மேலும் அறிய

திருச்சென்னம்பூண்டியில் குடிநீர் நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு - கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

நேற்று திருச்சென்னம்பூண்டியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி, கிராம நிர்வாகம் அலுவலகம் முன்பாக வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் தலைமையில் பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

தஞ்சாவூர் மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே திருச்சென்னம்பூண்டி கொள்ளிடம் ஆற்றில், ஏற்கனவே ஒரு நீரேற்று நிலையம் இயங்கி வருகிறது. இதில் இருந்து  புதுக்கோட்டை, கந்தர்வக்கோட்டை, கறம்பக்குடி, திருவரங்குளம், அறந்தாங்கி பகுதிகளுக்கு, கூட்டு குடிநீர் திட்டத்தின் கீழ் ராட்சத போர்வெல் மூலம் வினாடிக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் உறிஞ்சி குழாய் மூலம் அனுப்பப்படுகிறது. இந்நிலையில், மேலும் புதிதாக 43 ஊர்களுக்கு குடிநீர் வழங்க, மற்றொரு நீரேற்று நிலையம் அமைப்பதற்கான ஆய்வு பணிகள் நடந்து வருகிறது. இந்த குடிநீர் நீரேற்று நிலையத்தால், அப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பூமிக்கடியில் வெகுதொலைவில் சென்றதாகவும், குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும் கூறி, கிராம மக்கள்  எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.


திருச்சென்னம்பூண்டியில்  குடிநீர் நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு - கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

 

இந்நிலையில் நேற்று திருச்சென்னம்பூண்டியில் உள்ள அனைத்து வீடுகளிலும் கருப்புக் கொடி ஏற்றி, கிராம நிர்வாகம் அலுவலகம் முன்பாக வழக்கறிஞர் வெ.ஜீவக்குமார் தலைமையில்  பொதுமக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதுகுறித்து திருச்சென்னம்பூண்டி விவசாயிகள் கூறுகையில் கொள்ளிடம் ஆற்றில் எங்கள் கிராம பகுதியில் ஏற்கனவே மூன்று இடங்களில் மணல் குவாரிகள் செயல்பட்டு வந்தது. இங்கிருந்து மணல் எடுக்கப்பட்டதால் நிலத்தடி நீர் மட்டம் குறைந்தது. இதனால் சாகுபடி பயிர்களுக்கு போர்வெல்லில் தண்ணீர் வராமல், கூடுதல் செலவு செய்து அதிக ஆழத்துக்கு மீண்டும் புதிதாக போர்வெல்போடும் நிலை விவசாயிகளுக்கு உருவானது.


திருச்சென்னம்பூண்டியில்  குடிநீர் நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு - கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

கூட்டுகுடிநீர் திட்டம் மூலம் வினாடிக்கு 10 ஆயிரம் லிட்டர் தண்ணீர் போர்வெல் மூலம் உறிஞ்சி எடுக்கப்படுகிறது. இதனால் சுற்றுப்புற கிராமங்களில்  நிலத்தடி நீர் குறைந்து, குடி தண்ணீரில்  காரத்தன்மை அதிகரித்துள்ளது. இரண்டாவது பம்ப் ஹவுஸ் அமைக்கப்பட்டு நீர் உறிஞ்சப்பட்டால் எங்கள் வளமான பகுதி நிச்சயம் பாதித்து தண்ணீர் தட்டுப்பாட்டால் அனைத்து தரப்பு மக்களும் பாதிக்கப்படுவர். விவசாயிகளின் வாழ்வாதாரம் காக்க இரண்டாவது நீரேற்று நிலையம் அமைக்கும் திட்டத்தை மறுபரிசீலனை செய்து கைவிட வேண்டும்.  


