மேலும் அறிய

வேளாண் பயிர் பாதிப்புக்கான இழப்பீட்டு தொகை; முதல்வர் அறிவிக்க மறுப்பது ஏன்..? - பி.ஆர்.பாண்டியன் கேள்வி 

கொள்ளிட கரையோர கிராமங்களில் ஏற்பட்ட விவசாய பாதிப்புகளை தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் நேரில் பார்வையிட்டு விவசாயிகளுக்கு ஆறுதல் கூறினார்.

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றிய பகுதிகளில் நாதல்ப்படுகை, முதலைமேடு திட்டு, வெள்ளைமணல் ஆகிய கிராமங்களில் கொள்ளிடம் வெள்ளநீர் சூழ்ந்து பகுதிகளையும்,  முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை நேரில் சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர் கூறியதாவது:


வேளாண் பயிர் பாதிப்புக்கான இழப்பீட்டு தொகை; முதல்வர் அறிவிக்க மறுப்பது ஏன்..? - பி.ஆர்.பாண்டியன் கேள்வி 

காவிரியில் மூன்றாவது முறையாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதுவரையிலும் இல்லாத வகையில் தொடர்ந்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வருகிறது. இதனால் நெல், வாழை, சோளம், பருத்தி, காய்கறிகள், பழ வகைகள் உள்ளிட்ட பணப்பயிர்களும் பூ உள்ளிட்ட தோட்ட பயிர்களும் கடுமையாக சேதமடைந்துள்ளது. பாதிப்பு குறித்து இதுவரையிலும் கணக்கெடுப்புகள் நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்ட மக்களுக்கு இழப்பீடு கொடுப்பது குறித்தான எந்த ஒரு அறிவிப்பையும் தமிழக முதலமைச்சர் அறிவிக்கதது ஏன்? என கேள்வி எழுப்பியவர், இது  மிகுந்த ஏமாற்றம் அளிக்கிறது என்றார்.



வேளாண் பயிர் பாதிப்புக்கான இழப்பீட்டு தொகை; முதல்வர் அறிவிக்க மறுப்பது ஏன்..? - பி.ஆர்.பாண்டியன் கேள்வி 

இரண்டு ஆண்டுகளாக குருவை காப்பீடு செய்வதை தமிழக அரசு கைவிட்டு விட்டது. இதனால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் தமிழக அரசு பொறுப்பு ஏற்று நிவாரணம் அறிவிக்க வேண்டும். நாதல் படுக்கை, முதலை மேடுதிட்டு, வெள்ளை மணல் ஆகிய 3 கிராமங்களில் வீடுகள் பாதிக்கப்பட்டுள்ளன. மக்கள் மேடான பகுதிகளில் தங்க வைக்கப்பட்டு உணவு வழங்கப்பட்டு வருகிறது. ஆண்டுதோறும் பாதிப்பிலிருந்து அவர்களை மீட்டெடுக்க கிராமத்தின் அருகே மேடான இடங்களில் அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை கட்டி அவர்களை நிரந்தரமாக குடியமர்த்த தமிழக அரசு முன்வர வேண்டும். 


வேளாண் பயிர் பாதிப்புக்கான இழப்பீட்டு தொகை; முதல்வர் அறிவிக்க மறுப்பது ஏன்..? - பி.ஆர்.பாண்டியன் கேள்வி 

வீடுகளை இழந்துள்ள மக்களுக்கு ஓட்டு வீடுகளுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும், குடிசை வீடுகளுக்கு ரூ.25000 நிதி உதவி வழங்கிட வேண்டும். கிராமங்களை மையமாக வைத்து புயல் வெள்ள பேரிடர் பாதுகாப்பு மண்டபங்களை உடன் அமைத்திட வேண்டும். கொள்ளிடம் பாலம் முதல் கடல் முகத்துவாரம் வரையிலும் இருபுறமும் சிமெண்ட் கான்கிரீட் சுவர்கள் அமைத்து வெள்ளநீர் உடைத்துக்கொண்டு வெளியேறுவதை தடுக்க முன்வர வேண்டும். மேலும், வெள்ளமணல் கதவணை திட்டத்தை உடனடியாக நிறைவேற்ற வேண்டும். தொடர்ந்து கல்லணை வரையிலும் ஏழு கிலோமீட்டர் ஓர் இடத்தில்  கதவணைகள் அமைத்து நிலத்தடி நீரை பராமரிக்க வேண்டும்.


வேளாண் பயிர் பாதிப்புக்கான இழப்பீட்டு தொகை; முதல்வர் அறிவிக்க மறுப்பது ஏன்..? - பி.ஆர்.பாண்டியன் கேள்வி 

மணல் கொள்ளையை தடுத்து நிறுத்திட வேண்டும். மணல் விற்பனையை ஒழுங்குபடுத்த வேண்டும். பாசன ஆறுகளில் மணல் எடுப்பதற்கு தடை விதித்திட வேண்டும். தமிழக அரசு ஒரு உயர்மட்ட குழுவை அனுப்பி காவிரி கொள்ளிடம் கரைகளின் அருகே பஞ்சப்பட்டி ஏரி முதல் வெளிங்டன் ஏரி வரை அனைத்து ஏரிகளுக்கும் உரிய பாசன வசதியை செய்து உபரி நீரை நிரப்ப  நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். அதற்கான திட்டமிடலை உடன் துவங்கிட வேண்டும். காவிரியில் உபரி நீரை தடுத்து ராசி மணலில் அணை கட்டுவது ஒன்றுதான் 64 டிஎம்சி தண்ணீரையாவது தேக்கி வைத்து பாசனத்திற்கு பயன்படுத்த முடியும். அதற்கு மத்திய அரசோடு பேச்சுவார்த்தை நடத்தி, கர்நாடக அரசிடம் ஒத்த கருத்து உருவாக்கி அணை கட்டுமான நடவடிக்கையை துவங்க காவிரி மேலாண்மை ஆணையத்தில் தமிழக அரசு முறையிட வேண்டும் என்றார். 


வேளாண் பயிர் பாதிப்புக்கான இழப்பீட்டு தொகை; முதல்வர் அறிவிக்க மறுப்பது ஏன்..? - பி.ஆர்.பாண்டியன் கேள்வி 

இந்நிகழ்வில் தமிழக காவிரி விவசாயிகள் சங்கத்தின் மயிலாடுதுறை மாவட்ட செயலாளர் கொள்ளிடம் விசுவநாதன், ஒருங்கிணைப்பாளர் வேட்டங்குடி சீனிவாசன், கொள்ளிடம் ஒன்றிய செயலாளர் ஆனந்த் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
CBSE: 10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள்கள் கசிவா? சிபிஎஸ்இ பரபரப்பு விளக்கம்!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
முஸ்லீம்கள் ஓட்டு கிடைக்குமா? தவெக விஜய்யின் மாஸ்டர் ஸ்ட்ரோக்.. திமுக கோட்டையில் ஓட்டை!
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Watch video: பாலத்தை எல்லாம் கும்பிட்றீங்க? மகா கும்பமேளாவில் நடக்கும் மூடநம்பிக்கையின் உச்சம்
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Coimbatore Shutdown: கோவையில் எங்கெல்லாம் மின்தடை (20.02.2025 ): செக் பன்னிக்கோங்க.!
Champions Trophy 2025: சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
சாம்பியன்ஸ் டிராபி புது ஜெர்சியில இந்திய அணி வீரர்கள பார்த்துட்டீங்களா.? இதோ புகைப்படங்கள்...
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.