மேலும் அறிய

Pugar Petti: 24 மணி நேரமும் பெட்டிக்கடையில் கிடைக்கும் மதுபானம் - போலீஸ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தட்டாங்கோவில் கிராமத்தில்  இயங்கி வரும் பெட்டிக்கடை ஒன்றில் அரசு மதுபானங்கள் 24 மணி நேரமும் கிடைக்கின்றன. டாஸ்மாக்கில் 135 ரூபாய்க்கு விற்கப்படும் குவாட்டர் 200 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

திருவாரூர் மாவட்டம் மலவராயநல்லூர் ஊராட்சியில் உள்ள தட்டாங்கோவில் கிராமத்தில்  இயங்கி வரும் பெட்டிக்கடை ஒன்றில் அரசு மதுபானங்கள் 24 மணி நேரமும் கிடைக்கின்றன. டாஸ்மாக்கில் 135 ரூபாய்க்கு விற்கப்படும் குவாட்டர், இங்கு 200 ரூபாய்க்கும் கட்டிங் 100 ரூபாய்க்கும் விற்கப்படுகிறது என புகார் எழுந்துள்ளது.

இந்தப் பெட்டிக்கடையினை தம்பதி ஒருவர் நடத்தி வருவதாக கூறப்படுகிறது. இந்த மது விற்பனையால் அந்த ஊராட்சி மட்டுமல்லாது அருகிலுள்ள திரு ராமேஸ்வரம், தென்கோவனூர் போன்ற ஊராட்சியை சேர்ந்த பொதுமக்களும் பெண்களும் பாதிக்கப்படுவதாக கூறுகின்றனர். இங்கு விடியற்காலையில் வரும் மதுப் பிரியர்கள் மது குடித்துவிட்டு அங்கேயே சாலையில் விழுந்து கிடப்பதால் அந்த வழியாக பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லும் மாணவிகள் முகம் சுழிக்கின்ற அவல நிலை உள்ளது.

மேலும் காலை நேரத்தில் அங்கு மது அருந்தும் மதுப் பிரியர்களால்  பெண்கள் மற்றும் மாணவிகள் அந்த சாலையை கடந்து செல்ல முடியவில்லை என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்தப் பெட்டி கடையில் நடக்கும் மது விற்பனை காரணமாக திருராமேஸ்வரம், கோட்டகச்சேரி, கூப்பாச்சி கோட்டை, வாக்கோட்டை, தென்கோவனூர், வடகோவனூர் உள்ளிட்ட பல கிராம மக்கள் பாதிக்கப்படுவதாக கிராம சபை கூட்டத்தில் பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து, தென்கோவனூர்,  திருராமேஸ்வரம் ஆகிய இரு ஊராட்சி மன்ற தலைவர்கள் கிராம சபை கூட்டத்தில் இது குறித்து தீர்மானம் நிறைவேற்றி கோட்டூர் காவல் ஆய்வாளருக்கு கடந்த நவம்பர் ஒன்றாம் தேதி புகார் மனுவையும் அளித்துள்ளனர்.


Pugar Petti: 24 மணி நேரமும் பெட்டிக்கடையில் கிடைக்கும் மதுபானம் - போலீஸ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

இருப்பினும் இதுவரை காவல்துறை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் இப்பகுதி இளைஞர் ஒருவர் இந்த கடையில் நடக்கும் மதுபான விற்பனை குறித்து எடுத்த வீடியோ சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.

தமிழக முழுவதும் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சியினர் மகளிர் அமைப்பினர் தொடர்ந்து கோரிக்கை வைத்து வரும் நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அரசு அனுமதியின்றி பல்வேறு இடங்களில் அரசு மதுபானம் விற்பனை செய்யப்பட்டு வருவது மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக நெடுஞ்சாலை பகுதிகளில் அரசு மதுபான கடை செயல்படக்கூடாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் திருவாரூர் மாவட்டத்தில் அதிகளவில் கிராமப்புறங்களில் மதுபானக் கடைகள் செயல்பட்டு வருகின்றன.


Pugar Petti: 24 மணி நேரமும் பெட்டிக்கடையில் கிடைக்கும் மதுபானம் - போலீஸ் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நண்பகல் 12 மணிக்கு மதுக்கடைகளைத் திறக்க வேண்டும் என்ற சூழ்நிலையில் பல இடங்களில் 24 மணி நேரமும் கள்ளச் சந்தையில் மது விற்பனை திருவாரூர் மாவட்டத்தில் அமோகமாக நடைபெற்று வருகிறது. இதனை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

கள்ளச் சந்தையில் மது விற்பனையில் ஈடுபடுபவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரி செல்லக்கூடிய மாணவ, மாணவிகளுக்கு இடையூறாக மது அருந்திவிட்டு சாலையில் ரகளையில் ஈடுபடும் நபர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கள்ளச் சந்தையில் மது விற்பனை செய்தால் அவர்கள் மீது குண்டர் சட்டத்தின்கீழ் வழக்கு பதிவு செய்ய வேண்டும் என மாவட்ட காவல் துறையினருக்கு பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

 

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget