மேலும் அறிய

crime: தஞ்சை அருகே பழவியாபாரி படுகொலை சம்பவத்தில் 4 பேர் கைது

அப்புவுக்கும், வேறு சிலருக்கும் இடையே தொழில் போட்டி இருந்தது தெரிய வந்தது. மேலும் அப்பு கடையில் வியாபாரம் பழ வியாபாரம் நன்றாக நடந்துள்ளது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லம் பைபாஸில் பழ வியாபாரி வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில் தொடர்புடைய 4 பேரை வல்லம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் சிலரை தேடி வருகின்றனர்.

பழக்கடை நடத்தி வந்த வாலிபர்

திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் அப்பு என்கிற ஹரிஹரன் (26). இவர் நீடாமங்கலத்தில் பழக்கடை நடத்தி வந்தார். கடந்த 28ம் தேதி இரவு நீடாமங்கலத்தில் இருந்து வினோத், ராஜமுருகன் ஆகியோருடன் லோடு ஆட்டோவில் பழங்கள் வாஙகுவதற்காக திருச்சிக்கு புறப்பட்டார்.

வழிமறித்து அரிவாளால் வெட்டினர்

லோடு ஆட்டோவை வினோத் ஓட்டி வந்தார். தஞ்சை-திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் வல்லம் பைபாஸ் பகுதியில் உள்ள ஒரு கார் ஷோரூம் எதிரே லோடு ஆட்டோ சென்று கொண்டிருந்தது. அப்போது இரவு 11 மணிக்கு மேல் இருக்கும் என்று கூறப்படுகிறது. அப்போது பின்னால் வேகமாக பைக்கில் வந்த அடையாளம் தெரியாத மர்மநபர்கள் 2 பேர் லோடு ஆட்டோவை மறித்து டிரைவர் வினோத் முகத்தில் மண்ணை வீசி அரிவாளால் வெட்டி உள்ளனர்.

கொலையாளிகளின் ஆவேசம்

இதனால் நிலைகுலைந்து போன வினோத் உடன் லோடு ஆட்டோவை நிறுத்தி விட்டார். தொடர்ந்து அந்த மர்மநபர்கள் அப்புவை சுற்றி நின்று அரிவாளால் தலையில் சரமாரியாக வெட்டி உள்ளனர். இதில் படுகாயமடைந்த அப்பு அலறி துடித்து ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த சம்பவத்தில் வினோத் படுகாயமடைந்தார். ராஜமுருகன் காயமின்றி தப்பினார். இதற்கிடையில் ராஜமுருகன் உதவி கேட்டு கத்தி உள்ளார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் சத்தம் கேட்ட வர தொடங்கி உள்ளனர். இதனால் அப்புவை வெட்டிய மர்மநபர்கள் தாங்கள் வந்த பைக்கை அங்கேயே போட்டுவிட்டு தப்பியோடிவிட்டனர்.

பின்னர் இந்த சம்பவம் குறித்து வல்லம் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. உடன் வல்லம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து காயமடைந்த வினோத்தை சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் அப்பு உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லுரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் விசாரணையில் அதிர்ச்சி தகவல்

பின்னர் வல்லம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில் முதல் கட்ட விசாரணையில் கொலை செய்யப்பட்ட அப்புவுக்கும், வேறு சிலருக்கும் இடையே தொழில் போட்டி இருந்தது தெரிய வந்தது. மேலும் அப்பு கடையில் வியாபாரம் பழ வியாபாரம் நன்றாக நடந்துள்ளது. ஆனால் அவரது போட்டியாளர்கள் கடையில் வியாபாரம் சரிவர நடக்கவில்லையாம். இந்த தொழில் போட்டிதான் இந்த கொலைக்கு காரணம் என்று போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. 

இதையடுத்து கூலிப்படையை ஏவி அப்புவை தீர்த்து கட்டி உள்ளனர். இந்த விபரங்களை சேகரித்த போலீசார் கொலையில் தொடர்புடைய நீடாமங்கலத்தை சேர்ந்த முருகன் என்பவரின் மகன் சேர்ந்த ஸ்ரீராம் (21), வலங்கைமான் நார்த்தாங்குடி ராஜேந்திரன் என்பவரின் மகன் அரவிந்த் (27)  மணிகண்டன் மற்!றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த கொலை வழக்கில் தொடர்புடைய மேலும் சிலரை போலீசார் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Embed widget