மேலும் அறிய

பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் - மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை

’’பேரிடர் மேலாண்மை திட்டம் மூலம் நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 10,000 இடுபொருள் இழப்பீடாக வழங்கிட வேண்டும் என கோரிக்கை’’

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்தது.  இந்த தொடர் மழையால் நாகை மாவட்டத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கரில் சம்பா, தாளடி நெற்பயிர்கள் நீரில் மூழ்கின. இதனால் விவசாயிகள் கவலை அடைந்து வந்தனர். இதையடுத்து சேதமடைந்த பயிர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் பார்வையிட்டு, விவசாயிகளின் கோரிக்கைகளை கேட்டறிந்தனர். இந்த நிலையில், மழை பாதிப்பு சேதங்களை பார்வையிட மத்திய என்று ஆய்வு செய்தனர்.
 

பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் - மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை
 
மத்திய உள்துறை இணை செயலர் ராஜிவ் சர்மா தலைமையில், விஜய் ராஜ் மோகன், ரனன்ஜெய் சிங், வரப்பிரசாத் ஆகிய 4 பேர் கொண்ட மத்திய குழுவினர் கடலூர், மயிலாடுதுறை மாவட்டங்களில் பயிர் பாதிப்புகளை பார்வையிட்ட குழுவினர் நாகை அருகே பாப்பாகோவில் ஊராட்சி, வடவூர் செல்லும் சாலை ஓரத்தில் உள்ள மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களை பார்வையிட்டனர். தொடர்ந்து அங்குள்ள விவசாயிகளிடம் பாதிப்பு குறித்த கேட்டறிந்தனர். இதையடுத்து மாவட்ட நிர்வாகம் சார்பில் அங்கு மாவட்டத்தில் மழையால்  பாதிக்கப்பட்ட இடங்கள் குறித்த புகைப்படக் கண்காட்சியை பார்வையிட்டனர். நாகை மாவட்டத்தில் உள்ள விவசாயிகள் பாதிப்புக்கள் குறித்த கோரிக்கைகள் அடங்கிய மனுவை மத்தியக் குழுவினரிடம் கொடுத்தனர்.
 

பேரிடர் பாதித்த மாநிலமாக தமிழகத்தை அறிவிக்க வேண்டும் - மத்திய குழுவிடம் விவசாயிகள் கோரிக்கை
 
அதில் தமிழகம் தொடர்ந்து இரு பருவ மழை மற்றும் புயல் பாதிப்பினால் ஆண்டுதோறும் பேரிடர் பாதிப்பு ஏற்பட்டு வருகிறது இதனை கருத்தில் கொண்டு தமிழகத்தை பேரிடர் பாதிக்கும் மாநிலமாக அறிவித்திட வேண்டும், பேரிடர் மேலாண்மை திட்டம் மூலம் நெற்பயிருக்கு ஏக்கர் ஒன்றுக்கு 10,000 இடுபொருள் இழப்பீடாக வழங்கிட வேண்டும், பயிர் காப்பீடு திட்டத்தில் பாதிப்புக்கு ஏற்ப இழப்பீடு பெறுவதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கும் அதிகாரத்தை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும், வடகிழக்கு பருவமழை அக்டோபர் மாதம் துவங்கி நவம்பர் மாதம் இறுதிவரை தொடர்வதால் ஆண்டுதோறும் காப்பீடு செய்வதற்கான காலக்கெடுவை முன்னர் இருந்தது போல் டிசம்பர் மாதம் இறுதி வரை செலுத்த அவகாசம் வழங்கிட வேண்டும், காப்பீடு நிறுவனங்களை கண்காணிக்கும் சட்டப்பூர்வ அதிகாரங்களை மாநில அரசுகளுக்கு வழங்கிட வேண்டும்.
 
தொடர்ந்து மகசூல் இழப்பு ஏற்படும் கிராமங்களுக்கு ஏழு ஆண்டுகள் கணக்கிட்டு மகசூல் இழப்பு தொடர்ந்து ஏற்பட்டால் இழப்பீடு வழங்க மறுப்பதை கைவிட வேண்டும், காப்பீட்டு துறையில் தனியார் காப்பீட்டு நிறுவனங்கள் அனுமதிப்பதை கைவிட்டு தேசிய வேளாண் பயிர் காப்பீட்டு நிறுவனம் மட்டுமே காப்பீடு செய்ய அனுமதிக்க வேண்டும், காப்பீடுகளுக்கான பிரீமியத்தில் மத்திய அரசின் பங்குத் தொகையான 49 சதவீதத்தை கடந்த இரண்டு ஆண்டுகளாக 33 சதவீதமாக குறைத்துள்ளது கைவிட்டு மீண்டும் 49 சதவீதமாக உயர்த்தி வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை அடங்கிய மனுவினை மத்திய குழுவிடம் விவசாயிகள் வழங்கினார். நாகையில் ஆய்வு மேற்கொண்ட பின்னர் மத்திய குழுவினர் திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் மழை சேதத்தை பார்வையிட சென்றனர். மத்திய குழுவினர் நாகை மாவட்டத்தில் ஆய்வின் போது தமிழக மீன் வளர்ச்சிக் கழக தலைவர் கௌதமன், மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ், வேளாண்மை துறை இணை இயக்குனர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Hathras satsang : ஆன்மிக நிகழ்வில் சோகம்! அதிகரிக்கும் உயிரிழப்புகள்! நடந்தது என்ன?Anurag Thakur INDIA Alliance : Constitution-ல எத்தனை பக்கம் இருக்கு தெரியுமா? திகைத்து போன I.N.D.I.AVillupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Hathras Stampede: உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. முழு விவரம்!
உ.பி. கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு அறிவிப்பு.. இறந்தவர்களுக்கு தலா 2 லட்சம் ரூபாய்!
Hathras Stampede: கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 90 பேர் உயிரிழப்பு: உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Breaking News LIVE: வெளியானது குரூப் 1 முதல்நிலை தேர்வுக்கான ஹால் டிக்கெட்! லிங்க் இதோ!
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Kubera: தனுஷ் , நாகர்ஜுனாவைத் தொடர்ந்து ராஷ்மிகா மந்தனா... வெளியாகும் குபேரா அப்டேட்
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!!  சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
Sukran Peyarchi 2024: சுக்கிர பெயர்ச்சி!!! கடகத்தில் பெயர்ச்சியாகும் சுக்கிரன் !!! சந்தோஷத்தில் திளைக்கும் ராசிகள் எவை?
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
PM Modi on Rahul: குழந்தைப் பேச்சு; சிறுபிள்ளைத்தனமான சேட்டை! ராகுல் பெயரை சொல்லாமல் கிண்டலடித்த மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Annamalai: விடுமுறை கேட்டு விண்ணப்பித்துள்ள அண்ணாமலை தலைவர் பதவியிலிருந்து மாற்றப்படுகிறாரா?
Embed widget