மேலும் அறிய

தமிழக மக்கள் கோயிலுக்கு வருவார்களே தவிர கோயிலை பற்றி பேசுபவர்களுக்கு உதவ மாட்டார்கள் - பாரத இந்து மகா சபா மாநில தலைவர்

ஆன்மீக மக்கள் கோயிலுக்கு வருவார்களே தவிர, ஆனால் கோயிலைப் பற்றி பேசுபவர்களுக்கு உதவி செய்பவர்களாக வரவில்லை. அந்த வளர்ச்சியை ஏற்படுத்தக்கூடிய யாத்திரையாக இது இருக்கும் என்று நினைக்கின்றேன்.

தமிழக மக்கள் கோயிலுக்கு வருவார்களே தவிர, கோயிலைப் பற்றி பேசுபவர்களுக்கு உதவ மாட்டார்கள் என அண்ணாமலையின் யாத்திரை குறித்து திருவாரூரில் அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பேட்டியளித்தார்.
 
திருவாரூர் மாவட்டம் கழனி வாசலில் ஆயிரம் ஆண்டுகள் பழமையான முருகன் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயம் சித்தர்கள் வழிபட்ட ஆலயமாக கருதப்படுகிறது. இந்த ஆலயத்தில் முருகனுக்கு அருகில் காளைமுட்டி சுவாமிகள் என்று அழைக்கப்படும் பாலையன் சுவாமிகளுக்கு சிலை வைக்கப்பட்டுள்ளது. இவர் இந்த ஊரில் இருந்து முருகனை வழிபட்டு வந்ததாகவும் காளை முட்டி உயிரிழந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த ஆலயத்தில் முருகனை விட பெரிய சிலை இவருக்கு அமைக்கப்பட்டுள்ளது தனிச்சிறப்பு. இந்த நிலையில் இந்த ஆலயம் சிதிலமடைந்து காணப்படுவதாகவும் இந்த ஆலயத்தின் இரண்டரை ஏக்கர் நிலத்தை தனிநபர் ஆக்கிரமித்து வைத்துள்ளதாகவும் கூறி கிராம மக்கள் சார்பில் அகில பாரத இந்து மகா சபா அமைப்பினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்திருந்தனர். இந்த நிலையில் இந்த கோவிலை பார்வையிட அகில பாரத இந்து மகா சபா மாநில தலைவர் பாலசுப்பிரமணியன் மற்றும் அந்த கட்சியின் ஆலய பாதுகாப்பு பிரிவு மாநிலத் தலைவர் நிரஞ்சன் ஆகியோர் வருகை தந்தனர்.

தமிழக மக்கள் கோயிலுக்கு வருவார்களே தவிர கோயிலை பற்றி பேசுபவர்களுக்கு உதவ மாட்டார்கள் - பாரத இந்து மகா சபா மாநில தலைவர்
 
அப்போது செய்தியாளர்களை சந்தித்த பாலசுப்பிரமணியன், ”அண்ணாமலை தனது,  என் மண் என் மக்கள் என் யாத்திரையின் மூலம் கட்சியை வளர்க்க நன்றாக முயற்சிக்கிறார். இந்த யாத்திரை சோம்பி இருந்த பாஜக தொண்டர்களுக்கு ஒரு சிலர்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. பெரிய மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று நம்பி அவர்கள் இறங்கி இருக்கிறார்கள். அது இறைவன் கையில் தான் இருக்கிறது. ஆனால் தமிழக மக்களைப் பற்றி நமக்கு தெரியும். எல்லாம் ஆன்மீக மக்கள் தான் கோவிலுக்கு வருவார்களே தவிர ஆனால் கோவிலைப் பற்றி பேசுபவர்களுக்கு உதவி செய்பவர்களாக வரவில்லை. அந்த வளர்ச்சியை ஏற்படுத்க்கூடிய யாத்திரையாக இது இருக்கும் என்று நினைக்கின்றேன்.
 
இந்து மக்களிடையே இந்து விழிப்புணர்வை பாதுகாப்பு உணர்வை ஒற்றுமையை ஏற்படுத்தும் வேலையை இந்து மகா சபா செய்து கொண்டிருக்கிறது. இது ஒரு பதிவு செய்யப்பட்ட அரசியல் கட்சி. நமது உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் கூட இந்து மகா சபாவில் தேசியத் துணைத் தலைவராக இருந்தவர். அகண்ட பாரதம் அமைக்க வேண்டும். இழந்த பகுதியை மீட்பதும் இருக்கின்ற பகுதியை பாதுகாப்பதும் இந்துவினுடைய கடமை என்று அகில பாரத இந்து மகா சபா வேலை செய்து கொண்டிருக்கிறது. போன தேர்தலில் பாரதிய ஜனதா கட்சிக்கு நாங்கள் ஆதரவு கொடுத்தோம் வரும் நாடாளுமன்ற தேர்தலில் என்ன நிலை என்பதை தேசிய செயற்குழு கூடி தான் முடிவு செய்யும்” என்று அவர் கூறினார். இந்த நிகழ்வின் போது அகில பாரத இந்து மகா சபா மாவட்ட தலைவர் பன்னீர்செல்வம் உள்ளிட்ட நிர்வாகிகள் உடன் இருந்தனர்.
 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Tiruppur : ”துப்பாக்கி வச்சி மிரட்டுறாங்க” ஜெய் பீம் பட பாணியில் போலீஸ்! கதறி அழும் குறவர் பெண்கள்!Avadi Murder CCTV: பட்டப்பகலில் வெட்டிக்கொலை!பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள்!ஆவடியில் நடந்த பயங்கரம்Chengalpattu News: ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்புChengalpattu News | ”நீதான கட்டிங் கேட்ட”நடுரோட்டில் நடந்த சண்டை ஊராட்சி அலுவலகத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Donald Trump: எக்கச்சக்கமா வரி, இந்தியாட்டா தான் நிறைய பணம் இருக்கே..அப்புறம் என்ன? - அதிபர் ட்ரம்ப் அதிரடி
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: கிரிக்கெட் ரசிகர்களுக்கு விருந்து..! இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் ட்ராபி போட்டி - மொத்தமா தெரிஞ்சிக்கலாமா..
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Champions Trophy 2025: சம்பவங்கள் லோடட்..! உடையப்போகும் சாதனைகள் - சாம்பியன்ஸ் ட்ராபி, காத்திருக்கும் கோலி, ரோகித்
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
Rasipalan (19-02-2025 ): கன்னிக்கு மகிழ்ச்சி; தனுசுக்கு ஆதாயம் - இன்றைய ராசிபலன்!
"உங்க அப்பன் வீட்டு காச கேட்கல" ஆர்ப்பாட்டத்தில் பொளந்து கட்டிய துணை முதல்வர் உதயநிதி!
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
18 மாவட்ட விவசாயிகளின் வங்கி கணக்கில் ஓரிரு நாட்களில் பணம் வரும் - குட் நியூஸ் சொன்ன முதலமைச்சர்
Minister Anbil Mahesh: ’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
’’உங்கள் அப்பன் வீட்டுப் பணமா? ஸ்டாலினை ஏமாற்ற பிறந்துதான் வரணும்’’- அமைச்சர் அன்பில் மகேஸ் ஆவேசம்!
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
உஷார்! தமிழகத்தில் காய்ச்சல் பாதிப்பு அதிகரிப்பா? செய்ய வேண்டியது என்ன?
Embed widget

We use cookies to improve your experience, analyze traffic, and personalize content. By clicking "Allow All Cookies", you agree to our use of cookies.