மேலும் அறிய

கும்பகோணத்தில் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி தொடக்கம்

மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து, மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சியை கும்பகோணம் மகாமககுளம் தென்கரை திருமண மண்டபத்தில் தொடங்கியது.

கும்பகோணத்தில் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி  தொடங்கியது. இதில் 50 லட்சத்துக்கு விற்பனை செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மத்திய கைத்தறி ஜவுளி அமைச்சகம் மற்றும் மாநில அரசின் கைத்தறி மற்றும் துணிநூல் துறை இணைந்து, மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சியை கும்பகோணம் மகாமககுளம் தென்கரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில்  தொடங்கியது. கண்காட்சியை திறந்து வைத்து முதல் விற்பனையை அரசு கொறடா கோவி செழியன் தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் மயிலாடுதுறை நாடாளுமன்ற உறுப்பினர் ராமலிங்கம், கும்பகோணம் சட்டமன்ற உறுப்பினர் சாக்கோட்டை அன்பழகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கும்பகோணம் சரக கைத்தறி மற்றும் துணிநூல் துறை, உதவி இயக்குநர் இரா.கிரிஜாராஜ் தலைமை வகித்து பேசுகையில், இக்கண்காட்சி வரும் ஜனவரி 12 ஆம் தேதி முடிய 15 தினங்களுக்கு நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியில் ஈரோடு, திருவண்ணாமலை, காஞ்சிபுரம், மதுரை, இராமநாதபுரம், திண்டுக்கல், வேலூர், திருச்செங்கோடு, விருதுநகர், சேலம், திருநெல்வேலி, திருவாரூர், கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், பெரம்பலூர், திருச்சிராப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து 40 கண்காட்சி மற்றும் விற்பனை அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளன.


கும்பகோணத்தில் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி தொடக்கம்

கைத்தறி கண்காட்சியில் கண்கவர் டிசைன்களில் அனைத்து வயதினருக்கும் ஏற்ற அசல் ஜரிகை பட்டுப்புடவைகளும், ஆஃபைன் ஜரிகை பட்டுப்புடவைகளும், காட்டன் புடவைகளும், சுங்குடி உள்ளிட்ட பழமையான ரக சேலைகள், வேட்டிகள். போர்வைகள், பல வண்ண படுக்கை விரிப்புகள், துண்டுகள் மற்றும் கைலிகள் விற்பனைக்கு தயார் நிலையில் உள்ளன. கைத்தறி கண்காட்சியில் வாங்கப்படும் பருத்தி ரக ஜவுளிகளுக்கு 30 சதவிதம் அரசு தள்ளுபடியும், பட்டு ரக ஜவுளிகளுக்கு 10 சதவித சங்க கழிவுடன் 30 சதவிதம் அரசு தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட பட்டு ரக ஜவுளிகளுக்கு 35 சதம் முதல் 65 சதம் வரை சிறப்பு  கழிவு வழங்கப்படுகிறது. இக்கண்காட்சியில் 50 லட்சம் மதிப்புள்ள கைத்தறி ஆடைகள் விற்பனை செய்ய இலக்கு நிர்ணயக்கப்பட்டுள்ளது என்றார்.


கும்பகோணத்தில் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி தொடக்கம்

இது குறித்து கைத்தறி வியாபாரிகள் கூறுகையில், கும்பகோணத்தில் ஒவ்வொரு ஆண்டும், கைத்தறி கண்காட்சி நடைபெற்று வருகின்றது. பட்டு சேலைகளுக்கு புகழ்பெற்ற கும்பகோணம் மற்றும் சுற்றுப்பகுதி என்பதால்,  கைத்தறியில் தயாரிக்கும்  அரியலுார், ஜெயங்கொண்டம், பெரம்பலூர், திருவிடைமருதுார், திருபுவனம் உள்ளிட்ட மாநில முழுவதும் உள்ள கைத்தறி நெசவுத்தொழில் செய்யும் ஊர்களில் இருந்து கும்பகோணத்தில் நடைபெறும் கண்காட்சியில் விற்பனை செய்வார்கள்.

கும்பகோணத்தில் மாநில அளவிலான அரசு கைத்தறி கண்காட்சி தொடக்கம்

மேலும் மார்கழி மாதம் என்பதால், கும்பகோணம் மற்றும் சுற்றியுள்ள ஊர்களில் உள்ள சைவம் மற்றும் வைணவ கோயில்கள் அதிகமாக இருப்பதால், ஏராளமான வெளி மாநில,மாவட்த்தை சேர்ந்தவர்கள் வந்து செல்வதால், அவர்கள் கைத்தறி சேலைகள் உள்ளிட்டவைகளை ஆர்வமுடன் வாங்கி செல்வார்கள். கடந்தாண்டு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு, தற்போது கண்காட்சி அமைக்கப்பட்டுள்ளதால், இந்தாண்டு நிர்ணயித்த இலக்கை விட கூடுதலாக விற்பனையாகும் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
5364
Active
4724
Recovered
55
Deaths
Last Updated: Fri 6 June, 2025 at 11:10 pm | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

TVK Vijay Alliance | பாமக - தேமுதிக  - தவெக! உருவாகும் மெகா கூட்டணி? விஸ்வரூபம் எடுக்கும் விஜய்தங்கத்தின் மதிப்பில் 85% கடன் அள்ளிக் கொடுக்க RBI அனுமதி  பிரச்னை ஓவர்..! RBI Gold Loan Rules”வைரமுத்து சமரசம் பேசுனாரு என்கிட்ட ஆதாரம் இருக்கு” சீறிய சின்மயி Chinmayi on VairamuthuTVK Vijay Alliance | தவெக யாருடன் கூட்டணி? விஜய் போட்ட ஸ்கெட்ச்! அறிவிப்பு எப்போது?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
திடீரென மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட சோனியா காந்தி: இமாச்சலில் பரபரப்பு! காரணம் என்ன?
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்
”ஓயாத கிளாம்பாக்கம் பரிதாபங்கள்" நிர்வாகத் திறனற்ற ஆட்சி.. திமுகவை கேள்விகளால் வறுத்தெடுத்த எடப்பாடி பழனிச்சாமி
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
ஆற்றல் அசோக்குமார் மீது அடுத்தடுத்து புகார்கள்.. அம்பலமானது எப்படி? யார் இந்த முன்னாள் எம்பி-யின் மகன்?
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
L Murugan: ”முதல்வர் பூச்சாண்டி காட்ட வேணாம்... பொய் பிரச்சாரம் அம்பலம்! தொகுதி மறுவரையறை குறித்து எல். முருகன் குற்றச்சாட்டு
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
நீங்கள் நினைத்த கூட்டணியில் பாமக... ஹின்ட் கொடுத்த ராமதாஸ்.. பாமக தலைவர் யார்?
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
அயோத்தியில் அநியாயம்.. ராமர் கோயில் பிரசாதத்திலே பல கோடி மோசடி - பக்தர்களுக்கே விபூதி..
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
இதைவிட வேறென்ன வேண்டும்? ரசிகர்கள் செயலால்... நெகிழ்ந்து போன நடிகர் கார்த்தி!
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Thanjavur Toll Gate: தமிழ்நாட்டில் இருக்குறதே தாங்கலை..! இப்ப புதுசா ஒரு டோல்கேட்டா, ட்ரிப்புக்கு ரூ.105 கட்டணமாம்..
Embed widget