மேலும் அறிய

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு பிறகு ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை - ஓஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் மாறன்

தமிழ்நாடில் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு பிறகு ஒருஏக்கர் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை என ஓஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் மாறன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு அரசால் அரசிதழில் 2020 பிப்ரவரி 21 அன்று வெளியிடப்பட்ட சட்டம் ‘தமிழ்நாடு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல மேம்பாட்டுச் சட்டம்-2020’. காவிரி டெல்டா பகுதியில், விவசாய நிலங்களைப் பாதுகாத்து மேம்படுத்துவதற்கான சட்டம் என்று இந்தச் சட்டம் கொண்டுவரப்பட்டதற்கான நோக்கம் மிகத் தெளிவாக அதன் முதல் வரியிலேயே கூறப்பட்டுள்ளது. காவிரி டெல்டா பகுதியில் சுமார் 35 ஆண்டுகளுக்கும் மேலாக கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயு எடுக்கும் பணிகள் ஓஎன்ஜிசி மூலமாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு பிறகு ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை - ஓஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் மாறன்

மேலும், எந்த விதமான புதிய வகை ஹைட்ரோகார்பன் எடுக்கும் முயற்சிகள் இல்லாதபோதிலும், மாசு மற்றும் சுற்றுச்சூழல் மேம்பாட்டு விஷயங்களில் மேம்பட்ட தொழில்நுட்பங்களை மேலும் நடைமுறைப்படுத்தியபடி ஓஎன்ஜிசியின் பணிகள் மேற்கொண்டுள்ளது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்ட மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிவுறுத்தலின்படி ஓஎன்ஜிசி சிஎஸ்ஆர் நிதி பங்களிப்பில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 10 ரூபாய் செலுத்தினால் தானியங்கி இயந்திரத்தில் இருந்து மீண்டும் மஞ்சள் துணிப்பை வழங்கும் வகையில் 1,40,000 ரூபாய் செலவில் அமைக்கப்பட்ட விழிப்புணர்வு இயந்திரத்தை மாவட்ட ஆட்சியர் ஏ.பி.மகாபாரதி  திறந்து வைத்து விற்பனையை தொடங்கி வைத்தார். 

Gold, Silver Price : அதிரடியாக உயர்ந்த தங்கத்தின் விலை.. சவரனுக்கு ரூ. 45,000 கடந்து விற்பனை.. இன்றைய விலை நிலவரம் இதுதான்..


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு பிறகு ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை - ஓஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் மாறன்

மாவட்ட வருவாய் அலுவலர் முருகதாஸ், மாவட்ட சுற்றுச்சூழல் அலுவலர் தமிழ்ஒளி உள்ளிட்டோர் பங்கேற்ற இந்நிகழ்ச்சியில், ஒஎன்ஜிசி காவேரி அசெட் செயல் இயக்குநர் அனுராக், உற்பத்தி பிரிவு தலைவர் பி.என்.மாறன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அதனைத் செய்தியாளர்களிடம் பேசிய ஓஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் மாறன் கூறுகையில், "காவிரி டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்ட பின்னர் ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை. கடந்த 3 ஆண்டுகளாக துரப்பன பணி முற்றிலுமாக நிறுத்தப்பட்டுவிட்டது. இருக்கின்ற எண்ணெய் கிணறுகளில் மட்டும் வருகின்ற எண்ணெய்யை எடுத்து வருகிறோம். அதுவும், வேகமாக குறைந்து வருகிறது.

India Corona Spike: இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் கொரோனா தொற்றால் 21 பேர் உயிரிழப்பு.. 37,000-ஐ கடந்த பாதிப்பு..


பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டல அறிவிப்புக்கு பிறகு ஒரு ஏக்கர் விவசாய நிலம் கூட கையகப்படுத்தப்படவில்லை - ஓஎன்ஜிசி உற்பத்தி பிரிவு தலைவர் மாறன்

புதிய கிணறுகள் அமைக்காத காரணத்தால் எண்ணெய் உற்பத்தி விரைவாக குறைந்து வருகிறது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு 1126 டன் இருந்த எண்ணெய் உற்பத்தி தற்போது 530 டன்னாக குறைந்துவிட்டது. இது மேலும் குறைந்து 300 டன் அளவுக்கு சென்றால் எண்ணெய் உற்பத்தி இங்கு இருக்க வேண்டுமா? என்று சிந்திக்க வேண்டிய நிலை உண்டாகும்.  எரிவாயு உற்பத்தி தொடர்ந்து இருப்பதால் எங்களது பணி தொடர்ந்து வருகிறது. உற்பத்தி குறைந்த கிணறுகளில் மீண்டும் பணி செய்வதற்கு முன்பு மாவட்ட நிர்வாகம், சுற்றுச்சூழல் துறை மற்றும் காவல்துறைக்கு தகவல் தெரிவித்த பின்னரே பணிகள் மேற்கொள்ளப்படுகிறது" என தெரிவித்தார்.

MI vs DC IPL 2023: தொடர் தாக்குதலில் மும்பை.. கடந்த சீசனில் வலுப்பெற்ற டெல்லி.. ஹெட்-டு-ஹெட் ரெக்கார்ட்ஸ்..!


மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடியூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சிEB Office Alcohol | அலுவலகத்தில் மது அருந்திய மின்சார வாரிய ஊழியர்கள்!’’ஏய்..டம்ளர் எடுத்துட்டு வா’’

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Breaking News LIVE: ஜார்கண்ட் முன்னாள் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு ஜாமின்
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Kalki 2898 AD 2: பாராட்டுக்களைப் பெறும் முதல் பாகம்... பிரபாஸின் கல்கி 2 ஆம் பாகம் எப்போது தெரியுமா?
Seeman: “தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
“தம்பி விஜய் ஏன் என்னை மாதிரி பேச வேண்டும்.. அவருக்கு இன்னும் ஒரு படம் இருக்கு” - கொந்தளித்த சீமான்!
Embed widget