மேலும் அறிய

பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் காதுகேட்கும் கருவியை சரிசெய்ய வேண்டும் - ஆட்சியரிடம் மனு அளித்த மாணவி

’’5 ஆண்டுகளாக பல அதிகாரிகளிடம் காது கேட்கும் கருவி குறித்து கேட்டு யாரும் உரிய பதில் கூறாமல் உள்ளனர். விவசாயியான நாங்கள் புதிய காது கேட்கும் கருவியை 6 லட்சத்திற்க வாங்க முடியாது’’

தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்  தலைமை வகித்தார். இதில்  அனைத்து துறை அதிகார்கள், அலுவலர்கள் கலந்து கொண்டனர். தஞ்சாவூர் மாவட்டத்திலிருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பொது மக்கள் தங்களது குறைகளை கூறுவதற்காக மனுக்களாக எழுதி வந்திருந்தனர். கூட்டத்தில், பூதலுார் தாலுக்கா சித்திரக்குடி, புதுக்கல்விராயன் பேட்டையை சேர்ந்த தெட்சிணாமூர்த்தி மகள் பவித்ரா (13). காதுகேளாத இவர், பூதலூார் அரசுபள்ளியில் 7 ஆம் வகுப்பு படித்து வருகின்றார். கடந்த ஐந்து ஆண்டிற்கு முன்பு, தமிழக அரசு சார்பில் நடைபெற்ற மருத்துவ முகாமில், பவித்ராவை ஆய்வு செய்த மருத்துவர்கள், காது கேட்காமல் இருப்பதை உறுதி செய்தனர். அதனை தொடர்ந்து பவித்ராவிற்கு நவீன காது கேட்கும் கருவியை இலவசமாக வழங்கினார். அதன் பின்னர், மாணவி பவித்ரா, பள்ளிக்கு சென்று வந்தார். சில நாட்களுக்கு பிறகு, பவித்ரா, பயன்படுத்தி வந்த காது கேட்கும் கருவி பழுதானது. அதனை தொடர்ந்து, பள்ளி மற்றும் நண்பர்களுடன் காது கேட்காமலேயே சென்று கொண்டும், பழகி வந்தார்.


பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் காதுகேட்கும் கருவியை சரிசெய்ய வேண்டும் - ஆட்சியரிடம் மனு அளித்த மாணவி

இந்நிலையில், வரும் நவம்பர் மாதம் 1 ந்தேதி பள்ளிகள் அனைத்து திறக்கப்பட உள்ள நிலையில், பவித்ரா காது கேட்கும் கருவியை சீர் செய்ய வேண்டும், அந்த நிறுவனத்திடம் கேட்கும் போது, 6 லட்சம் செலவாகும் என கூறியுள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த பவித்ரா, மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ள மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறையினரிடம் பல முறை, புதிய காது கேட்கும் கருவியை வழங்க வேண்டும் அல்லது பழைய காது கேட்கும் கருவியை பழுது பார்த்த தர வேண்டும் என மனு அளித்தார். ஆனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்ககாததால், மக்கள் குறை தீர்க்கும் நாளை முன்னிட்டு பவித்ரா தனது தெட்சிணாமூர்த்தியிடன், மனு அளித்தார். அப்போது பவித்ராவும் அவரது தந்தையும், கடந்த 5 ஆண்டுகளாக பல அதிகாரிகளிடம் காது கேட்கும் கருவி குறித்து கேட்டு யாரும் உரிய பதில் கூறாமல் உள்ளனர். விவசாயியான நாங்கள் புதிய காது கேட்கும் கருவியை 6 லட்சத்திற்க வாங்க முடியாது. பள்ளிகூடம் திறக்க உள்ள நிலையில், அனைத்து மாணவர்கள் மத்தியில் இருக்கும் போது,  காது கேட்காததால், மிகுந்த மன உளைச்சல் ஏற்படும். அதனால் எனது கல்வி பாதிக்கும்.எனவே, காதுகேட்கும் கருவி கிடைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் மிகவும் கெஞ்சியபடி வேண்டுகோள் விடுத்தார்.


பள்ளிகள் திறக்கப்பட உள்ளதால் காதுகேட்கும் கருவியை சரிசெய்ய வேண்டும் - ஆட்சியரிடம் மனு அளித்த மாணவி

இத குறித்து பவித்ரா, மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்துள்ள மனுவில்,

எனக்கு காது கேட்காது, விவசாய கூலியான எனது தந்தை தெட்சிணாமூர்த்திக்கு கால்கள் பாதிக்கப்பட்ட நிலையில் மாற்றுத்திறனாளிகளாக உள்ளார். இது போன்ற நிலையில் அன்றாடம் கூலி வேலை பார்த்து, எங்களது குடும்பத்தையும், எனது மருத்துவச்செலவையும் கவனித்து வருகின்றார். தற்போது புதிய காது கேட்கும் கருவி  5,58,600 விலையாகின்றது. இவ்வளவு தொகை கொடுத்து எனது தந்தையால் கருவியை வாங்க முடியாது. மிகவும் ஏழ்மையிலுள்ள எனக்கு காது கேட்கும் கருவி மற்றும் மருத்தவ சிகிச்சையை, தமிழக அரசின் காப்பீட்டுத்திட்டத்தின் மூலம் இலவசமாக வழங்கி, எனது கல்வி பாதிக்காத வகையில் வழங்கிடவேண்டும் மிகவும் பணிவன்புடன் கேட்டுக்கொள்கிறேன் என்று மனுவில் தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் -  வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
Trump Netflix: நெட்ஃப்ளிக்ஸை முடிக்க திட்டம்? கட்டப்பஞ்சாயத்தில் குதித்த ட்ரம்ப் - வார்னர் ப்ரோஸ் நிலை என்ன?
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.!  தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு கண்டிப்பாக அனுமதி இல்லை.! தவெகவினருக்கு 10 கட்டளையிட்ட விஜய்
Minister KN Nehru: விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
விடாமல் துரத்தும் ED..! கே.என்.நேரு மீது FIR.? டிஜிபிக்கு மீண்டும் பறந்த கடிதம்- என்ன சொல்லியிருக்கு தெரியுமா.?
Embed widget