மேலும் அறிய

கும்பகோணத்தில் வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து - அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பிய 50 பயணிகள்

’’அப்போது அச்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த அரசு தலைமை கொறாடா கோவி.செழியன், வயலில் பாய்ந்த பேருந்தை பார்வையிட்டு, உடனடியாக, போலீசாருக்கு தகவல் கொடுத்தார்’’

வட கிழக்கு பருவ மழை தொடங்கியதைடுத்து தஞ்சாவூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகின்றது. தஞ்சாவூரில் 26 மிமீ, திருவையாற்றில் 6 மிமீ, பூதலுாரில் 45.80 மிமீ, ஒரத்தநாட்டில் 19.40 மிமீ, கும்பகோணத்தில் 13 மிமீ, பாபநாசத்தில் 26.60 மிமீ,  திருவிடைமருதுாரில் 51.40 மிமீ, பட்டுக்கோட்டையில் 13.60 மிமீ மழை பெய்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தில் மொத்தம் 201.80 மிமீ அளவில் மழை பெய்துள்ளது. இதே நாளில் கடந்த 2019 ஆம் ஆண்டு 677.46 மிமீ, 2020 ஆம் ஆண்டு 501.53 மிமீ, 2021 ஆம் ஆண்டு இன்று வரை 1146.15 மிமீ அளவு பெய்துள்ளது. கடந்தாண்டை விட இரண்டு மடங்கு அதிகமாக மழை பெய்துள்ளது.

தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதுார் தாலுக்காவில் அதிகஅளவில் மழை பெய்து வருகின்றது. இந்நிலையில், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து தனியார் பேருந்து சுமார் 50 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றி கொண்டு அரியலுாருக்கு சென்றது. அப்போது திருப்பனந்தாளை அடுத்த திருவாய்ப்பாடி திருப்பத்தில் தனியார் பேருந்து வேகமாக வந்தது. அப்போது பேருந்து நிறுத்ததில் பயணிகள் நிற்பதை பார்த்து, பிரேக் போடுவதற்கு, டிரைவர் முயன்ற போது, பிரேக் பிடிக்காமல், சாலையின் ஒரத்தில் இருந்த வயலுக்குள் பாய்ந்தது.

கும்பகோணத்தில் வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து - அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பிய 50 பயணிகள்

இதில் பேருந்தின் உள்ளே இருந்து 5 க்கும் மேற்பட்ட பயணிகளுக்கு லேசான காயம் ஏற்பட்டது.  இது குறித்து திருப்பனந்தாள் போலீசார் விசாரித்து வருகின்றனர். அப்போது அச்சாலையில் காரில் சென்று கொண்டிருந்த அரசு தலைமை கொறாடா கோவி.செழியன், வயலில் பாய்ந்த பேருந்தை பார்வையிட்டு, உடனடியாக, போலீசாருக்கு தகவல் கொடுத்து, பயணிகள் யாராவது காயம் அடைந்திருந்தால், உடனடியாக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்க உத்தரவிட்டார்.

இது குறித்து பேருந்தில் வந்தவர் கூறுகையில், கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பேருந்து புறப்பட்டதிலிருந்கு வேகமாக வந்து கொண்டிருந்தது. திருப்பனந்தாளை அடுத்த திருவாய்ப்பாடி திருப்பத்தில் வரும் போது, பயணிகள் நிற்பதை அறிந்து டிரைவர் பிரேக் போடுவதற்கு முயன்றார். ஆனால் தொடர் மழையால் பைபாஸ் சாலையில் பிரேக் பிடிக்க முடியவில்லை. இதனை அறிந்த பயணிகள் கூச்சலிட்டனர்.

