மேலும் அறிய

தஞ்சை மருத்துவ கல்லூரியில் ஒரு கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பு

’’நிமிடத்துக்கு 260 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய நிலையத்தில் ஆக்ஸிஜன் உற்பத்தி கலன், கட்டடம், மின் இணைப்பு 2041 ஆம் ஆண்டு வரையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என ஒரு கோடி செலவில் அமைப்பு’’

தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு இக்கல்லூரியில் 1980 ஆம் ஆண்டில் படித்த முன்னாள்  மாணவர்கள் இணைந்து ஒரு கோடி மதிப்பிலான ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையத்தை அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர். தஞ்சாவூர் மாவட்டத்தில் 12 ஆம் தேதி வரை 115 நபர்களுக்கு புதியதாக கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 69 பேர் சிகிச்சை பெற்று வீடு திரும்பியுள்ளனர். இதில் ஒருவர் இறந்துள்ளார். இதுவரை 71,896 நபர்களுக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது.  இதில் 899 பேர் இறந்துள்ளனர். இந்நிலையில் மாபெரும் கொரோனா தடுப்பு ஊசி முகாம் தஞ்சை மாவட்டத்தில் நடைபெற்றது. இம்முகாமினை ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் நாயர், தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலீவர், சுகாதாரத்துறை இணை இயக்குனர் ரமேஷ்குமார் ஆகியோர் தஞ்சாவூர் மற்றும் சுற்றுப்புறங்களில் நடைபெறும் முகாமினை பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.


தஞ்சை மருத்துவ கல்லூரியில் ஒரு கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பு

தஞ்சாவூர் மாவட்டத்தில் 1328 இடங்களில் 1,30,000 நபர்களுக்கு கொரோனா தடுப்பு ஊசி போடுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. இதில் 1328 முகாமில், முதல் தவணை ஊசி 91,402 நபர்களுக்கும், இரண்டாம் தவணை ஊசி 25,500 நபர்கள் என செலுத்தப்பட்டது. இம்முகாமில் 110 கர்ப்பினிகளுக்கும் 235 பாலூட்டும் தாய்மார்கள் உள்பட மொத்தம் 1,16,902 நபர்களுக்கு தடுப்பு ஊசி போடப்பட்டுள்ளது.  தமிழக அளவில் 4 ஆவது இடத்தை தடுப்பு ஊசி செலுத்துவதில் தஞ்சை மாவட்டம் பெற்றுள்ளது. இந்நிலையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா இரண்டாவது அலையின் போது ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் மிகுந்த நெருக்கடி ஏற்பட்டது. எனவே, மூன்றாவது அலை வருவதற்குள்ளாக போதுமான அளவுக்கு ஆக்ஸிஜன் இருப்பு வைத்துக் கொள்வதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. தற்போது தஞ்சாவூர் மாவட்டத்தில் அனைவரும் கொரோனா தடுப்பு ஊசி  செலுத்திக்கொள்ளும் வகையில், தினந்தோறும் பல்வேறு இடங்களில் தடுப்பு போடப்பட்டு வருகின்றது.


தஞ்சை மருத்துவ கல்லூரியில் ஒரு கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பு

ஏற்கெனவே லயன்ஸ் சங்கங்கள் சார்பில் ஆக்ஸிஜன் உற்பத்தி நிலையம் அமைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, மூன்றாவது கொரோனா தொற்று அலை வந்தால், அதனை சமாளிக்கும் வகையில், தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 1980 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் படித்த முன்னாள் மாணவர்கள் இணைந்து இம்மருத்துவமனைக்கு பயனளிக்கும் விதமாக ஒரு கோடி மதிப்பிலான காற்றிலிருந்து செலவில்லாமல் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடிய நிலையத்தை அமைத்து, பொதுமக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தனர். இந்த  நிலையத்தை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் திறந்து வைத்து பார்வையிட்டார். இந்நிகழ்ச்சியில் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் ரவிக்குமார், முன்னாள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தஞ்சை மருத்துவ கல்லூரியில் ஒரு கோடி மதிப்புள்ள ஆக்சிஜன் உற்பத்தி நிலையம் அமைப்பு

