மேலும் அறிய

திருக்குவளையில் இருந்து நாகைக்கு படியில் தொங்கிய படி ஆபத்தான பயணம் - கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை

’’அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூடுதல் பேருந்தை இயக்குவதோடு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்’’

நாகை மாவட்டம் திருக்குவளை கிராமத்தில் இருந்து மேலப்பிடாகை,பாப்பாகோவில் வழியாக நாகப்பட்டினத்திற்கு செல்லும் இந்த வழி தடத்தில் 10 நம்பர் டவுன் பேருந்து இயங்கி வருகிறது. தினந்தோரும் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகள் கல்லூரி மாணவ மாணவிகள் விவசாயிகள் பணிக்கு செல்வோர் அரசு ஊழியர்கள் என நூற்றுக்கணக்கானவர்கள் தினந்தோறும் நாகப்பட்டினத்திற்கு வந்து செல்கின்றனர்.
 

திருக்குவளையில் இருந்து நாகைக்கு படியில் தொங்கிய படி ஆபத்தான பயணம் - கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை
 
இந்த சூழ்நிலையில் இதில் காலை மற்றும் மாலை நேரங்களில் பள்ளி கல்லூரி முடிந்து வேலை முடிந்ததும் வீட்டுக்கு செல்வோர் இந்த பேருந்திலேயே செல்வதால் பள்ளி கல்லூரி மாணவர்கள் படிக்கட்டில் தொங்கியவாறு அபாயகரமான ஆபத்தான பயணத்தை மேற்கொண்டு வருகின்றனர் எனவே அசம்பாவிதங்கள் நடப்பதற்கு முன்பாக மாவட்ட நிர்வாகம் உடனடியாக கூடுதல் பேருந்தை இயக்குவதோடு மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
 
 

கள்ளச்சாராய புழக்கத்தை ஒழிக்க நாகையில் பள்ளி மாணவர்கள் 6 கிலோ மீட்டர் தூரம் சைக்கிள் விழிப்புணர்வு பேரணி 
 
நாகை அடுத்த புத்தூரில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்  சார்பில் கள்ளச்சாராயம் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி நடைபெற்றது. நாகை மாவட்ட ஆட்சியர் அருண் தம்புராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்த  சைக்கிள் பேரணியில் கள்ளச்சாராயம் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தி,மாணவ, மாணவிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் விழிப்புணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டனர். கோட்டை வாசல் படி, புதிய பேருந்து நிலையம், பப்ளிக் ஆபிஸ் சாலை, பால்பண்ணைச்சேரி  வழியாக 6 கிலோ மீட்டர் தூரம் வரை நடைபெற்ற பேரணி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நிறைவு பெற்றது.
 

திருக்குவளையில் இருந்து நாகைக்கு படியில் தொங்கிய படி ஆபத்தான பயணம் - கூடுதல் பேருந்துகளை இயக்க மாணவர்கள் கோரிக்கை
 
இறுதியாக சைக்கிள் பேரணியில் பங்கேற்ற பள்ளி மாணவ மாணவிகளுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. இப் பேரணியின் போது நாகை திருவாரூர் சாலையில் போக்குவரத்து வாகனங்களை முறைப்படுத்துதல் கனரக வாகனங்கள் மற்றும் பேருந்துகள் இடையே ஆபத்தான முறையில் மாணவர்கள் பேரணியில் சென்றது பெற்றோர்கள் மற்றும் சமூக ஆர்வலர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது வரும் காலங்களில் மாணவர்களின் பாதுகாப்பு கருதி போக்குவரத்தை முறைப்படுத்திய பிறகு விழிப்புணர்வு பேரணியை நடத்த வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Dhoni wish to indian Team | தட்டி தூக்கிய இந்தியா தோனி கொடுத்த SURPRISE Virat & Rohit Retirement |இடியை இறக்கிய KING - HITMAN.. உச்சக்கட்ட சோகத்தில் ரசிகர்கள்Hardik Pandya | ZERO TO HERO அவசரப்பட்டு திட்டிட்டோம் கொண்டாடிய ஹர்திக் FANSDog Attack Boy | மகனை சுத்துப்போட்ட நாய்கள் நொடியில் காப்பாற்றிய  தந்தை பதற வைக்கும் வீடியோ

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
இந்திய கிரிக்கெட் அணிக்கு ரூ. 125 கோடி பரிசு: பிசிசிஐ அதிரடி அறிவிப்பு
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
பெண்ணை இரக்கமின்றி தாக்கிய நபர்.. நடுரோட்டில் முடியை பிடித்து அட்டூழியம் - பரபரப்பு வீடியோ!
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
ராகுல் காந்தி பேசும்போது OFF ஆன மைக்: மைக் SWITCH -ன் அதிகாரம் யாரிடம்?
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
முதலமைச்சரின் வெளிநாட்டு பயணங்களால் கிடைத்த லாபம் ஜீரோ தான் - அண்ணாமலை குற்றச்சாட்டு
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Sundar Pichai: உலகக்கோப்பை இறுதிப்போட்டி! ரசிகருக்கு நன்றி சொன்ன சுந்தர் பிச்சை - ஏன்?
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!
Embed widget