மேலும் அறிய

பயணிகளே ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள்... 3 ரயில்களின் சேவையில் மாற்றமாம்

நடுத்தர மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர்.

தஞ்சாவூர்: ரெயில்வே பாலங்களை புனரமைக்கும் பணிகள் நடந்து வருவதால் திருச்சி வழியாக செல்லும் 3 ரெயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

கரூர் – வீரராக்கியம் ரெயில் நிலையங்களுக்கு இடையே உள்ள ரெயில்வே பாலங்களைப் புனரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதனை ஒட்டி பாலக்காடு – திருச்சி எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை – சேலம் எக்ஸ்பிரஸ், சேலம் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ஆகிய 3 ரெயில்களின் சேவை 3 நாட்கள் பாதி அளவில் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பாலக்காடு டவுனில் இருந்து காலை 6.30 மணிக்கு புறப்பட வேண்டிய பாலக்காடு டவுன் – திருச்சி எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16844) நேற்று (வெள்ளிக்கிழமை) மற்றும் வரும் 10, 13-ஆம் தேதிகளில் கரூர் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். மேலும், பணிகள் முடிந்த பிறகு அந்த ரெயில் கரூரில் இருந்து திருச்சிக்கு முன்பதிவற்ற சிறப்பு ரெயிலாக இயக்கப்படும். அதேபோல், மயிலாடுதுறையில் இருந்து காலை 6.15 மணிக்கு புறப்படும்.

மயிலாடுதுறை – சேலம் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16811) வரும் 10, 13-ஆம் தேதிகளில் வீரராக்கியம் ரெயில் நிலையம் வரை மட்டுமே இயக்கப்படும். அந்த ரெயில் மயிலாடுதுறையில் இருந்து வீரராக்கியம் வரை இயக்கப்பட்டு, வீரராக்கியத்திலிருந்து சேலம் வரை இயக்கப்படாது. மேலும், சேலத்தில் இருந்து மதியம் 2.05 மணிக்கு புறப்படும் சேலம் – மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்: 16812) 10, 13-ஆம் தேதிகளில் சேலத்திற்கு பதிலாக கரூர் சந்திப்பில் இருந்து மதியம் 3.40 மணிக்கு புறப்படும்.

அந்த ரெயில் சேலத்திலிருந்து கரூர் வரை இயக்கப்படாது. அந்த நாட்களில் கரூரிலிருந்து புறப்பட்டு மயிலாடுதுறை வரை மட்டுமே இயக்கப்படும். எனவே, ரெயில் சேவைகளில் ஏற்படும் மாற்றங்களை கருத்தில் கொண்டு பயணிகள் ஒத்துழைப்பு வழங்குமாறு சேலம் ரெயில்வே கோட்ட அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ரயில் போக்குவரத்து சேவை என்பது மக்களால் அதிகம் விரும்பப்படும் போக்குவரத்து வசதி ஆகும். ரயில்களில் டிக்கெட் செலவு குறைவு என்பதாலும், மிக வேகமாகவும் பாதுகாப்பாகவும் பயணிக்க முடியும் என்பதால் ரயில் பயணத்தை விரும்புவோர் ஏராளாம். அதுவும் ஆன்லைன் மூலமாக டிக்கெட் புக்கிங் செய்து ரயில் பயணம் மேற்கொள்வோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதற்காக பயணிகள் சேவையில் ரயில்வே அமைச்சகம் தரம் மற்றும் பயணிகள் பாதுகாப்பு விஷயத்தில் அதிக முனைப்பு காட்டி வருகிறது. பட்ஜெட் விலையில் நீண்ட தூரம் பயணம் செய்ய முடியும்.

இரவு நேரப் பயணங்களில் படுக்கை வசதி இருப்பதால் சோர்வின்றி பயணிக்கலாம். பேருந்துகளில் கொண்டு செல்ல முடியாத அளவிற்கு அதிகமான உடமைகளை ரயிலில் எளிதாக எடுத்துச் செல்லலாம். பிற போக்குவரத்தை விட ரயில்கள் பாதுகாப்பான பயணத்தை வழங்குகின்றன. வேலைக்குச் செல்பவர்கள் மற்றும் குடும்பத்துடன் பயணம் செய்பவர்களுக்கு, பாதுகாப்பான மற்றும் சிக்கனமான பயண அனுபவத்தை ரயில்வே வழங்குகிறது. இட வசதி, கழிவறை மற்றும் படுக்கை விரிப்புகள் போன்ற வசதிகள் இருப்பதால், குடும்பத்துடன் பயணம் செய்ய இது சிறந்த தேர்வாக அமைகிறது.  இதுபோன்ற வசதிகளால் நடுத்தர மக்கள் தங்களின் குடும்பத்தினருடன் ரயில் பயணத்தையே அதிகம் விரும்புகின்றனர். இந்த ரயில் பயணத்தை மேலும் மேம்படுத்துவதற்காகதான் ரயில்வே நிர்வாகம் பல்வேறு புனரமைப்பை செய்து வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

