மேலும் அறிய

தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

’’பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க கோரிக்கை’’

வட கிழக்கு பருவ மழையை தொடங்கியதையடுத்த, தஞ்சாவூர் மாவட்டத்தில்  கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தது. பின்னர் இரண்டு நாட்களுக்கு பிறகு திங்கட்கிழமை முதல் மீண்டும் பெய்த தொடர் மழை பெய்ததால், அம்பது மேல்நகர கிராமத்திலுள்ள கோணக்கடுங்கலாறு கரை உடைந்து சுமார் 1,500 ஏக்கரில் நெற் பயிர்கள் நீரில் மூழ்கின.

தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த வாரம் பெய்த தொடர் மழையால் 17,500 ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கின. மழை குறைந்ததை தொடர்ந்து, வயலில் தேங்கிய தண்ணீர் வடிந்தது. வடிகால்  வாய்க்கால் தண்ணீர் வடியாத பிரச்னையாலும், அவ்வப்போது மழை பெய்வதாலும் 9,245 ஏக்கரில் தேங்கிய தண்ணீர் வடிவதில் தாமதமாகிறது. தற்போது இப்பயிர்கள் அழுகி வருகிறது. இந்நிலையில், தஞ்சாவூர் மாவட்டத்தில் திங்கள்கிழமை மாலை மீண்டும் பரவலாக மழை பெய்தது. சில இடங்களிலும் பலத்த மழை பெய்ததால், அண்மையில் நடவு செய்யப்பட்ட சம்பா பருவ இளம் பயிர்கள் நீரில் மூழ்கின. இதேபோல, திருவையாறு வட்டம் உள்ளிட்ட பகுதிகளில் பெய்த தொடர் மழை காரணமாக நீர் வரத்து அதிகரித்ததால் தஞ்சாவூர் அருகே வரகூர் அம்பதுமேல் நகரம் இடையே கோணக்கடுங்கலாறில் தென் கரையில் சுமார் 20 அடி நீளத்துக்கு உடைப்பு ஏற்பட்டது. இதனால், ஐம்பதுமேல் நகரம், கடம்பங்குடி, வரகூர், நடுக்காவேரி, அந்தலி, குழிமாத்தூர் ஆகிய 10 க்கும் மேற்பட்ட கிராமங்களில் சுமார் 1500 ஏக்கரில் பயிரிடப்பட்டிருந்த சம்பா பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கின. இதில், சில நாட்களுக்கு முன்பு நடவு செய்யப்பட்ட இளம் நாற்றுக்கள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன.


தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

அகரப்பேட்டையில் கிராமத்திலுள்ள வெண்ணாற்றிலிருந்து,  பிரியும் கோணக்கடுங்கலாறு நாகத்தி கிராமத்தில் வெட்டாற்றில் கலக்கிறது. இதன் மூலம் ஏறக்குறைய 3,000 ஏக்கர் பாசன நிலங்கள் பயன் பெறுகின்றன. ஆனால், அம்பதுமேல் நகரம்- அந்தலி கிராமங்களை இணைக்கும் தரைப்பாலத்தில் ஆகாயத்தாமரை உள்ளிட்ட செடி, கொடிகள் அடர்ந்து வளர்ந்துள்ளன. இதன் காரணமாக, தண்ணீர் செல்ல முடியாமல்,  தரைப்பாலம் மூடப்பட்டுள்ளதால் நீரோட்டம் தடைப்பட்டு வரகூர்- ஐம்பது மேல் நகரம் இடையே உடைப்பு ஏற்பட்டு, சம்பா பருவ நெற் பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் அப்பகுதி முழுவதும் வெள்ளக்காடாகி கடல் காட்சியளித்தது.


தஞ்சாவூர்: கோணக்கடுங்கலாறு உடைப்பால் 1500 ஏக்கரில் நெற் பயிர்கள் மூழ்கி சேதம்

இது குறித்து தகவலறிந்த திருவையாறு வட்டாட்சியர் நெடுஞ்செழியன், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ் முன்னிலையில் சுமார் 50 விவசாயிகள் தரைப்பாலத்தில் அடைப்பு ஏற்பட்டுள்ள செடி, கொடிகளை அகற்றி வருகின்றனர். இது குறித்து பாதிக்கப்பட்ட விவசாயிகள் கூறுகையில், சம்பா பருவ நெற் பயிர்கள் நீரில் மூழ்கியதாலும், தண்ணீரில் அடித்து செல்லப்பட்டதாலும் பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளன. பயிர் காப்பீடு பாதி பேர் செய்துள்ளனர். எனவே, பாதிக்கப்பட்ட பயிர்களை அரசு உரிய முறையில் கணக்கெடுப்பு செய்து நிவாரணம் வழங்க வேண்டும். ஒவ்வொரு முறையும் தரை பாலத்தில் ஏற்படும் அடைப்பால் பயிர்கள் பாதிக்கப்படுகின்றன. எனவே, இத் தரைப்பாலத்தை உயர்த்தி கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் இழப்பீடும் வழங்க என்றனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

