மேலும் அறிய

விஷ-ஜந்துக்களின் சரணாலயமாக விளங்கும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம்...!

’’மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலக வளாகம் புதர்மண்டி உள்ள நிலையில் இன்று 6 அடி நீளமுள்ள பாம்பை ஒரு மணி நேரம் போராடி  தீயணைப்பு வீரர்கள் மீட்டுள்ளனர்’’

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் சுமார் 100 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டடம் மிகப்பெரிய பரப்பளவில் அமைந்துள்ள நிலையில் கட்டடத்தை சுற்றி பொதுமக்கள் அமர்ந்து செல்வதற்கு வசதியாக மரங்களுடன் கூடிய பூங்கா இருந்தது. தற்போது இது பராமரிப்பின்றி புதர்மண்டி கிடக்கிறது.


விஷ-ஜந்துக்களின் சரணாலயமாக விளங்கும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம்...!

இதனால், கொடிய விஷம் உள்ள பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகவும் இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வரும் தாங்கள் உயிர் அச்சத்துடன் வருவதாகவும், கோட்டாட்சியர் அலுவலகத்தில் காத்திருக்கும் நேரத்தில் ஏதேனும் விஷ ஜந்துக்களால் கடிப்பட்டு உயிருக்கு ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற பீதியுடன் வருவதாக பொதுமக்கள் புகார் தெரிவித்து வந்தனர். இதுகுறித்து கண்டுகொள்ளாத கோட்டாட்சியர் அலுவலக அதிகாரிகள் கோட்டாட்சியர் அலுவலகத்தை பராமரிக்காமல் அலட்சியப் போக்கில் இருந்து வருகின்றனர்.


விஷ-ஜந்துக்களின் சரணாலயமாக விளங்கும் மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகம்...!

இந்நிலையில் அலுவலகத்தின் வாசல் முன்புறமுள்ள பகுதியில் 6 அடி நீளமுள்ள மிகப்பெரிய பாம்பு ஒன்று மரத்தில் ஏறிக்கொண்டு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து ஊழியர்கள் தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் அளித்தனர். அதனைத் தொடர்ந்து அங்கு விரைந்த தீயணைப்பு துறை வீரர்கள் சுமார் ஒரு மணி நேரத்திற்கு மேல் போராடி மரத்தின் மேலாக இருந்த பாம்பை லாவகமாக பிடித்தனர். தொடர்ந்து அந்த பாம்பை வனத்துறையிடம் ஒப்படைத்து பாதுகாப்பான வனப்பகுதியில் கொண்டு விட அனுப்பி வைத்தனர். 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் ABPநாடு செய்திகளை உடனுக்குடன் பெற https://bit.ly/2TMX27X

 

மயிலாடுதுறை கோட்டாட்சியர் அலுவலகத்தில் பொதுமக்கள் அமர்வதற்காக கோட்டாட்சியர் அலுவலக வாயில் முன்பு இருக்கைகள் அமைக்கப்பட்டு பூங்கா பல ஆண்டுகளுக்கு முன்பு பராமரிக்க பட்டு வந்தது. ஆனால் அது காலப்போக்கில் அங்கு பணி புரியும் அதிகாரிகளின் அலட்சியத்தால் முறையாக பராமரிக்கப்படாமல் தற்போது புதர்கள் மண்டி விஷ ஜந்துக்களின் வசிப்பிடமாக மாறியுள்ளது. இதனால் கோட்டாட்சியர் அலுவலகத்திற்கு வருகை தரும் பொதுமக்கள் அவ்வழியாக வர வேண்டிய சூழலும், அந்த புதர்களுக்கு அருகிலேயே காத்திருக்கும் நிலையும் நிலவி வருகிறது. இதனால் அங்கு வரும் பொதுமக்களுக்கு பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்கள் கடித்து உயிரிழப்பை ஏற்படுத்தும் வாய்ப்புகள் அதிகம் இருப்பதால், அசம்பாவிதங்கள் ஏதும் நடைபெறும் முன்பு துறை சார்ந்த அதிகாரிகள் உடனடியாக புதர்மண்டிய பகுதிகளை சீரமைத்து பொதுமக்கள் அமரும் வகையில் சிமெண்ட் பெஞ்சுகள் உடன் கூடிய பூங்காவாக மீண்டும் இதனை மாற்ற வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

ஊராட்சி ஒன்றியத்தில் மோசடி: ஆணையர், பொறியாளர்கள் உள்பட 7 பேர் சஸ்பெண்ட்!

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
ABP Premium

வீடியோ

கோவை தெற்கில் போட்டி? செந்தில் பாலாஜி MASTERPLAN! பின்னணி என்ன?
குட்டி பும்ரா யாக்கர் கிங் மங்கேஷ் யாதவ் தட்டி தூக்கிய RCB | Virat Kholi | IPL Auction 2026 | Mangesh Yadav
தங்கம் விலை குறையுமா? மத்திய அரசு சொல்வது என்ன தங்கத்தை குவித்துள்ள இந்தியா | Gold Rate Hike
Nitish kumar Hijab row | ”முகத்தை காட்டு மா” ஹிஜாப்பை இழுத்த நிதிஷ்! அரசு நிகழ்ச்சியில் பரபரப்பு
Prashant Kishor joins Congress | காங்கிரஸில் பிரசாந்த் கிஷோர்?DEAL-ஐ முடித்த பிரியங்கா?ஆட்டத்தை தொடங்கிய ராகுல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPS Officers Transfer : ’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..! யார், யாருக்கு என்ன பதவி ?
’பட்டியல் தயார்’ இந்த மாத இறுதியில் வருகிறது ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்றம்..!
Virugampakkam DMK Candidate: விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
விருகம்பாக்கம் தொகுதி: திமுகவில் யாருக்கு.? பிரபாகர் ராஜாவா.? தனசேகரனா.? காத்திருக்கும் ட்விஸ்ட்
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
DMK Election Manifesto: காத்திருக்கும் கவர்ச்சி வாக்குறுதிகள்! குழுவை அமைத்தது திமுக - கனிமொழி தலைமையில் யார்? யார்?
RM 003 V2 Watch: மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
மெஸ்ஸிக்கு ஆனந்த் அம்பானி பரிசளித்த ரூ.10 கோடி வாட்ச்; RM 003-V2 GMT-ன் சிறப்பு என்ன.?
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
MK Stalin: 100 நாள் வேலை விவகாரம்.. அமைதி காக்கும் அதிமுக.. EPSஐ காட்டமாக விமர்சித்த முதலமைச்சர் ஸ்டாலின்
OPS STATEMENT: மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
மோடி அரசுக்கு எதிராக ஸ்டாலினுடன் கை கோர்த்த ஓபிஎஸ்.! வெளியான பரபரப்பு அறிக்கை
Chennai Power Cut: சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
சென்னையில டிசம்பர் 18-ம் தேதி எங்கெங்க மின் தடை ஏற்படப் போகுது தெரியுமா.? விவரம் இதோ
Trump Warns Venezuela: “எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
“எண்ணெய் வயல்கள ஒப்படைச்சுடுங்க“; வெனிசுலாவிற்கு எச்சரிக்கை விடுத்த ட்ரம்ப்; அதிகரிக்கும் பதற்றம்
Embed widget