இது குறித்து முன்னாள் மருத்துவ மாணவர்கள் கூறுகையில், 1980 ஆண்டு தஞ்சாவூர் மருத்துவக்கல்லுாரியில் எம்பிபிஎஸ் படித்த மாணவர்கள், உலகம் முழுவதும் மருத்துவ வல்லுனராக சேவையாற்றி வருகின்றனர். தங்களுக்கு கல்வி கொடையளித்த மருத்துவக்கல்லுாரிக்கும், 50 ஆண்டிற்கு மேலான மருத்துவ சேவையையும்,கொரோனா இரண்டாவது அலையின் போது சிகிச்சையளித்த மருத்துவர்களின் மகத்தான சேவையையும் பாராட்டும் விதமாக, செலவில்லா ஆக்ஸீசன் உற்பத்தி செய்யும் நிலையத்தை வழங்கியுள்ளோம். இந்நிலையம்  நிமிடத்துக்கு 260 லிட்டர் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்யக்கூடியது. ஆக்ஸிஜன் உற்பத்தி கலன், கட்டடம், மின் இணைப்பு 2041 ஆம் ஆண்டு வரையிலான பராமரிப்பு ஒப்பந்தம் என ஒரு கோடி செலவில் இந்நிலையம் அமைக்கப்பட்டுள்ளது என முன்னாள் மாணவர்கள் தெரிவித்தனர்.

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola
Advertisement
corona
corona in india
470
Active
29033
Recovered
165
Deaths
Last Updated: Sat 19 July, 2025 at 10:52 am | Data Source: MoHFW/ABP Live Desk

தலைப்பு செய்திகள்

Trump Vs Musk: “ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
“ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Sivagangai Ajith Attack Video | அடித்தே கொன்ற POLICE! நடுங்க வைக்கும் பகீர் காட்சி வெளியான வீடியோ
Actor KPY Bala | “அண்ணன் நான் இருக்கேமா” வீடு கட்டிக்கொடுத்த KPY பாலா! Surprise கொடுத்த சிறுமி
”அஜித்குமார் LOCKUP DEATH!வாய் திறங்க ஸ்டாலின்” கொந்தளித்த VIJAY! Sivagangai Custodial Death
”மனசு நொறுங்கி போச்சு SK-விடம் மன்னிப்பு கேட்டேன்” நடிகர் அமீர்கான் உருக்கம் | Amir Khan Apology to Sivakarthikeyan
காதலித்து ஏமாற்றிய யஷ் பல பெண்களுடன் தொடர்பு வசமாக சிக்கிய RCB வீரர் Yash Dayal

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Trump Vs Musk: “ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
“ரொம்ப தூண்டுதலா இருக்கு, ஆனா இப்போதைக்கு அடக்கி வாசிக்கறேன்“ - சாமர்த்தியமாக சமாளித்த மஸ்க்
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
IND vs ENG 2nd Test: 58 வருஷ கறை..! எட்ஜ்பாஸ்டனில் இன்று 2வது டெஸ்ட் தொடக்கம்! இங்கிலாந்தை வீழ்த்துமா இந்தியா?
Trump Warns Musk: “தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
“தம்பி, நீ கடைய காலி செஞ்சு தென் ஆப்பிரிக்காவுக்கே திரும்பி போக வேண்டியிருக்கும்“ - மஸ்கை எச்சரித்த ட்ரம்ப்
Ajithkumar Death - CBI: அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
அஜித்குமார் மரண வழக்கு சிபிஐ-க்கு மாற்றம்; காவல்துறையினருக்கு முதலமைச்சர் கடும் எச்சரிக்கை
"கொலை செஞ்சது நீங்க.. "SORRY"தான் உங்க பதிலா?" முதல்வரை காட்டமாக விமர்சித்த இபிஎஸ்
Sivaganga Ajithkumar Death: “நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
“நியாயப்படுத்த முடியாத தவறு“ அஜித்குமார் குடும்பத்திடம் பேசிய முதல்வர் - உதவிகள் செய்வதாக உறுதி
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
அஜித் குமார் மரணம்! ”போலீஸ் என்கவுண்டர் செய்யப்படுவார்களா?“ காவல்துறையை வச்சு செய்த திமுக எம்.எல்.ஏ
Israel Atrocity: ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
ஒருபுறம் அமைதிப் பேச்சுவார்த்தை, மறுபுறம் குண்டு மழை; இஸ்ரேலின் கள்ள ஆட்டம் - என்னதான் நடக்குது.?
Embed widget