மேலும் அறிய

தஞ்சை: ஒற்றை காலில் நின்று விவசாயிகள் போராட்டம்-கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

குறுவை அறுவடை அதிகமாக அளவில் அறுவடை செய்து வருவதால் கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து தினமும் 1200 மூட்டைகளை கொள்முதல் செய்ய கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன் விவசாய சங்க கூட்டியியக்க மாநில துணை தலைவர் கக்கரை சுகுமார் தலைமையில் விவசாயிகள், ஒற்றை காலில் நின்றும், அலுவலக வாயில் முன்பு தரையில் படுத்து உருண்டும் நுாதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் அந்தந்த ஊர் சிட்டா, அடங்கல் வாங்கும் விவசாயிகள் அந்தந்த ஊரிலேயே நெல் விற்பனை செய்ய வேண்டும். வெளி மாவட்ட சிட்டா, அடங்கல் வாங்கி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகளை விற்பனை செய்யக்கூடாது. நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில்  திறக்கட்டும் என்று வியாபாரிகள் கத்துக்கொண்டிருக்கின்றார்கள். நெல் விற்பனை செய்வதை தடுக்க அந்தந்த ஊரிலேயே சிட்டா, அடங்கல் வாங்கி அந்தந்த ஊரிலேயே விற்பனை செய்ய வேண்டும். இதனால் தஞ்சாவூர் மாவட்ட நெல்மூட்டைகளை விரைவில் கொள் முதல் செய்ய முடியும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து விவசாயிகள் முழக்கங்களை எழுப்பினர்


தஞ்சை: ஒற்றை காலில் நின்று விவசாயிகள் போராட்டம்-கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

அது மட்டும் இல்லாமல், தஞ்சாவூர் மாவட்டதில் குறுவை அறுவடை அதிகமாக அளவில் அறுவடை செய்து வருவதால், நேரடி நெல்கொள் முதல் நிலையங்களை அதிக அளவில் திறந்து, ஒரு நாளொன்றிற்கு 1200 மூட்டைகளை கொள்முதல்செய்ய வேண்டும். 2020-2021 ஆம் ஆண்டிற்கான பயிர் காப்பீடு தொகையை மத்திய மாநில அரசுகள் உடனே வழங்க வேண்டும். மேலும், தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழையினால், அறுவடைக்கு தயாரான நெல் கதீர்கள், வயலிலேயே சாய்ந்து விட்டது. இனி வரும் நாட்களில், தொடர்ந்து மழை பெய்தால், நெல் கதீர்களில் உள்ள நெல் மணிகள் பதறாகும், முளைக்கும் நிலை ஏற்படும் என போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கூறினர். விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை, 17 சதவீதத்திலிருந்து 20 சதவீதமாக உயர்த்தி நெல் மூட்டைகளை கொள் முதல் செய்ய வேண்டும். விவசாயிகளுக்கு ஏற்பட்டுள்ள குறுவை சாகுபடிக்கு, அதிகாரிகள், நேரில் சென்று பார்வையிட்டு, உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.  நேரடி நெல்கொள் முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்மூட்டைகளை உடனடியாக கொள்முதல் செய்ய வேண்டும், கொள்முதல் நிலையத்திற்கு தேவையான சாக்கு, இயந்திரங்கள், சணல்களை வழங்கியும், போதுமான பணியாளர்களை நியமித்து, தேங்கியுள்ள நெல் மூட்டை போர்கால அடிப்படையில் கொள்முதல் செய்ய வேண்டும்.


தஞ்சை: ஒற்றை காலில் நின்று விவசாயிகள் போராட்டம்-கூடுதல் கொள்முதல் நிலையங்களை திறக்க கோரிக்கை

தற்போது கொள்முதல் நிலையத்தில் தேங்கியுள்ள நெல்மணிகளில் நாற்றுக்கள் முளைத்திருப்பதால், பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு சிறப்பு சலுகையின் பேரில், அவர்களது நெல் மூட்டைகளை, ஈரப்பதம் அதிகமாகி வழங்கி நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும் என உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை போராட்டத்தின் போது தமிழக அரசுக்கு கோரிக்கையாக வைத்துள்ளனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
ABP Premium

வீடியோ

”மானத்த பத்தி நீங்க பேசலாமா?” அடக்குமுறைகளை எதிர்க்கும் இஸ்லாமிய தமிழச்சி! | Wahitha Begum
அயோத்தி செல்லும் ராகுல்! காங்கிரஸ் பக்கா ப்ளான் கொந்தளிக்கும் பாஜகவினர் | Rahul Gandhi Visit Ayodhya
’’ரவுடிகள்..கோமாளிகள்’’விஜய் ரசிகர்களை திட்டிய சுதா கொங்கரா

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
விவசாயிகளுக்கு ரூ. 111 கோடி.! வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட்- பொங்கல் பண்டிகையில் ஸ்டாலின் அதிரடி அறிவிப்பு
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
Pongal 2026: ”பொங்கலோ பொங்கல்” - தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை உற்சாக கொண்டாட்டம்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
TVK Vijay: தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டா? - பொங்கல் வாழ்த்து சொல்லி வாங்கி கட்டிய விஜய்!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Pongal 2026 Nalla Neram: மக்களே... பொங்கல் எந்த நேரத்தில் வைக்க வேண்டும்? இதுதான் டைம் பாருங்க!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Happy Pongal 2026 Wishes: தைத்திருநாளில் நட்புக்கும் உறவுக்கும் அனுப்ப 10 புதுமையான வாழ்த்துகள் இதோ!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
Avaniyapuram Jallikattu: வாடிவாசலில் துள்ளிக்குதிக்கும் காளைகள்.. தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு!
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
ரூ. 3.50 லட்சம் மானியம்.. 6 % வட்டி மானியம்.! அள்ளிக்கொடுக்கும் அரசு- யாருக்கெல்லாம்.? விண்ணப்பிப்பது எப்படி.?
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
DMK Congress: கூட்டாட்சி கிடையாது.. தவெக-வுடன் காங்கிரஸ் இணைந்தால் திமுக பலம் குறையாது - ஆ.ராசா காட்டம்
Embed widget