மேலும் அறிய

‘டெல்டாவில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்டம்?’ ஒ.என்.ஜி.சி நடவடிக்கையால் அச்சத்தில் விவசாயிகள்..!

’டெல்டா மக்களின் அச்சத்தை போக்குவிதமாக மன்னார்குடி மீத்தேன் திட்டம் உள்ளிட்ட அனைத்து எரிவாயு திட்டங்களையும் அடியோடு ரத்து செய்ய முதல்வர் ஸ்டாலின் நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தல்’

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட இயற்கை வேளாண் மண்டலங்களாக தமிழ்நாடு அரசு அறிவித்து, அங்கு எண்ணெய் கிணறுகள் உள்ளிட்ட விவசாயம் அல்லாத எந்த திட்டத்திற்கும் அனுமதி அளிக்கப்படமாட்டாது என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாடு அரசுக்கே தெரியாமல், டெல்டா மாவட்டங்களில் ஒ.என்.ஜி.சி நிறுவனத்தால், ஷேல் காஸ் ஆய்வு கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியிருக்கிறது.

திருவாரூர் மாவட்டத்தில் தோண்டப்பட்டுள்ள எண்ணெய் கிணறுகள்

திருவாரூர், அன்னவாநல்லூர், பெரியகுடி ஆகிய பகுதிகளில் மத்திய அரசின் ஒ.என்.ஜி.சி நிறுவனம் ஷேல் காஸ் ஆய்வு கிணறுகளை அமைத்துள்ளது. தமிழ்நாடு அரசின் ஒப்புதல் இன்றி எப்படி இந்த ஆய்வு கிணறுகளை ஒ.என்.ஜி.சி தோண்டியுள்ளது என்ற மிகப்பெரிய கேள்வி டெல்டா மாவட்ட மக்களிடையே எழுந்துள்ளது. இதன் மூலம் டெல்டா மாவட்டத்தில் மீண்டும் ஹைட்ரோகார்பன் திட்ட நடவடிக்கைகளை மத்திய பாஜக அரசு மேற்கொண்டு வருவது உறுதியாகியிருப்பதாக தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நிர்வாகி மன்னார்குடி சேதுராமன் தெரிவித்துள்ளார்.

மறைமுகமாக கிணறுகள் – அம்பலப்படுத்திய எரிசக்தி துறை அறிக்கை

இது தொடர்பாக பேசியுள்ள சேதுராமன், 2024 – 25 எரிசக்தி இயக்க அறிக்கையில் திருவாரூர் மாவட்டத்தி எரிவாயு கிணறுகள் தோண்டப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது என்பதை சுட்டிக்காட்டியுள்ளார். இதன் மூலம் ஒ.என்.ஜி.சி நிறுவன, நீரியல் விரிசல் முறையில் மட்டும் நிறைவேற்ற சாத்தியமுள்ள ஷேல் ஆய்வு கிணறுகளை மறைமுகமாக தோண்டியிருப்பது வெட்ட வெளிச்சமாகியிருக்கிறது என்றும் சேதுராமன் பகிரங்கப்படுத்தியிருக்கிறார்.

சேதுராமன்
சேதுராமன்

முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் - சேதுராமன்

இது தமிழ்நாடு அரசின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல சட்டத்திற்கு முற்றிலும் புறம்பானது என்றும்  கடந்த 2023ஆம் ஆண்டில் வடசேரி பகுதியில் அறிவிக்கப்பட்ட நிலக்கரி சுரங்கம் திட்டத்தை ரத்து செய்ய உடனடியாக நடவடிக்கை எடுத்தது போல, இந்த விவகாரத்திலும் உடனடியாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலையிட்டு, டெல்டா மாவட்ட மக்களின் அச்சத்தை போக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஒ.என்.ஜி.சி நடவடிக்கைகள் குறித்தும் விதிகளுக்கு முரணாக மூன்று ஆய்வு கிணறுகள் தோண்டப்பட்டிருப்பது பற்றியும் உயர்மட்ட வல்லுநர் குழு அமைத்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

ரத்து செய்ய நடவடிக்கை எடுப்பாரா முதல்வர் ?