திருச்சென்னம்பூண்டியில்  குடிநீர் நீரேற்று நிலையம் அமைக்க எதிர்ப்பு - கருப்பு கொடி கட்டி கிராம மக்கள் போராட்டம்

கொள்ளிடம் ஆற்றில் ராட்ஷத பம்ப் அமைக்க கூடாது என பல்வேறு போராட்டங்களை நடத்தினோம். அங்கு குவாரி அமைக்க கூடாது எனவும் தெரிவித்தோம். இந்நிலையில், இரண்டாவதாக ராட்ஷத பம்ப் அமைத்து வருகிறார்கள். இதனால் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக குறைந்து விடும். முதல் முறை போடப்பட்ட ராட்ஷத பம்பால் தற்போது நிலத்தடி நீர் குறைந்துள்ளது. இதனால் வருங்காலங்களில் விவசாயம் பாதிக்கும். ஆறுகளில் ராட்ஷத பம்ப் பொருத்தினால் சுமார் 10 கிலோ மீட்டர் துாரத்திற்கு வேறு எங்கும் பம்ப் அமைக்க கூடாது. ஆனால் விதியை மீறி அமைத்து வருகின்றார்கள்.

இந்நிலையில் மீண்டும் இப்பகுதியில் புதிதாக நீரேற்று நிலையம் அமைத்தால் இப்பகுதி மக்கள்  வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும். இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகள்தோறும் கருப்புக்கொடி ஏற்றி வைத்தோம். உடனடியாக பம்ப் அமைக்கும் பணியை நிறுத்தாவிட்டால், போராட்டம்செய்யப்படும்  என்றனர்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Mamata banerjee campaign for Priyanka | பிரியங்காவுக்காக வரும் மம்தா! I.N.D.I.A கூட்டணியின் ப்ளான்Salem leopard | இறந்து கிடக்கும் ஆடுகள்! சிறுத்தை பீதியில் மக்கள்! வனத்துறைக்கு கோரிக்கைChennai's Amirtha  : சென்னைஸ் அமிர்தாவின் 8வது பட்டமளிப்பு விழா 250 மாணவர்கள் தேர்ச்சி!Chandrababu naidu assembly :மந்திரங்கள் முழங்க ENTRY! விழுந்து வணங்கிய சந்திரபாபு! கட்டியணைத்த பவன்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
பாஜகவில் சாதி லாபியா? தமிழிசை, அண்ணாமலை, எஸ்.வி.சேகர் மீது ஏன் நடவடிக்கை இல்லை?- திருச்சி சூர்யா கேள்வி
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
NEET UG row: விஸ்வரூபம் எடுக்கும் நீட் தேர்வு விவகாரம்: சிபிஐ வசம் விசாரணை ஒப்படைப்பு- வழக்குப் பதிவு
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
அப்பளம் போல நொறுங்கிய கார்! ஆந்திராவைச் சேர்ந்த 2 பக்தர்கள் மரணம் - பெரும் சோகம்
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Cinema Headlines: இந்தியன் 2 ட்ரெய்லர்.. தி கோட் விஜய்யுடன் த்ரிஷா பகிர்ந்த செல்ஃபி.. சினிமா ரவுண்ட்-அப்!
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை  தேவை - நிர்மலா சீதாராமன்
Breaking News LIVE: கள்ளச்சாராய மரண வழக்கில் சி.பி.ஐ. விசாரணை தேவை - நிர்மலா சீதாராமன்
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
NEET PG 2024: நீட் தேர்வை கடைசி நேரத்தில் ஒத்திவைப்பதா? திருமண தேதியையே மாற்றினேன்- மன உளைச்சலில் மாணவர்கள்!
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Tenkasi: அச்சச்சோ! 8 வயது சிறுமியை கடித்து குதறிய 10 நாய்கள் - தென்காசியில் சோகம்
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Vijay 50th Birthday: நடிகர் விஜய்க்கு போட்டி போட்டு வாழ்த்து தெரிவித்த அரசியல் தலைவர்கள் - பின்னணி இதுதான்!
Embed widget