மேலும் அறிய

தஞ்சையில் மருத்துவப்படிப்பு படிக்காமல் கிளீனிக் அமைத்து சிகிச்சை அளித்த முதியவர் கைது

எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வருவதாக பல புகார்கள் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு சென்றுள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே மருத்துவப்படிப்பு படிக்காமல் கிளீனிக் அமைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்து வந்த ஓய்வுபெற்ற மருந்தாளுனரை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி சாலை கணபதி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணியன் (75). இவர் பார்மசி படித்தவர். தஞ்சாவூர் நகராட்சியாக இருந்தபோது மருந்தாளுநராக வேலை பார்த்து கடந்த 2005-ம் ஆண்டு ஓய்வு பெற்றுள்ளார்.

இந்நிலையில் தஞ்சை அருகே மாதாக்கோட்டை சாலையில் சுப்பிரமணியன் கிளீனிக் வைத்து நடத்தி வந்ததாக கூறப்படுகிறது. ஆனால் இவர் பார்மசி முடித்துவிட்டு தனக்கு இருந்த அனுபவத்தின் அடிப்படையில் பொதுமக்கள் சிலருக்கு சிகிச்சையும் அளித்ததாக கூறப்படுகிறது.

இதையடுத்து எம்.பி.பி.எஸ் மருத்துவப்படிப்பு படிக்காமல் சுப்பிரமணியன் சிகிச்சை அளித்து வருவதாக பல புகார்கள் மருத்துவத்துறை அதிகாரிகளுக்கு சென்றுள்ளது. இதுகுறித்து மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் திலகம் தமிழ்ப் பல்கலைக்கழகம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.

இதன் பேரில் தமிழ்ப் பல்கலைக்கழக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று  சுப்பிரமணியனிடம் விசாரணை நடத்தி உள்ளனர். இதில் அவர் மருத்துவப்படிப்பு படிக்காமல் கிளீனிக் நடத்தியது தெரியவந்தது. இதையடுத்து சுப்பிரமணியன் நடத்தி வந்த கிளீனிக்கை போலீசார் இழுத்து பூட்டினர். மேலும் மருத்துவப்படிப்பு படிக்காமல் சிகிச்சை அளித்ததாக சுப்பிரமணியனை கைது செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். இந்த சம்பவம் தஞ்சை பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து போலீசார் தரப்பில் கூறுகையில், சுப்பிரமணியன் என்பவர் மருத்துவப்படிப்பு படிக்காமல் பொதுமக்களுக்கு கிளீனிக் அமைத்து சிகிச்சை அளித்து வருகிறார் என்று புகார் வந்தது. தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டோம். இதில் சுப்பிரமணியன் மருத்துவப்படிப்பு படிக்கவில்லை என்பதும், மருந்தாளுனராக இருந்த அனுபவத்தை வைத்து பொதுமக்களுக்கு சிகிச்சை அளித்ததும் தெரியவந்தது. இதை தொடர்ந்து சுப்பிரமணியனை கைது செய்தோம். மேலும் கிளீனிக்கிற்கும் பூட்டு போடப்பட்டுள்ளது. மேலும் அவரிடம் விசாரணை மேற்கொண்டுள்ளோம் என்று தெரிவித்தனர்.

பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், அவர் டாக்டர் இல்லை என்பது தெரியாது, அப்பகுதியை சேர்ந்தவர்கள் மட்டுமின்றி சுற்றுப்பகுதியில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களும் இந்த கிளீனிக்கிற்கு வந்து  சிகிச்சை பெற்றுள்ளனர். போலீசார் நடவடிக்கை எடுத்து கிளீனிக்கிற்கு பூட்டு போட்டுள்ளனர். இதற்கு பிறகுதான் அவர் போலி டாக்டர் என்று எங்களுக்கு தெரிய வந்தது. தற்போது அவரை கைது செய்துள்ளனர். இதற்கு முன்பு இவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் குறித்தும் விசாரணை நடத்தி அவர்களுக்கு மருத்துவப்பரிசோதனை செய்ய வேண்டும் என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

MK Stalin Vs Vijay | திமுக அடி மடியிலேயே.. சவால் விடும் விஜய்..! BEAST MODE ஆரம்பம்Rahul Gandhi | ”அய்யோ பாவம் ராகுல் இது நியாயமா பிர்லா?” சபையில் நடந்தது என்ன?Chennai's Amirtha | அடுத்த கட்ட பாய்ச்சலில் பிரபல கல்வி குழுமம்..பிராண்ட் அம்பாசிடராக ஸ்ரீலீலாJagan Mohan Reddy  vs Chandra Babu Naidu | ஜெகனுக்கு END CARD!அதிரடி காட்டும் சந்திரபாபு..

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
Mahua Moitra: பாஜக ஒன்றும் செய்ய முடியாது: நாடாளுமன்றத்தில் அனல் பறக்க உரையாற்றிய திரிணாமுல் எம்.பி
"பாஜகவினர் உண்மையான இந்துக்கள் அல்ல" பிரதமர், உள்துறை அமைச்சரை அதிரவிட்ட ராகுல் காந்தி!
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Breaking News LIVE: ஒட்டுமொத்த இந்துக்களையும் ராகுல் காந்தி அவமதித்துவிட்டார் - பிரதமர் மோடி
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167  கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Gold Smuggling: 2 மாதம், 267 கிலோ, 167 கோடி.. சென்னை ஏர்போர்ட்டில் கடை வாடகைக்கு எடுத்து தங்கம் கடத்திய யூடியூபர்!
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
Visu Birthday : குடும்ப சித்திரங்களின் ஏகலைவன் விசுவின் பிறந்தநாள் இன்று !
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள்  - முழு விவரம்
அதிரடி! மக்கள் நல்வாழ்வு, வனத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளுக்கு புதிய செயலாளர்கள் - முழு விவரம்
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
முதல்வர், துணை முதல்வர் இடையே மோதல்! நீயா, நானா போட்டியில் கர்நாடக காங்கிரஸ்!
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
செப்டம்பர் 17-ல் மதுவிலக்கு மாநாடு பெண்கள் தலைமையில் நடத்தப்படும் - விசிக தலைவர் திருமாவளவன்
Embed widget