லைவ் டிவி

ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

தஞ்சை மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள்... இறுதிப்பட்டியல் வெளியீடு
தஞ்சை மாவட்டத்தில் 19.51 லட்சம் வாக்காளர்கள்... இறுதிப்பட்டியல் வெளியீடு
எச்சரிக்கை விடுக்கும் கையும்... மிரள வைக்கும் போஸ்டரும்: அதிர்கிறது தஞ்சாவூர் அரசியல் களம்: என்ன விஷயம் தெரியுங்களா?
எச்சரிக்கை விடுக்கும் கையும்... மிரள வைக்கும் போஸ்டரும்: அதிர்கிறது தஞ்சாவூர் அரசியல் களம்: என்ன விஷயம் தெரியுங்களா?
புதுச்சேரி – கொல்லத்திற்கு தஞ்சை வழியாக ரயில் இயக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்
புதுச்சேரி – கொல்லத்திற்கு தஞ்சை வழியாக ரயில் இயக்க சுற்றுலாப்பயணிகள் வலியுறுத்தல்
ஸ்பீட் ரீல்ஸ் செய்து கிராண்ட்மாஸ்டர் சாதனை படைத்த தஞ்சை அஸ்வினி ஆனந்த்
ஸ்பீட் ரீல்ஸ் செய்து கிராண்ட்மாஸ்டர் சாதனை படைத்த தஞ்சை அஸ்வினி ஆனந்த்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Pudukkottai DMK | புதுக்கோட்டை தொகுதி யாருக்கு? திமுகவில் கடும் போட்டி.. ரேஸில் முந்தும் முத்துராஜா!
Accident News | கட்டுப்பாட்டை இழந்த வேன் கவிழ்ந்து விபத்து பதற வைக்கும் CCTV வீடியோ | Puducherry
TVK issue | ’’தளபதிக்கு விஷயம் போச்சு தலையை வெட்டி வீசிடுவேன்’’ தவெக நிர்வாகி ஆபாச பேச்சு | Vijay
Car Accident | தாறுமாறாக ஓடிய கார் குடிகாரனை வெளுத்த மக்கள் கமுதியில் பரபரப்பு | Ramanathapuram
Mexico El Mencho Killed | PABLO ESCOBAR 2.0 உலக மாஃபியாவின் Kingpin சுட்டுக்கொலை யார் இந்த El Mencho

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
ஓ.பன்னீர்செல்வம்: போடிநாயக்கனூரில் பரபரப்பு! அதிமுக மீட்பாரா? எதிர்காலம் என்ன? முக்கிய அறிவிப்பு!
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
விஜயின் அஜெண்டா இதுதான்... திமுகவை ஏன் எதிர்க்கிறார்? - திருமாவளவன் காட்டமான கேள்வி
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
UPSC: ஐஏஎஸ், ஐபிஎஸ் கனவு நனவாக கடைசி வாய்ப்பு! UPSC தேர்வுக்கான கால அவகாசம் நீட்டிப்பு: உடனே விண்ணப்பிங்க!
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
சத்தமில்லாமல் முடிந்த மூன்று உயிர்கள்! அதிர்ச்சியில் உறைந்த அக்கம்பக்கத்தினர்.. நடந்தது என்ன?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
Sani Peyarchi 2026 Date: வரப்போது சனிப்பெயர்ச்சி! எப்போது? எந்த ராசிக்கு போறாரு தெரியுமா?
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
கூட்டுறவுத் தேர்வு முடிவுகள் தாமதம்: மாணவர்களை வஞ்சிக்கும் திமுக அரசு! எடப்பாடி பழனிசாமி கண்டனம்
T20 World Cup 2026: இது தொடக்கம் இல்ல.. முடிவு..! ஓப்பனிங்கிலே குளோஸ் பண்ணும் அபிஷேக் - இஷான் ஜோடி!
T20 World Cup 2026: இது தொடக்கம் இல்ல.. முடிவு..! ஓப்பனிங்கிலே குளோஸ் பண்ணும் அபிஷேக் - இஷான் ஜோடி!
AIADMK Election Manifesto: ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
ஒவ்வொரு குடும்பத்திற்கும் ரூ.10,000 கருணை தொகை.. வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு மாதம் ரூ. 2,000- இபிஎஸ் அதிரடி
Embed widget