பாதுகாக்கபட்ட வேளாண் மண்டலத்தில் மத்திய பாஜக அரசு செயல்படுத்த முயலும் மன்னார்குடி மீத்தேன் திட்டம், புதுக்கோட்டை நெடுவாசல் உள்ளிட்ட மூன்று பகுதிகளில் கொண்டுவரப்பப்பட்டுள்ள எரிவாயு திட்டங்கள் அனைத்தையும் முற்றிலும் ரத்து செய்ய முதல்வர் மு.க.ஸ்டாலின் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டெல்டா மாவட்ட மக்கள் அவருக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.

I am a seasoned journalist with over 12 years of experience across the visual and digital media landscape. Throughout my career, I have taken up diverse editorial responsibilities—from content writing and ticker management to heading desk and assignment operations. My on-ground reporting includes in-depth coverage of political, cultural, and social affairs. I have had the opportunity to interview several influential figures from politics, arts, and public life. Known for delivering impactful exclusives, I was one of the first to break major stories like the TNPSC scam, cementing my commitment to responsible and fearless journalism.

Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement

தலைப்பு செய்திகள்

”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kanchi Ekambareswarar Temple Kumbabishekam | காஞ்சி ஏகாம்பரநாதர் கோயில்மகா கும்பாபிஷேக விழா!
KN NEHRU ED | ’’உடனே FIR போடுங்க!’’நெருக்கும் அமலாக்கத்துறைசிக்கலில் K.N.நேரு?
பல்லத்தில் கவிழ்ந்த கார் ஒரே குடும்பத்தில் மூவர் பலிபதற வைக்கும் காட்சி | Villupuram Accident News
“என் கல்யாணம் நின்னுருச்சு” இது தான் காரணம்? ஸ்மிருதி மந்தனா பகீர் பதிவு | Palash Muchchal Smriti Mandhana Marriage Called Off
Sabareesan Meet Rahul | DEAL-ஐ முடித்த சபரீசன்! OK சொன்ன ராகுல்.. பிரவீன் சக்ரவர்த்தி அதிர்ச்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
”பாஜகவிற்கு அஞ்ச மாட்டேன் ; சட்டப்படி எதிர்கொள்வேன்’ கே.என்.நேரு பரபரப்பு அறிக்கை..!
Senthil Balaji case: செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
செந்தில் பாலாஜி ஹேப்பி.! ED வழக்கில் திடீர் திருப்பம்- என்ன தெரியுமா.?
EPS ADMK: கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
கம்பி எண்ணப் போவது உறுதி.! திமுக-வின் ஊழல் கறைவேட்டிகள் யாராக இருந்தாலும்- அடித்து சொல்லும் இபிஎஸ்
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Actor Dileep Release: நடிகை பாலியல் வன்கொடுமை வழக்கு: பிரபல மலையாள நடிகர் திலீப் விடுதலை - நீதிமன்றம் உத்தரவு
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
Vande Mataram: வந்தே மாதரத்தில் செய்த மாற்றங்கள்.. எதற்காக? காரணம் என்ன? இந்துக்களுக்கு வஞ்சகமா?
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
குஷியோ குஷி.! 15 லட்சம் பேருக்கு ரூ.1000... பொங்கல் பரிசு ரூ.5000.? அள்ளிக்கொடுக்க ரெடியாகுது திமுக அரசு
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Toyota Upcoming Car: ரெண்டு மாசத்துக்கு ஒன்னு - டக்கரா 4 எஸ்யுவி, ஹைப்ரிட், EV - இந்தியாவிற்கான டொயோட்டாவின் ப்ளான்
Ration Card: 55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
55ஆயிரம் ரேஷன் அட்டைகள் தயார்.! எப்போது வழங்கப்படும்.? வெளியான அரசின் சூப்பர் தகவல்
Embed widget