மேலும் அறிய

தஞ்சை மாவட்டத்தில் போலி டாக்டர்கள் கைது சம்பவங்கள்... மக்கள் அதிர்ச்சி

ஒரத்தநாட்டில் நேற்று முன்தினம் ஆங்கில வைத்தியம் பார்த்த, ஹோமியோபதி டாக்டர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர்: தஞ்சை அருகே வல்லத்தில் 2 போலி டாக்டர்களை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மாவட்டம் முழுவதும் அரசு உத்தரவின் பேரில் போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

தஞ்சை அருகே வல்லத்தில் முறையான ஆங்கில மருத்துவம் படிக்காமல் ஆங்கில மருத்துவ முறையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக புகார்கள் வந்தது. இதையடுத்து தஞ்சை மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குநர் டாக்டர் திலகம் உத்தரவின் பேரில் வல்லம் வட்டார சுகாதார அலுவலர் டாக்டர் அகிலன்,  டாக்டர் மோகன்ராஜ், வல்லம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் சுகாதார அலுவலர்கள், அதிகாரிகள் அடங்கிய குழுவினர் வல்லம் கொட்டாரம் தெரு பகுதியில் நேற்று திடீர் சோதனை மேற் கொண்டனர் .

அப்போது அப்பகுதியில் ஆர்ஐஎம்பி மருத்துவம் மட்டுமே படித்துவிட்டு கிளினிக் வைத்து நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வந்த இரண்டு  போலி டாக்டர்களை கண்டுபிடித்தனர். முறையே அவர்கள் வல்லம் மின்நகரை சேர்ந்த ராமானுஜம் (70) மற்றும் கொட்டாரத் தெருவை சேர்ந்த ஜெயக்குமார் (53) என தெரிய வந்தது.

இதுகுறித்து வல்லம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து ராமானுஜம், ஜெயக்குமார் இருவரையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இதேபோல் ஒரத்தநாட்டில் நேற்று முன்தினம் ஆங்கில வைத்தியம் பார்த்த, ஹோமியோபதி டாக்டர்கள் இருவர் நேற்று கைது செய்யப்பட்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு அருகே புதுார் பகுதியை சேர்ந்த ரெங்கசாமி மகன் செல்வராஜ் (64). இவர் ஒரத்தநாட்டில் கார்த்திகா மெடிக்கல் வைத்துள்ளார். இதே போல், பனையக்கோட்டை பகுதியை சேர்ந்த வேலாயுதம் மகன் முகுந்தன் (61)  வேலாயுதம் என்ற பெயரில் கிளினிக் நடத்தி வந்துள்ளார். இருவரும் ஹோமியோபதி படித்துள்ள நிலையில், பொதுமக்களுக்கு ஆங்கில வைத்தியம் பார்த்துள்ளனர்.

இது குறித்து சுகாதாரத்துறை இணை இயக்குநர் திலகவதிக்கு புகார் சென்றது. அவர் உத்தரவின் பேரில், ஒரத்தநாடு அரசு மருத்துவமனை தலைமை மருத்துவர் வெற்றிவேந்தன், ஒரத்தநாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பழகன் உள்ளிட்டோர் செல்வராஜ், முகுந்தன் இருவரின் சான்றிதழை ஆய்வு செய்தனர்.

ஆய்வில் இருவரும் ஹோமியோபதி மட்டுமே படித்து விட்டு ஆங்கில வைத்தியம் பார்த்தாக, செல்வராஜ், முகுந்தன் இருவரையும் போலீசார் கைது செய்தனர். தஞ்சை மாவட்டம் முழுவதும் போலி டாக்டர்கள் கைது செய்யப்பட்டு வருவது மக்கள் மத்தியில் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

இதுகுறித்து பொதுமக்கள் தரப்பில் கூறுகையில், உடல் பாதிப்புக்காக டாக்டர்களை தேடி செல்லும் மக்கள் அவர் எம்.பி.பி.எஸ்., படித்துள்ளாரா அல்லது படிக்கவில்லையா என்பது எப்படி தெரியும். நம்பிக்கையின் பெயரில் தான் மக்கள் மருத்துவம் பார்த்துக் கொள்கின்றனர். அதிலும் இவ்வாறு போலிடாக்டர்கள் கைது செய்யப்படுவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இந்த நடவடிக்கையை அரசு இன்னும் இறுக்கி பிடிக்க வேண்டும் என்று தெரிவித்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget