக்குதல் வெடித்து சிதறிய ராணுவ பகுதி பாகிஸ்தானில் பயங்கரம்  | Pakistan Peshawar Blast
தவெகவில் செங்கோட்டையன்? Deal- ஐ முடித்த விஜய் ஆபரேஷன் கொங்கு மண்டலம் | TVK | Sengottaiyan Joins TVK
நேருக்கு நேர் மோதிய 2 பஸ்கள் துடிதுடித்து போன உயிர்கள் சோகத்தில் உறைந்த தென்காசி பகீர் காட்சி |Tenkasi Bus Accident
”SPEAKER பதவி எனக்கு தான்” நிதிஷ் GAME STARTS பாஜக வைக்கும் செக் | Bihar | NDA | Nitish Kumar
Weather Report | இன்னும் 24 மணி நேரத்தில்..மீண்டும் வெள்ள அபாயம்?வெதர்மேன் கொடுத்த UPDATE

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ABP Southern Rising Summit 2025 LIVE:  தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
ABP Southern Rising Summit 2025 LIVE: தமிழ்நாட்டில் நடப்பதை அரசியல் என்று சொல்ல முடியாது, அது ஒரு போர் - அண்ணாமலை
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
பொருளாதார, அரசியல் ரீதியாக வலுவான மாநிலங்களை பலவீனமாக்க பாஜக முயற்சி - உதயநிதி ஸ்டாலின் பேச்சு
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
Chandra Chaitanya: கட்டபொம்மனை காட்டிக் கொடுத்தாரா எட்டப்பன்? எட்டயபுர மகாராஜா சந்திர சைதன்யா பரபரப்பு விளக்கம்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
CM Stalin: கோவையில் முதலமைச்சர் ஸ்டாலின்.. செம்மொழி பூங்கா திறப்பு, ரூ.43,844 கோடிக்கு புதிய ஒப்பந்தங்கள்
IND vs SA 2 Test: 500 ரன்களுக்கும் மேல் போன டார்கெட்.. இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு சங்குதானா? பயமுறுத்தும் தென்னாப்பிரிக்கா!
IND vs SA 2 Test: 500 ரன்களுக்கும் மேல் போன டார்கெட்.. இந்த போட்டியிலும் இந்தியாவுக்கு சங்குதானா? பயமுறுத்தும் தென்னாப்பிரிக்கா!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து  ஆச்சரியம்  மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
அசத்தல் படைப்பு! துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலினை கால்களால் வரைந்து ஆச்சரியம் மூட்டிய மயிலாடுதுறை மாற்றுத்திறனாளி மாணவி..!
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
சென்னையில் ABP Southern Rising Summit 2025.. உதயநிதி ஸ்டாலின் முதல் அண்ணாமலை வரை தலைவர்கள் பங்கேற்பு
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
Tata Sierra SUV: வந்தாச்சு டாடா சியாரா.. தொடக்க விலை ரூ.11.49 லட்சம் மட்டுமே, வேரியண்ட், இன்ஜின் ஆப்ஷன்கள்
Embed widget