மேலும் அறிய

வணிகரை தாக்கியவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் - விக்ரமராஜா வலியுறுத்தல்

தற்போது சிகிச்சை பெற்று வரும் முருகேசனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா நேரில் சந்தித்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

தஞ்சை மாவட்டம் திரும்புறம்பியத்தில் கடன் கொடுக்க மறுத்த மளிகைக்கடைக்காரரை தாக்கியவர்கள் மீது 307 பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ய கோரி காவல் கண்காணிப்பாளரை வலியுறுத்த உள்ளோம் என்று தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா தெரிவித்தார்.

தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வணிகர் சங்க உறுப்பினர் முருகேசனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா நேரில் சந்தித்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் தாலுக்கா திருப்புறம்பியம் பகுதியை சேர்ந்தவர் முருகேசன் (53). இவர் கடந்த 30 ஆண்டுகளாக அதே பகுதியில் மளிகை கடை வைத்து நடத்தி வருகிறார். கடந்த 15ம் அதே பகுதியை சேர்ந்த தீபன் ராமர், தமிழ்வாணன் ஆகியோர் முருகேசன் கடைக்குச் சென்று கடனாக பொருள்கள் கேட்டு உள்ளனர். ஆனால் முருகேசன் கனட் தர மறுத்துள்ளார். தொடர்ந்து மூன்று பேரும் சேர்ந்து முருகேசன் தாக்கியதில் முகத்தில் மூன்று இடத்தில் அவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது.

மேலும் முருகேசன் 15ம் தேதி கும்பகோணம் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தற்போது மேல் சிகிச்சைக்காக கடந்த 17ம் தேதி முதல் தஞ்சை மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.  இதுகுறித்து சுவாமிமலை காவல் நிலையத்திலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதன் பேரில் மூன்று பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தனர். இதில் ஒருவர் மட்டும் முன் ஜாமின் பெற்று தற்போது வெளியே வந்துள்ளார்.

இந்நிலையில் தற்போது சிகிச்சை பெற்று வரும் முருகேசனை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு மாநில தலைவர் விக்ரமராஜா நேரில் சந்தித்து அவரது குடும்பத்திற்கு ஆறுதல் கூறினார்.

பின்பு அவர் நிருபர்களிடம் கூறியதாவது: இந்த தாக்குதலில் ஈடுபட்டவர்கள் எக்காரணத்தை கொண்டும் வெளியே வர முடியாத அளவிற்கு பல்வேறு வழக்குகளின் கீழ் வழக்கு பதிவு செய்ய மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நேரில் சந்திக்க உள்ளோம். சுவாமிமலை பகுதியில் அடிக்கடி இதே போல் சம்பவம் அரங்கேறி வருகிறது. எனவே அதை தடுக்க பல்வேறு முயற்சிகளை காவல்துறையினர் செய்து வருகின்றனர்.

இருந்தும் இதுபோன்ற சம்பவம் மீண்டும் மீண்டும் அரங்கேறி வருகிறது. எனவே குற்ற செயல்களில் ஈடுபடுபவர் மீது காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்கள் மீது 307 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்ய கோரி காவல் கண்காணிப்பாளரை வலியுறுத்த உள்ளோம். மேலும் இது போன்ற சம்பவங்களுக்கு காவல்துறையினர் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். ஒரு வாரத்திற்குள் காவல்துறையினர் சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் வரும் காலங்களில் சுவாமிமலை வணிகர் சங்கம் சார்பில் கூட்டம் நடத்தப்பட்டு அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும்.

தற்போது ஈரோட்டில் நடைபெற உள்ள மாநாட்டில் முக்கியமான தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளது. வணிகர்கள் ஜிஎஸ்டியால் அதிக அளவில் இடர்பாடுகளை சந்தித்து வருகின்றனர். எனவே இது குறித்து தீர்மானம் நிறைவேற்றப்பட உள்ளோம். தற்போது ஈரோடு கிழக்கு தொகுதியில் நடைபெற உள்ள இடைத்தேர்தலில் நாங்கள் போட்டியிடவில்லை. வருங்காலங்களில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து ஆலோசனை நடத்தி பின்னர் அறிவிக்கப்படும். ஒரு சில பகுதிகளில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் தவறான முறையில் அவர்களது பணியை செய்து வருகிறார்கள். எனவே அதனை அவர்கள் நிறுத்திக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

 
 

தலைப்பு செய்திகள்

வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
வெயிலா... மேகமா... மழையா? “குடை எடுத்துச் செல்வோமா... வேண்டாமா?” தஞ்சை மக்கள் குழம்பும் இன்றைய வானிலை
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
ரயில் வரும் போது தண்டவாளத்தில் நின்றவரை காப்பாற்றும் முயற்சி… கேட்கீப்பரும் ரயில் மோதி பலியான சோகம்
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
சுதந்திர தினத்தை வரவேற்கும் ராஜராஜ சோழனின் கம்பீர சின்னம்... கோபுரம் முன்பு செல்ஃபி எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்!
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்
ஆன்லைன் மது விற்பனைக்கு எதிர்ப்பு; பணி நிரந்தரம், காலமுறை ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Chennai Corporation: சொத்து வரி உயர்வு முடிவை கைவிட்ட சென்னை மாநகராட்சி.. பணம் கட்டியவர்கள் நிலை என்ன?
Anbumani: பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
பொய் சொல்லி ஏமாற்றி சென்ற திமுக - ரவுண்டு கட்டி அடித்த அன்புமணி - CM விஜய்க்கு கோரிக்கை
CM Vijay DVAC: லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
லஞ்ச ஒழிப்புத்துறையின் புதிய இயக்குனர்..! CM விஜய் டிக் அடித்தது யாரை தெரியுமா? காரணம் என்ன?
TN Weather News: இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
இடி, மின்னலுடன் இன்று கனமழை எச்சரிக்கை - எந்தெந்த மாவட்டங்களுக்கு தெரியுமா? வானிலை அறிக்கை
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
CM Vijay: பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் விஜய் பரபரப்பு கடிதம்! என்ன எழுதியிருக்காரு தெரியுமா?
Tasmac Shop Holiday : மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
மதுப்பிரியர்களுக்கு ஷாக் நியூஸ்.! தமிழகம் முழுவதும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிப்பு- எப்போ தெரியுமா.?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
ஒரு பக்கம் சூர்யாவின் விஸ்வநாத் அன் சன்ஸ்.. இன்னொரு பக்கம் விஷாலின் மகுடம்! நாளைக்கு எந்த படத்துக்கு போறீங்க?
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
சீர்காழி அருகே பரபரப்பு: மணல் குவாரியில் 40 அடி ஆழத்திற்கு மண் எடுக்க எதிர்ப்பு - பெண்கள் சாலைமறியல்! வட்டாட்சியரை முற்றுகையிட்டு காரசார வாக்குவாதம்..
Embed widget