கும்பகோணத்தில் வயலுக்குள் பாய்ந்த தனியார் பேருந்து - அதிர்ஷ்ட வசமாக உயிர்த்தப்பிய 50 பயணிகள்

பேருந்து பிரேக் பிடிக்காமல் சென்று சாலையின் நடுவில் உள்ள தடுப்பு சுவற்றில் மோதினாலோ அல்லது அதையும் தாண்டி, எதிர்புறம் வரும் சாலையில் வேகமாக வரும் வாகனத்தில் மீது மோதினாலோ,  பேருந்தில் உள்ளவர்களின் நிலை கேள்வி குறியாகும் என்று சாமர்த்தியமாக, தனியார் பேருந்து டிரைவர், வயலுக்குள் இறக்கினார்.  இதில் அதிஷ்டவசமாக ஐந்துக்கும் மேற்பட்டோர் லேசான காயத்துடன் 50 பேரும் உயிர் தப்பினர். கும்பகோணத்திலிருந்து அணைக்கரை வரை உள்ள பைபாஸ் சாலையில் தொடர்ந்து மழை பெய்து வருவதால், வேகமாக செல்லும் வாகனங்களில் பிரேக் பிடிப்பது கிடையாது. சாலையின் நிலை தெரியாமல், வரும் வாகனங்கள், திடீரென பிரேக் பிடிக்காததால், விபத்தில் சிக்கி கொள்கிறார்கள் என்றார்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
ABP Premium

வீடியோ

Magalir Urimai Thogai | ''மகளிருக்கு இன்னொரு CHANCE..!''கலைஞர் மகளிர் உரிமைத்தொகை
Rajinikanth 75th Birthday Celebration|’’ரஜினி என் குலசாமி!’’வீடு முழுக்க RAJINISMவியக்க வைத்த ரசிகர்
Tindivanam Bus Accident - டயர் வெடித்து விபத்து ஒருவர் பலி, 15 பேர் படுகாயம்; உதவிய விழுப்புரம் கலெக்டர்
Nainar Nagendran Meet EPS | டெல்லிக்கு அழைத்த அமித் ஷா; ஈபிஎஸ்-நயினார் திடீர் சந்திப்பு; அண்ணாமலை பலே ப்ளான்!
LAW & ORDER இனிமே இவர் கையில் தமிழகத்தின் புதிய பொறுப்பு DGPயார் இந்த அபய் குமார் சிங் IPS? | Abhay Kumar Singh | MK Stalin | TN New DGP

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Magalir Urimai Thogai: இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
இது தொடக்கமே.. மகளிர் உரிமைத் தொகை மேலும் உயரும்; முதலமைச்சர் வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
ADMK BJP: அதிமுக கூட்டணி.. அமித்ஷாவிற்கு தலைவலி - இதுதான் சங்கதி!
Chennai Metro Rail Work: சென்னை மெட்ரோ பணியில் கலக்கும்
சென்னை மெட்ரோ பணியில் கலக்கும் "மயில்"; எந்த மயில்னு யோசிக்கிறீங்களா.? இத படிங்க தெரியும்
PM Kisan 22nd Installment: பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
பிரதம மந்திரி கிசான் நிதியின் 22-வது தவணை எப்போ வரும்.? அதுக்குள்ள விவசாயிகள் இத செஞ்சுடுங்க
Trump's C5 Plan.?: ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
ஐரோப்பாவிற்கு G7; ஆசியாவிற்கு C5; ட்ரம்ப்பின் பலே பிளான்.? எந்தெந்த நாடுகள் தெரியுமா.?
Gold Rate Dec.13th: அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
அய்யய்யோ.! தங்கம் விலை ரூ.99,000-த்தை நெருங்கியது; ஒரே நாளில் ரூ.2560 உயர்வு - இன்று விலை என்ன.?
Magalir Urimai Thogai: மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
மகளிர் உரிமை தொகை ரூ. 1000 கிடைக்கவில்லையா.! மீண்டும் ஒரு வாய்ப்பு- எப்போ தெரியுமா.?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Hyundai Verna: ரூ.13 லட்சம்தான் ஆரம்பம்.. ஹுண்டாய் Verna காரை வாங்கலாமா? வேண்டாமா?
Embed widget