மேலும் அறிய

ஆஹா சுள்ளுன்னு வெளுக்குது வெயிலு... கருவாடும் காயுது: உற்சாகத்தில் மீனவத் தொழிலாளர்கள்

ஒரு தொழிலும், அதனை சார்ந்த தொழிலாளர்களும் இயற்கையுடன் எவ்வாறு பிணைந்து காணப்படுகின்றனர் என்பதற்கு இந்த கருவாடு காய வைக்கும் தொழிலையே உதாரணமாக கூறலாம்.

தஞ்சாவூர்: தஞ்சாவூர் மாவட்டம் சேதுபாவாசத்திரத்தில் கருவாடு காய வைக்கும் பணியில் வெகு மும்முரமாக ஈடுபட்டுள்ளனர் மீனவ தொழிலாளர்கள். ஒரு மாதத்திற்கு பின்னர் கருவாடு காயவைக்கும் பணி நடந்து வருகிறது. கருவாடு காய வைக்க வெயில் முக்கியம். இப்போது சேதுபாவாசத்திரம் பகுதியில் சுள்ளென்று அடிக்கும் வெயிலால் மீனவ தொழிலாளர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தஞ்சை மாவட்டம் கொள்ளுக்காடு தொடங்கி மல்லிப்பட்டினம், சேதுபாவாசத்திரம், மந்திரிபட்டினம், செம்பியன்மாதேவிபட்டினம் உள்பட 34 மீனவ கிராமங்களில் சுமார் 4,500 நாட்டுப்படகுகள் உள்ளன. மல்லிப்பட்டினம், கள்ளிவயல்தோட்டம், சேதுபாவாசத்திரம் ஆகிய பகுதிகளில் சுமார் 146 விசைப்படகுகள் உள்ளன.

இந்த படகுகளில் மீனவர்கள் கடலுக்கு சென்று இறால், நண்டு, மீன்களை பிடித்து வருகின்றனர். இந்த மீன்களை உடனடியாக விற்பனை செய்தும், வெளியூர் மற்றும் வெளிநாடுகளுக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கின்றனர். அதேசமயம் இதில் கழிவாக கூடிய மீன்களையும், சங்காயம் எனப்படும் சிறிய வகை மீன்களையும் வியாபாரிகள் வாங்கி துறைமுகத்திலேயே காயவைத்து கருவாடு விற்பனை செய்யும் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர். உணவிற்கு பயன்படும் கருவாடுகளை விட கோழிகளுக்கு தீவனமாக பயன்படும் சிறிய வகை சங்காய வகை மீன்களுக்கு பெரும் வரவேற்பு உள்ளது.

இவ்வகை மீன்களை மொத்தமாக வாங்கி காயவைத்து கிலோ ரூ.12 முதல் ரூ.15 வரை விற்பனை செய்யப்படுகிறது. இந்த கருவாடுகள் அனைத்தும் நாமக்கல் போன்ற பகுதிகளுக்கு கோழிப்பண்ணை வைத்துள்ளவர்கள் வாங்கி செல்கின்றனர். இது கோழி தீவனத்திற்காக அனுப்பப்படுகிறது. மல்லிப்பட்டினம் மற்றும் சேதுபாவாசத்திரம் ஆகிய துறைமுகங்களில் மட்டும் கருவாடுகளை தரம்பிரிக்க, காயவைக்க, சாக்குமூட்டைகளில் கட்டி லாரிகளில் ஏற்றுவதற்கு என தினமும் சுமார் 1,000-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர். கருவாடு தயாரிக்கும் தொழிலால் பல்வேறு நிலைகளிலும் தொழிலாளர்கள் பயன்பெற்று வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

