மேலும் அறிய

திருவாரூர் நகராட்சியில் பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி

’’தமிழ்ச்செல்விக்கு சரம் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் முத்துச்செல்வன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக புகார்’’

தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிரான பாலியல் துன்புறுத்தல்களும், தொல்லைகளும், பள்ளி மாணவிகள் மீது பாலியல் வன்கொடுமைகளும் அதிகரித்துக்கொண்டே வருகிறது. தமிழக அரசு சார்பில் இதனை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டாலும் தமிழகம் முழுவதும் பாலியல் கொடுமைகளுக்கு தினந்தோறும் பெண்கள் ஆளாக்கப்பட்டு வருகின்றனர். திருவாரூர் நகர் பகுதிக்கு உட்பட்ட அழகிரி காலனியைச் சேர்ந்தவர் தமிழ்செல்வி (30). தமிழ்ச்செல்விக்கு திருமணமாகி இரண்டு ஆண் குழந்தைகள் உள்ளனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்வி கடந்த 5 ஆண்டுகளாக திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் சரம் ஒப்பந்த நிறுவனத்தின் கீழ் தற்காலிக துப்புரவு பணியாளராக பணியாற்றி வருகிறார். தமிழ்செல்வி போன்று திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட தூய்மைப் பணியாளர்கள் பணியாற்றி வருகின்றனர். இந்த நிலையில் தமிழ்ச்செல்விக்கு சரம் ஒப்பந்த நிறுவனத்தின் மேலாளர் முத்துச்செல்வன் என்பவர் தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்ததாக கூறப்படுகிறது.


திருவாரூர் நகராட்சியில் பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி

இந்த நிலையில் இன்று பணிக்கு வந்த தமிழ்ச்செல்வி மடப்புரம் பகுதியில் துப்புரவு பணியில் ஈடுபட்டிருந்த பொழுது மயங்கி விழுந்துள்ளார். அதனை அடுத்து அருகில் இருந்த சக ஊழியர்கள் அவரை மீட்டு திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு மருத்துவர்கள் அவரை பரிசோதனை செய்த பின்னர் அவர் விஷம் அருந்தி இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும் தமிழ்செல்விக்கு தொடர்ந்து மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழ் செல்வியிடம் காவல்துறையினர் விசாரணை செய்ததில் பல்வேறு தகவல்கள் வெளியாகியுள்ளன.


திருவாரூர் நகராட்சியில் பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி

தமிழ்ச்செல்வி கூறுகையில், தான் திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் தற்காலிக ஒப்பந்த தொழிலாளராக கடந்த 5 ஆண்டுகளாக பணியாற்றி வருகிறேன். தற்போது என்னுடைய ஒப்பந்த நிறுவனமான சரம் நிறுவனத்தின் மேலாளர் முத்துச்செல்வன் தொடர்ந்து எனக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார். நான் பலமுறை எனது உயர் அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்துள்ளேன். அவர்கள் முத்துச்செல்வனை அழைத்து கண்டித்து அனுப்பி வைத்துள்ளனர். இந்த நிலையில் இன்று நான் பணியில் இருந்த பொழுது என்னை அலுவலகத்திற்கு வரவழைத்து தகாத முறையில் என்னிடம் நடந்து கொண்டார். அதனால் நான் மனம் உடைந்து அரளி விதையை அரைத்து குடித்து தற்கொலைக்கு முயன்றதாக தமிழ்ச்செல்வி கூறினார்.


திருவாரூர் நகராட்சியில் பாலியல் தொல்லை - பெண் துப்புரவு தொழிலாளி தற்கொலை முயற்சி

மேலும் தமிழ்ச்செல்வி திருவாரூர் நகர காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் அடிப்படையில் திருவாரூர் நகர காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருவாரூர் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் பெண் ஊழியர் வேலை செய்யும் இடத்தில் விஷத்தை அருந்தி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் திருவாரூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
ABP Premium

வீடியோ

Blinkit Delivery boy saves Girl |BLINKIT ORDER-ல் எலிமருந்து! ஹீரோவாக மாறிய DELIVERY BOY
Saaniya Chandhok | அர்ஜுன் டெண்டுல்கருக்கு டும்..டும்..!BUSINESS MAGNATE-ன் பேத்தியார் இந்த சானியா?
ஜனநாயகன் புது ரிலீஸ் தேதி அதிரடி காட்டும் விஜய் ரசிகர்களுக்கு GOOD NEWS | Jana Nayagan New Release Date
Girish Chodankar On DMK Alliance | பிரவீன் விஜய்யுடன் சந்திப்புராகுல் கொடுத்த ஐடியாவா?
Congress Aslam Basha | மிரட்டல்.. கட்டப்பஞ்சாயத்து..காங்கிரஸ் நிர்வாகி வீடியோ வைரல்!அலறவிடும் பாஷா!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ADMK alliance: ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
ஜன.23ஆம் தேதியை டிக் செய்த மோடி.! அதிமுக கூட்டணியில் யார் யார்.? வெளியாகப்போகும் முக்கிய அறிவிப்பு
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பணி நிரந்தரம் கோரும் ஆசிரியர்களின் முடியைப் பிடித்திழுத்து கைது செய்வதுதான் பரிசா? அன்புமணி கேள்வி!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
பரீட்சா பே சர்ச்சா 2026: மோடியுடன் உரையாட இத்தனை கோடி பேர் பதிவா? மாணவர்களுக்கு காத்திருக்கும் ஆச்சரியம்!
Pongal Special Buses: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்புப் பேருந்துகள்; நூற்றுக்கணக்கில் பல்வேறு ஊர்களுக்கு இயக்கம்
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Trump Tariff: அடுத்த வாரமே.. ”இந்தியா,சீனா மீது 500 சதவிகித வரி” - ஒப்புதல் கொடுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் - என்ன ஆச்சு?
Ramadoss Vs Anbumani: “நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
“நான் அமைப்பதே பாமக கூட்டணி, அன்புமணியின் வேட்பாளருக்கு மக்கள் வாக்களிக்க மாட்டார்கள்“: ராமதாஸ் ஆவேசம்
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
விஜய்க்காக ஒட்டுமொத்தமாக களத்தில் இறங்கிய காங்கிரஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
தொடர் போராட்டத்தில் ஆசிரியர்கள்: சம்பளம் கட், விடுமுறை கிடையாது- தொடக்கக் கல்வித்துறை அதிரடி உத்தரவு!
Embed widget