TVK Vijay:”திமுக வாக்குறுதி என்னாச்சு?”  தூய்மைப் பணியாளர் போராட்டம்!  விஜய் ஆதரவு!
TVK Vijay:”திமுக வாக்குறுதி என்னாச்சு?” தூய்மைப் பணியாளர் போராட்டம்! விஜய் ஆதரவு!
TVK Conference: அப்புறமென்ன.. பலத்த காட்டிட வேண்டியதுதான்; தவெக மதுரை மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
அப்புறமென்ன.. பலத்த காட்டிட வேண்டியதுதான்; தவெக மதுரை மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
Special Buses: விழாக்கால தொடர் விடுமுறை; கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்
விழாக்கால தொடர் விடுமுறை; கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்
Modi Zelensky: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - என்ன சொன்னார் தெரியுமா.?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - என்ன சொன்னார் தெரியுமா.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Poompuhar Vanniyar Womens Conference | ராமதாஸ் பின்னணியில் திமுக? பூம்புகாரில் பலப்பரீட்சை
Cuddalore DMK MLA | “ஏய் நிறுத்துடா...” பத்திரிகையாளரை ஒருமையில் பேசிய திமுக MLA!
ADMK Banner Accident  | ”அதிமுக பேனர் விழுந்து  தந்தை மகன் படுகாயம்” வெளியான பகீர் CCTV காட்சி!
VCK Councillor | ”அடிச்சு மூஞ்ச ஒடச்சுடுவேன்டா”ஆபீஸுக்குள் நுழைந்து தாக்குதல் விசிக கவுன்சிலர் அராஜகம்
Water Tank Poisoned | தண்ணீர் தொட்டியில் விஷம் பள்ளியில் நடந்த கொடூரம் சிக்கிய  ஸ்ரீராம் சேனா தலைவர்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TVK Vijay:”திமுக வாக்குறுதி என்னாச்சு?”  தூய்மைப் பணியாளர் போராட்டம்!  விஜய் ஆதரவு!
TVK Vijay:”திமுக வாக்குறுதி என்னாச்சு?” தூய்மைப் பணியாளர் போராட்டம்! விஜய் ஆதரவு!
TVK Conference: அப்புறமென்ன.. பலத்த காட்டிட வேண்டியதுதான்; தவெக மதுரை மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
அப்புறமென்ன.. பலத்த காட்டிட வேண்டியதுதான்; தவெக மதுரை மாநாட்டிற்கு காவல்துறை அனுமதி
Special Buses: விழாக்கால தொடர் விடுமுறை; கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்
விழாக்கால தொடர் விடுமுறை; கிளாம்பாக்கத்திலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கம் - முழு விவரம்
Modi Zelensky: உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - என்ன சொன்னார் தெரியுமா.?
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கியுடன் பேசிய பிரதமர் மோடி - என்ன சொன்னார் தெரியுமா.?
TN TET 2025: ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதலே விண்ணப்பம் - தேர்வு வாரிய அறிவிப்பு என்ன.?
ஆசிரியர் தகுதித் தேர்வு தேதி அறிவிப்பு - இன்று முதலே விண்ணப்பம் - தேர்வு வாரிய அறிவிப்பு என்ன.?
TVK Vijay: “ராகுல் உள்ளிட்டோர் கைது கடும் கண்டனத்திற்குரியது“ - தவெக தலைவர் விஜய்யின் பதிவு என்ன.?
“ராகுல் உள்ளிட்டோர் கைது கடும் கண்டனத்திற்குரியது“ - தவெக தலைவர் விஜய்யின் பதிவு என்ன.?
Agal Vilakku Scheme: மாணவிகளின் பாதுகாப்புக்கு வந்தாச்சு புது திட்டம்: அதென்ன அகல் விளக்கு?
Agal Vilakku Scheme: மாணவிகளின் பாதுகாப்புக்கு வந்தாச்சு புது திட்டம்: அதென்ன அகல் விளக்கு?
SC Stray Dogs: நாய் பிரியர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்.. ”எதிர்ப்பு சொல்லி யாரும் வந்துடாதிங்க”
SC Stray Dogs: நாய் பிரியர்களை லெஃப்ட் ரைட் வாங்கிய உச்சநீதிமன்றம்.. ”எதிர்ப்பு சொல்லி யாரும் வந்துடாதிங்க”
Embed widget