கடந்த 1 மாதத்திற்கு மேலாக கடலோர பகுதியில் தொடர்ந்து விட்டு விட்டு மழை பெய்து வந்தது. மேலும் கடந்த 15 தினங்களாக காற்றழுத்த தாழ்வு நிலையும், புயல் சின்னமும் உருவாகி கனமழை பெய்து வந்தது. இதன் காரணமாக கருவாடு காயவைக்க முடியாமல் தொழில் பாதிக்கப்பட்டது. இது இந்த தொழிலை நம்பி இருந்த தொழிலாளர்களின் வாழ்வாதாரம் வெகுவாக பாதிக்கப்பட்டது. இந்நிலையில் மோந்தா புயல் கரையை கடந்த பிறகு கடந்த நான்கு நாட்களாக வெயில் சுட்டெரித்து வருகிறது. இந்த வெயிலை பயன்படுத்தி சேதுபாவாசத்திரம் பகுதியில் கடந்த ஒரு  மாதத்திற்கு பிறகு கருவாடு காயவைக்கும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. இதனால் மீனவத் தொழிலாளர்கள் வெகு உற்சாகம் அடைந்துள்ளனர்.

ஒரு தொழிலும், அதனை சார்ந்த தொழிலாளர்களும் இயற்கையுடன் எவ்வாறு பிணைந்து காணப்படுகின்றனர் என்பதற்கு இந்த கருவாடு காய வைக்கும் தொழிலையே உதாரணமாக கூறலாம். சின்ன மீன் என்று ஒதுக்கப்படும் மீன் இன்ொரு உயிருக்கு உணவாகிறது. இதை தயாரிக்கும் தொழிலாளர்கள் இயற்கை ஒத்துழைத்தால்தான் வேலையே பார்க்க முடியும் என்ற நிலை. இப்ோது வெயில் சுட்டெரிப்பதால் கருவாடு காய வைக்கும் தொழிலாளர்கள் முகத்தில் ஒரு  உன்னதமான மகிழ்ச்சி ஏற்பட்டுள்ளது என்பதும் உண்மைதானே.

கருவாடு காயவைக்கும் தொழிலாளர்கள், அதை பக்குவமாக பார்சல் செய்பவர்கள், வாகன ஓட்டுனர்கள் என்று ஏராளமானோர் இதை நம்பியே உள்ளனர்.

தலைப்பு செய்திகள்

தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தமிழகத்திற்கு தண்ணீர் மட்டும் கிடையாது... விற்பனைக்கு மட்டும் பால்? அதிரடியாக களம் இறங்கிய விவசாயிகள்
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே குறுவை சாகுபடி இல்லாத வயல்கள்... ஆடுகளின் மேய்ச்சல் களமானது
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சாவூர் அருகே 803 கிலோ கஞ்சா தீயில் அழிப்பு! ஒரு சமூகத்தின் எதிர்காலத்தையே காக்கும் நடவடிக்கை
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்
தஞ்சையின் “வியூ”வை ரசித்து பார்க்க இந்த ஸ்பாட் சூப்பர் ஹாட் ஸ்பாட் நண்பாஸ்

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: “விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
“விஜய் உயிரோடு இருக்கமாட்டார், தற்கொலைப்படை தாக்குதல்” கொலை மிரட்டல் விடுத்த ஆர்.பி. உதயகுமார்
TN Weather News: இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
இரண்டு நாட்களுக்கு கனமழை எச்சரிக்கை - இன்று எங்கெல்லாம் தெரியுமா? தமிழக வானிலை அறிக்கை
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Viswanath and Sons: ஒரே நாளில் சக்ஸஸ் மீட்.. சூர்யாவுக்கு என்னாச்சு.. விஸ்வநாத் அண்ட் சன்ஸ் அவ்வளவு தானா?
Maruti Baleno: ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
ரூ.6 லட்சம் பட்ஜெட்டில் 30KM மைலேஜ் - ப்ரீமியம் ஹேட்ச்பேக்கில் அதிரடி அப்க்ரேட்கள் - அம்சங்கள், லாஞ்ச்?
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Embed widget